கவிமாலையின் 'சுடர் தந்த தேன்': தமிழ்மொழி விழா இறுதி நிகழ்ச்சி

1 mins read

தமிழ்­மொழி விழா 2023ன் நிறை­வாக கவி­மா­லை­யின் 'சுடர் தந்த தேன்' எனும் நிகழ்ச்சி நடை­பெ­ற­இருக்­கிறது.

இம்­மா­தம் 30ஆம் தேதி, உமறுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்­கும்.

மாண­வர்­க­ளின் இசை­நிகழ்ச்சி, நட­னம், நாட­கம், போட்­டி­யில் வெற்­றி­பெற்ற மாண­வர்­களுக்­கும் பொதுப்­பி­ரி­வி­னர்க்­கும் பரி­ச­ளிப்பு, இளங்­க­வி­ஞர் தங்­க­முத்­திரை விருது, கணை­யாழி விருது எனப் பல அங்­கங்­கள் இதில் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன.

சிறப்பு விருந்­தி­ன­ராக சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழக இணைப் பேரா­சி­ரி­யர் சித்ரா சங்­க­ரன் கலந்­து­கொள்­கி­றார்.

நிகழ்ச்­சி­யில் சிறப்­புப் பேச்­சா­ள­ராக தமி­ழ­கத்­தில் தனித்­தமிழ் சார்ந்து தீவி­ர­மாக இயங்கி வரும் மொழி­ய­றி­ஞ­ரும் கவி­ஞ­ரு­மான திரு. மகு­டே­சு­வ­ரன் கலந்­து­ கொள்­கி­றார்.

"இலக்­க­ணத்­தின் பேர­ழகு" என்ற தலைப்­பில் அவர் உரை­ஆற்­று­வார்.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் துணைத்­த­லை­வர் ஜோதி மாணிக்­க­வா­ச­கம் இவ்வாண்டுத் தமிழ்­மொழி விழா­வின் நிறை­வு­உரையை ஆற்­று­வார்.

நிகழ்ச்­சிக்கு அனு­மதி இல­வசம்.