தங்கமுனைப் விருதுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

தங்கமுனைப் விருதுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

3 mins read

உள்­ளூர் எழுத்­தா­ளர்­களை ஊக்கு­விக்­கும் வகை­யில் தேசிய கலைகள் மன்­றம் வழங்­கும் தங்­க­முனை விரு­து­களில் இவ்­வாண்டு ஆங்­கி­லத்­தில் மொழி­பெ­யர்க்­கப்­பட்ட சிறு­க­தை­க­ளுக்­குப் புதிய பிரிவு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமி­டெட்', சிங்கப்பூர் புத்தக மன்றத்துடன் இணைந்து இந்த ஆண்டு தங்கமுனை (கோல்டன் பாயின்ட்) விருதுப் போட்டியை நடத்துகிறது.

அத­னை­ய­டுத்து தங்­க­முனை விரு­து­ப் போட்டி தொடர்பில் இரு புதிய அம்­சங்­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

ஆங்­கி­லத்­தில் மொழி­பெ­யர்க்­கப்­பட்ட சிறு­க­தை­க­ளுக்­கான விரு­தும் வெற்­றி­பெற்­றோர்க்கு மதி­யுரை வழங்­கும் திட்­ட­மும் அவ்­வி­ரண்டு அம்­சங்­கள்.

தேசிய கலைகள் மன்­றம் 1993ஆம் ஆண்டு முதல் ஈராண்­டு­க­ளுக்கு ஒரு­முறை தங்­க­முனை விரு­து­களை வழங்கி வரு­கிறது.

2001ஆம் ஆண்­டுக்­குப் பிறகு புதிய பிரிவு ஒன்று சேர்க்­கப்­ப­டு­வது இதுவே முதல்­முறை. 2001ல் கவி­தை­க்­கான பிரிவு அறி­மு­கம் கண்­டது.

16வது முறை­யாக நடைபெறும் இந்த எழுத்துப் போட்டிக்கான விண்­ணப்­பங்­களை நாளை முதல் ஜூன் மாதம் 13ஆம் தேதி வரை சமர்ப்­பிக்­க­லாம்.

ஆங்­கி­லம், மாண்­ட­ரின், மலாய், தமிழ் என சிங்­கப்­பூ­ரின் அதி­கா­ரத்­துவ மொழி­கள் நான்­கி­லும் சிறு­க­தை­க­ளை­யும் கவிதை­க­ளை­யும் அனுப்­பி­வைக்­க­லாம்.

கூடு­த­லாக, இந்த ஆண்டு ஆங்­கி­லத்­தில் மொழி­பெ­யர்க்­கப்­பட்ட சிறு­க­தை­க­ளை­யும் போட்டிக்கு அனுப்­பி­வைக்­க­லாம்.

உள்­ளூர் எழுத்­தா­ளர்­கள் மாண்­ட­ரின், மலாய், தமிழ் ஆகிய மொழி­களில் எழு­திய சிறு­க­தை­களை ஆங்­கி­லத்­தில் மொழி­பெயர்ப்­பதை ஊக்­கு­விப்­பது தங்கமுனை விரு­துப் போட்டிக்­கான புதிய பிரி­வின் நோக்­கம்.

இந்த மொழி­களில் எழுதப்பட்டுள்ள சிறு­க­தை­கள் புதிய வாச­கர்­க­ளைச் சென்­ற­டைய அது வகை­செய்­யும்.

கலா­சா­ரங்­க­ளுக்கு இடை­யிலான மேம்­பட்ட புரி­த­லுக்கு வழி­வ­குப்­ப­து­டன் மொழி­பெ­யர்ப்­புத் துறை­யை­யும் மொழி­பெ­யர்ப்­பா­ளர்­க­ளை­யும் சமூ­கத்­தின் கவ­னத்­திற்­குக் கொண்­டு­வர அது உத­வும்.

தங்­க­முனை விரு­து­ தொடர்ந்து புதிய எழுத்­தா­ளர்­களை அடை­யா­ளம்­கா­ணும் தள­மாக விளங்கும் என்று 'ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமி­டெட்' கூறி­யது.

உள்­ளூர் எழுத்­தா­ளர் சமூ­கத்­தைப் பேணிக் காக்­க­வும் சிங்­கப்­பூ­ரில் இலக்­கிய வெளிப்­பாட்­டிற்கு உகந்த சூழலை ஏற்­படுத்­த­வும்­ உதவும் தள­மாக இவ்விருதுகள் விளங்­கும் என்று அது குறிப்பிட்டது.

மற்­றொரு புதிய அம்­ச­மான மதி­யுரை வழங்­கும் திட்­டம், வெற்­றி­பெற்­றோர் தங்­கள் எழுத்­துத் திற­னுக்கு மெரு­கூட்­டிக்­கொள்ள வாய்ப்­ப­ளிக்­கும்.

சிங்­கப்­பூ­ரில் முத்­திரை பதித்த மூத்த எழுத்­தா­ளர்­கள் வெற்­றி­பெற்ற படைப்­பு­களை மெரு­கூட்ட வும் பின்­னர் அவற்றை கவிதை, சிறு­கதை, மொழி­பெ­யர்ப்­புத் தொகுப்­பு­க­ளா­கக் கொண்­டு­வரவும் வழி­காட்­டு­வர்.

இவ்­வாண்­டின் தங்­க­முனை விருது வெற்­றி­யா­ள­ருக்கு $6,000 ரொக்­கப் பரி­சு­டன் சான்­றி­தழ், வெற்­றிக் கிண்­ணம், மதி­யு­ரை­ஞரின் வழி­காட்­டல் ஆகி­யவை காத்­தி­ருக்­கின்­றன.

இரண்­டாம் நிலை வெற்­றி­யா­ள­ருக்கு $4,000 ரொக்­கம், சான்­றி­தழ், மதி­யு­ரை­ஞ­ரின் வழி­காட்­டல் ஆகி­யவை கிட்­டும்.

மூன்­றா­வ­தா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­ப­வ­ருக்கு $2,000 ரொக்­கத்­து­டன் சான்­றி­த­ழும் மதி­யு­ரை­ஞ­ரின் வழி­காட்­டு­த­லும் கிடைக்­கும்.

நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் கவிதை, சிறுகதை, ஆங்கில மொழிபெயர்ப்புச் சிறுகதை என மூன்று பிரிவுகளில் இவ்வாறு பரிசுகள் வழங்கப்படும்.

சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் அனை­வ­ரும் போட்டியில் கலந்து­கொள்­ள­லாம். வயது வரம்பு ஏது­மில்லை. படைப்­பு­கள் எந்­தக் கரு­வி­லும் அமைந்­தி­ருக்­க­லாம்.

படைப்­பு­கள் இணை­யம் வழி­யாக, ஜூன் மாதம் 13ஆம் தேதி மாலை ஆறு மணிக்­குள் சென்றுசேர வேண்­டும். விண்­ணப்­பத்­திற்­கான கட்­ட­ணம் $16.

விண்­ணப்­பத்­து­டன் 100 சொற்­களில் தன்­குறிப்பை ஆங்­கி­லத்­தில் எழுதி இணைக்க வேண்­டும். படைப்பு குறித்து 50 சொற்­களில் விவ­ரிக்க வேண்­டும். விண்­ணப்­பங்­களை அனுப்­பு­வது குறித்த மேல்­வி­வ­ரங்­களுக்கு 'https://artshouselimited.sg/gpa' எனும் இணை­யத்­தளத்தை நாட­லாம்.