தங்குவிடுதியில் நோன்புத் துறப்பு, கொண்டாட்டம்

தங்குவிடுதியில் நோன்புத் துறப்பு, கொண்டாட்டம்

2 mins read
85313bf6-fda6-413d-8765-12feb01a6ece
-

கரு­ணா­நிதி துர்கா

எஸ்11 வெளி­நாட்டு ஊழி­யர்

தங்­குவிடு­தி­யின் நிர்­வா­கத்­தின் ஏற்­பாட்­டில் 'இஃப்தார்' எனும் நோன்­புத் துறப்பு நிகழ்ச்சி பொங்­கோ­லில் அமைந்­துள்ள வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­தி­யில் நடை­பெற்­றது.

நேற்று முன்­தி­னம் நடத்­தப்­பட்ட இந்­நி­கழ்ச்­சி­யில் அவ்­வி­டு­தி­யில் தங்­கி­யி­ருக்­கும் முஸ்­லிம் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஒன்­றி­ணைந்து நோன்­புத் துறந்­த­னர்.

இந்­நி­கழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ராக மனி­த­வள அமைச்­ச­ரும் வர்த்­தக தொழில் இரண்­டாம் அமைச்­ச­ரு­மான டாக்­டர் டான் சீ லெங் கலந்­து­கொண்­டார்.

கூடி­யி­ருந்த வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் கடின உழைப்­பை­யும் அர்ப்­ப­ணிப்­பை­யும் பாராட்­டி­ய­தோடு அவர்­கள் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் இருந்து வள­மான எதிர்­கா­லத்­தைக் காண்­பார்­கள் என நம்­பிக்கை தெரி­வித்­தார் டாக்­டர் டான்.

"அனைத்து ஊழி­யர்­களும் தங்­க­ளது வேலை­யி­டப் பாது­காப்­பைக் கருத்­தில் கொண்டு நடப்­பார்­கள் என நம்­பு­கி­றேன். அவர்­க­ளின் செழிப்­பான வாழ்­விற்­கா­கப் பல திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­திய சமூக அமைப்­பு­க­ளுக்கு எனது நன்­றி­யும் பாராட்­டு­களும்," என்­றார் அமைச்­சர் டான்.

கிட்­டத்­தட்ட 60 முஸ்­லிம் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இந்த இஃப்தார் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

நோன்பு இருப்­ப­தன் நிறை­வைக் குறிக்­கும் வகை­யி­லும் நோன்­புப் பெரு­நாளை உற்­சா­கத்­து­டன் வர­வேற்­கும் வகை­யி­லும் இந்த நிகழ்ச்சி அமைந்­தது.

கிட்­டத்­தட்ட 10 ஆண்­டு­களுக்கு முன்­னர் கட்­டப்­பட்ட இந்த வெளி­நாட்டு ஊழி­யர் தங்குவிடு­யில் அனைத்து பண்­டி­கை­க­ளை­யும் இவ்­வாறு சிறப்­பாகக் கொண்­டாட வேண்­டும் என்ற எண்­ணம் கொண்­டுள்­ள­தாக நிர்­வா­கம் தெரி­வித்­தது.

நிகழ்ச்­சி­கள் நடத்த முடி­ய­வில்லை என்­றா­லும் ஊழி­யர்­களுக்­குச் சில அன்­ப­ளிப்­பு­களை வழங்கி வரு­கிறது விடுதி நிர்­வா­கம்.

"கொவிட் கட்­டுப்­பா­டு­கள் நிறைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இந்த ஆண்டு நோன்பு பெரு­நாளை எந்த கட்டுப்­பா­டு­க­ளு­மின்றி நண்­பர்­க­ளு­டன் இணைந்து கொண்­டாட முடி­வதை எண்ணி மகிழ்ச்சி கொள்­கி­றேன்," என்று 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேல் சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்றி வரும் திரு மொல்லா மஃபூஜர், 29, கூறி­னார்.

"பங்­க­ளா­தே­ஷில் இருக்­கும் எனது குடும்­பத்­தி­ன­ரி­ட­மி­ருந்து தொலை­தூ­ரம் சிங்­கப்­பூ­ருக்கு வந்து நோன்புப் பெரு­நாளை கொண்­டா­டு­வ­தில் ஒரு சிறிய வருத்­தம் இருந்­தா­லும் இங்­கே­யும் என் நண்­பர்­க­ளு­டன் இணைந்து இந்தப் பண்­டிகைக் காலத்தை என்­னால் உல்­லா­ச­மாக கழிக்க முடி­கிறது," என்று பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து வந்­தி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­ய­ரான திரு அல் அமின், 41, கூறி­னார்.

"கொவிட் கிரு­மித்­தொற்று காலத்­தில் கூட ஊழி­யர்­க­ளுக்­காக நாங்­கள் இணை­யம் வழி நிகழ்ச்­சி­கள் நடத்தி வந்­தோம். இன்று நேரி­லேயே நோன்­புப் பெரு­நாளை அனை­வ­ரும் இணைந்து கொண்­டா­டும் ஏற்­பாடு­களை செய்­த­தில் மிக­வும் மகிழ்ச்சி கொள்­கி­றோம்," என்று எஸ்11யின் நிர்­வாக இயக்­கு­நர், திரு ஜோன­தன் சியே கூறி­னார்.