ஆ. விஷ்ணு வர்தினி
செய்திகள் எழுதவும் துல்லியமாக மொழிபெயர்க்கவும் இளையர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் ஏற்பாடாகியுள்ள தமிழ் முரசின் 'முரசு மொழிபெயர்ப்பு' பயிலரங்கு வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 29) நடைபெறுகிறது. தமிழ் முரசின் ஆசிரியர்கள், செய்தியாளர்க் குழுவைச் சந்திக்கவும் இளையர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
இப்பயிலரங்கு தொடர்பு தகவல் அமைச்சின் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் ஆதரவில் தமிழ்மொழி விழாவின் அங்கமாக ஏற்பாடாகிஉள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தோ பாயோ நார்த்தில் அமைந்துள்ள எஸ்பிஎச் மீடியா வளாகத்தில் பயிலரங்கு நடைபெறுகிறது.
பயிலரங்கில் பங்கெடுப்பவர்களுக்கு மொழிபெயர்ப்பு, செய்தி ஆகியவற்றின் பல்வேறு கூறுகள் அறிமுகப்படுத்தப்படும்.
நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, தனிப்பட்ட வழிகாட்டுதல் பெறுவதற்கும் இளையர்களுக்கு இப்பயிலரங்கு வாய்ப்பளிக்கும். தமிழ் முரசின் அலுவலகத்தில் செய்தித்தாளின் பின்னணியில் உள்ள இயக்கங்
களையும் பங்கேற்பாளர்கள் நேரடியாகக் காணலாம்.
பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக்கழகம், தொடக்கக் கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களும் தேசிய சேவையாளர்களும் 35க்கும் உட்பட்ட இளையர்களும் பயிலரங்கில் கலந்துகொள்ளலாம்.
பதிவு செய்ய tinyurl.com/tmtranslation படிவத்தை நாடலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம்.

