சினைப்பை நீர்க்கட்டிகளும் பாதிப்புகளும்

சினைப்பை நீர்க்கட்டிகளும் பாதிப்புகளும்

4 mins read
1adb2a2c-002d-4af3-ab04-3135b5ff50b9
-

அனுஷா செல்­வ­மணி

'பாலி­சிஸ்­டிக் ஓவரி சிண்ட்­ரோம்' அல்­லது 'பிசி­ஓ­எஸ்' எனப்­படும் சினைப்­பை­யில் நீர்க்­கட்­டி­கள் உரு­வா­கும் பிரச்­சினை பெண்­களை எந்த வய­தி­லும் பாதிக்­கக்­கூ­டும்.

குறிப்­பாக கருத்­த­ரிக்­கும் வய­தில் இருக்­கும் பெண்­களில் 10 முதல் 15 விழுக்­காட்­டி­னர் இத­னால் பாதிப்­ப­டை­வ­தாக மருத்­துவ ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

இந்­நி­லை­யில், பெண்­கள் சினைப்பை நீர்க்­கட்­டி­க­ளால் எவ்­வாறு பாதிப்­ப­டை­கின்­ற­னர், இதன் தொடர்­பில் அவர்­கள் எவ்­வாறு முன்­னெச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­லாம் போன்­றவை தொடர்­பில் விளக்­க­ம­ளித்­தார் டாக்­டர் வனஜா கலைச்­செல்­வன்.

இவர், தேசி­ய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யில் மகப்­பேறு, மாதர்­நல மருத்­து­வத் துறை­யில் தாய்-சேய் நல மருத்­து­வப் பிரி­வில் மூத்த ஆலோ­ச­க­ரா­கப் பணி­பு­ரி­கி­றார்.

"பெண்­க­ளின் உட­லில் 'அன்ட்­ரொ­ஜென்' எனும் சுரப்பி நீர் (ஹார்­மோன்) அள­வுக்கு அதி­க­மாக சுரப்­ப­தால் சினைப்­பை­யில் நீர்க்­கட்­டி­கள் ஏற்­ப­டு­கின்­றன. இத­னால் கரு­முட்­டை­கள் சரி­யான இடை­வெ­ளி­யில் வெளி­யாவது பாதிக்­கப்­ப­டு­கிறது.

"வழக்­க­மாக பெண்­க­ளின் உட­லில் ஆண் பாலி­யல் சுரப்பி நீரான 'அன்ட்­ரொ­ஜென்' சிறிய அள­வி­லேயே சுரக்­கும். ஆனால் ஒரு பெண்­ணின் உட­லில் அது அள­வுக்கு அதி­க­மா­கும்­போது அவ­ருக்கு வயிறு, மார்­ப­கப் பகு­தி­களில் அள­வுக்கு மீறிய முடி வளர்ச்சி ஏற்­ப­டக்­கூ­டும். உடல் பரு­மன், எண்­ணெய்ப் பசை மிகுந்த தோல் போன்­ற­வற்­று­டன் ஆக மோச­மாக கரு­த்தரியாமை பிரச்­சனை ஏற்­ப­ட­வும் வாய்ப்பு இருக்­கிறது," என்று டாக்­டர் வனஜா கூறி­னார்.

பெண்­க­ளுக்கு எத­னால் இத்­த­கைய சிக்­கல் ஏற்­ப­டு­கிறது என்று இன்­னும் தெளி­வா­கக் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

"இதற்கு நிரந்­த­ரத் தீர்வு இல்லா­விட்­டா­லும் இதன் அறி­குறி­க­ளை­யும் விளை­வு­க­ளை­யும் குறைக்க பல்­வேறு மருத்­துவ சிகிச்­சை­கள் உள்­ளன. தக்க நேரத்­தில் கண்­ட­றி­யப்­பட்டு சிகிச்சை மேற்­கொண்­டால் சாதா­ரண வாழ்க்­கையை வாழ முடி­யும்," என்று டாக்­டர் வனஜா குறிப்­பிட்­டார்.

இந்­தப் பிரச்­சினை உள்ள பெரும்­பா­லான பெண்­க­ளுக்கு இன்­சு­லின் எதிர்ப்பு ஆற்­றல் இருக்­கும். உடல் இன்­சு­லினை சரி­யான முறை­யில் பயன்­ப­டுத்த முடி­யாத கார­ணத்­தால் இன்­சு­லி­னின் அளவு அதி­க­மா­கி­வி­டும். இத்­த­கைய நிலை 'அன்ட்­ரொ­ஜென்' அளவை அதி­க­ரிக்­கத் தூண்­டு­த­லாக இருக்­கும். மேலும், அவர்­க­ளுக்கு நீரி­ழிவு நோய் வரும் வாய்ப்­பும் அதி­கம் என்­றார் அவர்.

தாய் அல்­லது சகோ­த­ரிக்கு சினைப்பை நீர்க்­கட்டி பாதிப்பு இருந்­தால் அந்தப் பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதி­க­மா­கும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக உடல் பரு­ம­னா­கும்.

ஆரம்­பக் கட்­டத்­தி­லேயே கண்­ட­றி­யா­மல் விட்­டால் கருப்­பைப் புற்­று­நோய் வரு­வ­தற்­கான ஆபத்­தும் உள்­ளது.

