பின்னல் கலைவழி இன்னல் களையும் குழு

பின்னல் கலைவழி இன்னல் களையும் குழு

3 mins read
c6208985-44d3-4ccf-84cb-60640a4a3789
-

ஆ. விஷ்ணு வர்­தினி

காலில் அறுவை சிகிச்சை முடிந்து மருத்­து­வ­ம­னை­யில் இருந்த நாள்­களில் சொல்­லொணா வலி­யால் வேத­னைப்­பட்­டார் மாண­வர் சக்­‌ஷம். அப்­போ­து­தான் அவ­ருக்­குப் பொழு­தைப் போக்­கும் வகை­யில் அறி­மு­க­மானது பின்­னல் கலை.

மருத்­து­வ­ம­னை­யில் கட்­டி­லில் இருந்து எழுந்து அமர்­வ­தற்­குக் கூட சிர­மப்­பட்ட சக்­‌ஷம், நூற்­கண்­டைக் கொண்டு பின்­னல் வேலை­யில் ஈடு­பட்­ட­தில் மகிழ்ச்சி கண்­டார்; வலியை மறந்­தார். இரண்டு வாரங்­க­ளுக்கு மேல் எழுந்து நட­மாட முடி­யாத நிலை­யில் நூலி­ழை­கள் தம்மை அமை­திப்­ப­டுத்தி ஆறு­தல் அளித்­த­தை அவர் உணர்ந்­தார்.

இக்­க­லையை சக்­‌ஷ­முக்கு அறி­மு­கப்­ப­டுத்­திய திரு­வாட்டி பிரியா ஆஸ்­தானா, 40, அத்­த­ரு­ணத்­தில் பின்­னல் கலை­யின் வல்­ல­மை­யைக் கண்­டு­கொண்­டார்.

தோழி திரு­வாட்டி ஆர்­னிகா பம்­பா­வின் மக­னான சக்­‌ஷ­முக்கு அடிப்­ப­டைப் பின்­னல் முறை­க­ளை­யும் உத்­தி­க­ளை­யும் கற்­றுத்­தந்­த­தன் பின்­னர், அவ­ரின் மன­நி­லை­யில் ஏற்­பட்ட முன்­னேற்­றம் திரு­வாட்டி பிரி­யா­விற்கு வியப்­பூட்­டி­யது.

அத­னைத் தொடர்ந்து, இளை­யர் தொடங்கி, தற்­போது சிறை­வா­சி­கள், மூத்­தோர் எனப் பல­ரும் நூற்­பின்­னல் கலை­யால் பய­ன­டை­யும் வண்­ணம் 2019ஆம் ஆண்­டில் 'வீவிங் ஹேப்­பி­னஸ்' எனும் சமூக நிறு­வ­னத்தை தம் நண்­ப­ரு­டன் இணைந்து திரு­வாட்டி பிரியா தொடங்­கி­னார்.

சிறு­வ­ய­தில் பொழு­து­போக்­கா­கத் தம் தாயா­ரி­ட­மி­ருந்து திரு­வாட்டி பிரியா இந்­தக் கைவினைக் கலை­யைக் கற்­றுக்­கொண்ட­போதும் கடந்த முப்­பது ஆண்டு­களாக அது அவ­ரி­டம் ஒட்­டிக்­கொண்­டுள்­ளது.

"பின்­னல் கலையை மூத்­தோ­ரின் பொழு­து­போக்­கா­கவே நான் முத­லில் கரு­தி­னேன். ஆனால், இப்­போது முற்­றி­லும் அவ்­வெண்­ணத்தை மாற்­றிக்­கொண்­டு­விட்­டேன். என் நண்­பர்­க­ளுக்­கும் இதனை அறி­மு­கப்­ப­டுத்த விரும்பு­கி­றேன்," என்­றார் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயி­லும் 22 வயது சக்­‌ஷம்.

திரு­வாட்டி பிரி­யா­வும் திரு­வாட்டி ஆர்­னி­கா­வும் முத­லில் கைப்­பே­சி­யைத் தட்­டு­வ­தற்கு மாற்­றாக நூற்­பின்­னல் கலையை அறி­மு­கப்­ப­டுத்­தப் புறப்­பட்­ட­னர்.

