வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தமிழவேள் நற்பணி மன்றம் "உலகமும் நாமும்" என்ற தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 120வது பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்மொழி விழாவை ஒட்டி இடம்பெறும் இவ்விழாவிற்கு சமூக இலக்கிய இதழ் செம்மொழியும் 'லீட்ஸ்' குழுமமும் ஆதரவளிக்கின்றன.
நாளை காலை 10 மணிக்கு 'ஸூம்' இணைய ஊடகத்தின் வழி இடம்பெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் துணைத் தலைவருமான முனைவர் திரு ஆர். தினகரன்.
விழாவில் சிறப்பு பேச்சாளர்களாக வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் செயலாளருமான வாஷிங்டன் சிவா, பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே. மயூரி, சக்தி நஞ்சுண்டன், முனைவர் பட்ட ஆய்வாளர் திரு ஜெ.கார்த்திக் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
வெவ்வேறு நாடுகளில் இருந்து அனைவரும் இணையத்தின் வழி இணைந்து தலைப்பை ஒட்டி கலந்துரையாடவுள்ளனர்.
Zoom Meeting ID: 814 3082 6474; Passcode: 989076
செய்தி: சபிதா ஜெயகுமார்