ஒரு பெண் பரு­வ­ம­டைந்­து பல ஆண்­டு­கள் ஆரோக்­கி­ய­மாக இருந்­தா­லும் குழந்­தை பிறந்­த­ பிறகு திடீ­ரென அவ­ரின் சினைப்­பை­யில் கட்­டி­கள் ஏற்படக்கூடும். எனவே இந்தச் சிக்கல் நமக்கு நேராது என்று அலட்­சி­யமாக இராமல் பெண்கள் தங்கள் ஆரோக்­கி­யத்­தைத் தொடர்ந்து பேணிக்­காக்க வேண்­டும் என்­று டாக்­டர் வனஜா அறிவுறுத்தினார்.

மாவுச்­சத்தும் கொழுப்புச் சத்தும் குறைவாக உள்ள உணவை உட்­கொள்­வது, ஒரு நாளில் குறைந்­தது அரை மணி நேர­மா­வது உடற்­ப­யிற்சி செய்வது போன்ற ஆரோக்­கிய வழி­மு­றை­களைப் பின்­பற்றி வந்­தால் 'பிசி­ஓ­எஸ்' பாதிப்பில் இருந்து முழு­மை­யாக குண­ம­டைய முடி­யா­மல் போனா­லும் அதன் விளை­வு­களைக் குறைக்­க­லாம்.

இருபது வய­து­ நிரம்பாத பெண்­க­ளுக்கு மாத­வி­டாய் வழக்­க­மாக ஒவ்­வொரு மாத­மும் வரா­மல் இருந்­தால் ஒரு வேளை அது சினைப்பை நீர்க்­கட்­டிக்­கான அறி­குறி என அஞ்­சத் தேவை­யில்லை என்ற டாக்­டர் வனஜா, அநே­க­மாக அந்­தப் பெண்­ணின் சினைப்­பை­கள் முதி­ரா­மல் இருப்­ப­தால்­கூட அவ்­வாறு நேர­லாம் என்­றார்.

சிங்­கப்­பூ­ரில் 'பிசி­ஓ­எஸ்' குறித்த விழிப்­பு­ணர்வு அதி­க­மாக இருப்­ப­தால் உட­ன­டிப் பரி­சோ­த­னை­யின் மூலம் உரிய நட­வடிக்கை மேற்­கொள்­ள­லாம் என டாக்­டர் வனஜா நம்­பிக்கை அளித்­தார்.

இல்­லத்­த­ர­சி­யான 42 வயது ரேணுகா கடந்த 17 ஆண்­டு­களாக இந்­தப் பிரச்­சி­னை­யால் அவ­தி­யுற்று வரு­வ­தா­கக் கூறி­னார். இப்­பி­ரச்­சினை குறித்­துத் தெரி­ய­வந்­த­போது முத­லில் கவலை அடைந்த அவர், இதை வாழ்­நாள் முழு­வ­தும் எதிர்­கொள்ள வேண்­டுமே என வருந்­தி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

அவ­ரது தாயா­ருக்­கும் இந்­தச் சிக்­கல் இருந்­தது என்று கூறும் ரேணு­கா­விற்கு ஒரு மகள் இருக்­கி­றார். அடுத்த குழந்­தை­யைத் கருத்­த­ரிக்க சிர­மப்­ப­டு­வ­தோடு அள­வுக்கு மீறிய முடி வளர்ச்சி, உடற்­ப­ரு­மன் ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்.

தன்­னம்­பிக்கை இழந்த அவ­ருக்கு மன­நிம்­மதி பறி­போ­னது. அன்­றா­டம் தன் நிலையை எண்ணி வருந்­தும் ரேணுகா, மருத்­து­வர் தந்த மாத்­தி­ரை­களை முறை­யாக உட்­கொண்டு வரு­வ­தா­கக் கூறி­னார்.

உடல் ஆரோக்­கி­யத்­தைப் பாது­காக்­கா­விட்­டால் மறு­ப­டி­யும் மோச­ம­டை­யும் என்­றார் அவர்.

இரு­ப­து­களில் இருக்­கும் பெண் ஒரு­வர், சினைப்பை நீர்க்­கட்­டி­க­ளால் எதிர்­நோக்­கும் சவால்­க­ளை­யும் மனக்கவ­லை­யை­யும் பகிர்ந்­து­கொண்­டார்.

மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு இதற்­கான பரி­சோ­த­னையை மேற்­கொண்­ட­போது 'பிசி­ஓ­எஸ்' இருப்­பது உறு­தி­யா­னது. இதற்கு சிகிச்சை உள்­ளது என்­பதே மன­நி­றைவு தந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

பரு­வ­ம­டைந்­த­பின் மாத­வி­டாய் ஒழுங்­கற்று இருந்­த­தா­க­வும் சில முறை கிட்­டத்­தட்ட நான்கு மாதங்­க­ளுக்கு மாத­வி­டாய் ஏற்­ப­டாது என்­றும் அவர் கூறி­னார். ஒரு­முறை தொடர்ச்­சி­யாக ஏழு மாதங்­க­ளுக்கு மாத­வி­டாய் நீடித்­த­தா­க­வும் கூறி­னார்.

வாழ்க்­கை­யில் பிடி­மா­னம் இல்­லா­மல் நம்­பிக்­கையை இழந்த இவர் மாத­வி­டா­யின்­போது பொது இடங்­களில் அவ­மா­னப்­பட நேரி­டுமோ என்ற அச்­சத்­தி­லேயே வாழ்­வ­தா­கக் கூறி­னார்.

குடும்­பத்­தில் யாருக்­கும் இந்­தச் சிக்­கல் இல்­லா­த­போ­தும் தனக்கு ஏற்­பட்­டதை நினைத்து வருந்­தும் இவர், முடி கொட்­டு­தல், உடற்­ப­ரு­மன், முகப்­ப­ருக்­கள் போன்றவற்றால் அவதியுறுகிறார்.