குற்றம் உணர்ந்து, திருந்தி, முத்திரை பதித்த மலேசியத் தமிழர்

குற்றம் உணர்ந்து, திருந்தி, முத்திரை பதித்த மலேசியத் தமிழர்

3 mins read
0da55261-ee9a-4ff5-9601-8f871a8d1de2
-
multi-img1 of 2

தவ­றான நட்பு வட்­டா­ரம் வாழ்க்­கையை எப்­ப­டிக் கொண்­டு­போ­கும், நல்ல வழி­காட்­டி­கள் இருந்­தால் வாழ்க்கை எப்­படி மாறும் என்­ப­தற்கு மற்­றொரு எடுத்­துக்­காட்டு 45 வயது திரு. ஜென்­கேஸ்­வ­ரன் முனி­யன்.

மலே­சி­யா­வின் சிலாங்­கூ­ர் மாநிலத்தைச் சேர்ந்த ஜென்­கேஸ்­வ­ரன் தனது 26 வய­தில் முன்­கோ­பத்­தால் அடி­த­டி­யில் ஈடு­பட்­டுச் சிறைக்­குச் சென்­றார்.

குற்­றத்தை உணர்ந்து தமக்கு பிடித்த சது­ரங்க விளை­யாட்­டில் சாதிக்க நினைத்த அவர், 2013ஆம் ஆண்டு தென்­கி­ழக்கு ஆசிய விளை­யாட்­டில் மலே­சி­யா­வுக்கு வெண்­க­லம் வென்­று­

தந்­தார்.

ஜென்­கேஸ்­வ­ர­னின் வாழ்க்­கைக் கதை குண்­டர் கும்­ப­லில் இருந்து வெளி­யேற பல மலே­சி­யர்­களை ஊக்­கு­விக்­கும் என்ற நோக்­கத்­தில் அவ­ரின் கதையை ஆவ­ணப்­ப­ட­மாக எடுத்­துள்­ளார் 22 வயது பல்­க­லைக்­க­ழக மாண­வர் சனத்­கு­மார் கணே­சன்.

'Wanted: Shades of Life' என்ற தலைப்­பில் மூன்­றா­வது பாக­மாக ஜென்­கேஸ்­வ­ர­னின் கதையை ஆவ­ணப்­ப­ட­மாக எடுத்­துள்­ளார் சனத்­கு­மார்.

இந்த 70 நிமிட ஆவணப்படத்தைப் பள்ளி மாண­வர்­க­ளுக்­கும் சமூ­கத்­தில் உள்ள எல்லா வகை மக்­க­ளுக்­கும் கொண்­டு சேர்க்க படக்­கு­ழு­வி­னர் தற்­போது நட­வ­டிக்­கை­கள் எடுத்து வரு­வ­தாக சனத்­கு­மார் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

"நட்பு வட்­டா­ரம் சரி­யில்­லாத கார­ணத்­தால் 16 வயது முதலே சண்­டை­களில் ஈடு­பட்­டேன், அத­னால் உயர்­நி­லைப்­பள்ளி கூட முடிக்­க­வில்லை. சரி­யான படிப்பு இல்­லா­த­தால் சரி­யான வேலை இல்லை, வேலை­யி­டத்­தில் சண்­டை­யிட்­ட­தால் 26 வய­தில் சிறைக்­குச் சென்­றேன்" என்­றார் ஜென்­கேஸ்­வ­ரன்.

"சிறையில் இருந்த இரண்டு வாரங்கள் கொடுமையாக இருந்தது. தூக்கம், உணவு என அனைத்திலும் சிக்கல். சிறையை விட்டு வந்தவுடன் மீண்டும் வேலையில் சேர முடிவெடுத்தேன்"

வேலையிடத்தில் தன்னை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் கிடைத்ததாகவும் அப்போதுதான் தனக்குள் இருந்த சதுரங்க விளையாட்டு மீதான ஆர்வம் மீண்டும் எட்டிப்பார்த்ததாகவும் ஜென்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

10 வயதில் விளையாடிய சதுரங்க விளையாட்டை மீண்டும் 30 வயதில் விளையாடத் தொடங்கியதாக அவர் கூறினார்.

2010ஆம் ஆண்டு இரண்டு பயிற்றுவிப்பாளர்களின் உதவியுடன் பயிற்சியைத் தொடங்கிய ஜென்கேஸ்வரன் மெல்ல மெல்ல போட்டித் தொடர்களில் விளையாடினார்.

இறு­தி­யில் 2013ஆம் ஆண்டு மலே­சி­யா­வின் தென்­கி­ழக்கு ஆசிய விளை­யாட்டு அணி­யில் இடம்­பி­டித்து சிறப்­பாக விளை­யாடி வெண்­க­லப் பதக்­கம் வென்­றார். தம்­மி­டம் உள்ள திறமை மற்­ற­வர்­க­ளுக்­கும் உதவ வேண்­டும் என்­ப­தற்­காக இப்­போது 500க்கும் மேற்­பட்ட பள்­ளி­களில் சது­ரங்க விளை­யாட்டு பயிற்சி அளித்து வரு­கி­றார் ஜென்­கே‌ஷ்.

அது­மட்­டு­மில்­லா­மல், அனைத்­து­லக அள­வில் சது­ரங்க விளை­யாட்டு நடு­வ­ர­க­வும் போட்டி ஏற்­பாட்­டா­ளா­ரா­க­வும் முன்­னேற தொடர்ந்து முயற்சி எடுத்து வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

"ஜென்­கே­‌‌ஷ்­வ­ர­னி­டம் சது­ரங்க விளை­யாட்­டுக் கற்­றுக்­கொண்­ட­வர்­களில் நானும் ஒரு­வன், எனக்கு அவர் முன்­மா­தி­ரி­யாக இருக்­கி­றார்.எனக்கு ஆவ­ணப்­ப­டங்­கள் எடுப்­ப­தில் ஆர்­வம் அதி­கம். எளிய மக்­க­ளின் சாத­னை­க­ளைச் சமூ­கத்­திற்கு கொண்டு செல்­வது எனது இலக்கு" என்­றார் சனத்­கு­மார்.

கன­டா­வில் திரைப்­ப­டங்­கள் எடுப்­பது குறித்து படித்து வரும் சனத்­கு­மார், இந்த ஆவ­ணப்­ப­டம் அமெ­ரிக்கா, பிரான்ஸ் உள்­ளிட்ட நாடு­களில் நடந்த திரைப்­பட விழாக்­க­ளி­லும் சில விரு­து­களை வென்­றுள்­ள­தா­கக் கூறி­னார். மலே­சி­யா­வில் இந்த ஆவ­ணப்­ப­டத்­திற்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ள­தா­க­வும் விரை­வில் பெரிய அள­வில் மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்­க­வுள்­ள­தா­க­வும் சனத்­கு­மார் தெரி­வித்­தார்.