காலை­யில் கண்­வி­ழிப்­ப­தில் இருந்து இரவு மீண்­டும் உறங்­கச் செல்­லும்­வரை தங்­கள் பிள்­ளை­கள் கைப்­பே­சி­யும் கையு­மாக இருந்­தது திரு­வாட்டி பிரி­யா­விற்­கும் திரு­வாட்டி ஆர்­னி­கா­விற்­கும் பெருங்­க­வ­லை­யாக இருந்­தது.

இத­னை­ய­டுத்து, கைப்­பே­சித் திரை­யில் செல­வி­டும் நேரத்­தைக் குறைக்­கும் முயற்­சி­யாக, அதற்கு மாற்­றாக நூற்­பின்­னல் கலையை அவர்­கள் அறி­மு­கப்­ப­டுத்த விரும்­பி­னர்.

"கைப்­பேசி தட்­டு­வது நேரத்­தைப் போக்­க­வும், நம் சிந்­த­னையைச் சிறிது நேரம் திசை­திருப்­ப­வும்­தான். அதே நேரத்தை மிக எளி­மை­யான பின்­னல் வேலை­யில் நாம் முத­லீடு செய்­யும்­பொ­ழுது, கடை­சி­யில் நம் கைக்­குக் கிட்­டும் துணிப்­பொருள் ஆக்­கப்­பூர்­வ­மான வெளிப்­பா­டாக அமை­கிறது," என்­றார் 49 வய­தான திரு­வாட்டி ஆர்­னிகா.

வியா­ழக்­கி­ழ­மை­தோ­றும் ஒன்று­கூடி நூல் பின்­னும் நட­வடிக்­கையை 'வீவிங் ஹேப்­பி­னஸ்' குழு தொடர்­கின்­ற­து. கொவிட்-19 காலத்­தி­லும் அது தொடர்ந்­தது.

இந்­ந­ட­வ­டிக்கை கிட்­டத்­தட்ட ஆயி­ரம் பேரைச் சென்­ற­டைந்­துள்­ள­தாகத் தோழி­கள் தெரி­வித்­தனர். புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­குத் தொப்­பி­கள், மீட்­கப்­பட்ட வீட்டு விலங்கு­களுக்குத் துணிப்பாய்­கள் முத­லி­ய­வற்றை இவர்­கள் வழங்­கு­கின்­றனர்.

தம்­மு­டைய பதின்ம வயது மக­ளின் மூலம் 'வீவிங் ஹேப்­பி­னஸ்' அமைப்பு பற்றி தெரி­ய­ வந்ததையடுத்து, கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக அவ்­வ­மைப்­பில் தொண்­டூ­ழி­யம் புரிந்து வரு­கி­றார் இல்­லத்­த­ரசியான திருவாட்டி எம். விபா.

"என் மக­ளின் உயர்­நி­லைப் பள்­ளிக்கு பிரியா, ஆர்­னிகா இரு­வ­ரும் வந்­தி­ருந்து பயி­ல­ரங்கு நடத்­தி­னர். அவர்­க­ளின் முயற்சி நெகிழ வைத்­தது. ஓய்வு நேரத்­தில் மனத்­திற்கு நெருக்­க­மான ஒரு திற­னைக் கொண்டு பல்­வேறு பய­னா­ளி­க­ளுக்கு உத­வு­வது மன­நி­றைவு அளிக்­கிறது," என்­றார் திரு­வாட்டி விபா.

நூற்பின்­னல் கலை­யு­டன் தொடர்ந்து இணைந்­தி­ருப்­பது, 68 வயது தொண்­டூ­ழி­யர் மாலா துரையின் கைக­ளுக்­கும் மனத்­திற்­கும் மூளைக்­கும் வேலை கொடுத்து அவ­ரைத் துடிப்­பு­டன் வைத்­துள்­ளது; ஒத்த விருப்­பங்­கள் கொண்ட பெண்­மணி­க­ளு­டன் உரை­யா­டும் வாய்ப்­பை­யும் அளித்­துள்­ளது.