மோசமான மனநிலையில் தூக்கத்திலிருந்து எழுவதற்கான காரணங்கள்

மோசமான மனநிலையில் தூக்கத்திலிருந்து எழுவதற்கான காரணங்கள்

2 mins read

காலை­யில் புத்­து­ணர்ச்­சி­யு­டன் எழுந்­தி­ருப்­ப­தற்­குப் பதி­லாக மோச­மான மன­நி­லை­யில் எழுந்­தது உண்டா? அதற்­குப் பல்­வேறு கார­ணங்­கள் இருக்­க­லாம்.

"பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக சிலர் தொடர்ந்து மோச­மான நிலை­யில் உறக்­கத்­தி­லி­ருந்து கண்­விழிக்­க­லாம். இர­வில் நன்­றாக தூங்­கா­தது, மனச்­சோர்வு அல்­லது மன­வு­ளைச்­சல் பிரச்­சி­னை­களுக்குத் தீர்­வு­கா­ணா­தது போன்­றவை இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம்.

"வாழ்க்­கை­மு­றை­யும் இதற்கு பங்கு வகிக்­கிறது. ஆரோக்­கி­ய­மான உண­வுப் பழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிக்­கா­தது, எந்த நட­வ­டிக்­கை­யி­லும் ஈடு­ப­டா­தது, அள­வுக்கு அதி­க­மாக மது அருந்­து­வது போன்ற­வற்­றா­லும் நீங்­கள் காலை­யில் கண்­வி­ழிக்­கும்­போது உங்­கள் மன­நிலை சரி­யில்­லா­மல் போக­லாம்," என்று இந்­தி­யத் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் உள்ள பிரை­மஸ் சூப்­பர் ஸ்பெ­ஷே­லிட்டி மருத்­து­வ­மனை­யின் மூத்­தோர் மருத்­து­வத் துறைத் தலை­வர் டாக்­டர் விஜய் குமார் குர்­ஜார் தெரி­விக்­கி­றார்.

பொது­ந­லனை மேம்­ப­டுத்த வேண்­டு­மா­யின், ஒரு­வ­ரி­டம் இருக்கக்­கூ­டிய பிரச்­சி­னை­க­ளைக் கண்ட­றிந்து அதற்­குத் தீர்­வு­காண்­பது முக்­கி­யம் என்­கி­றார் அவர்.

குறிப்­பிட்ட சில தூக்­கப் பிரச்­சி­னை­களும் இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்று அவர் கூறு­கி­றார்.

"இர­வில் உறங்­கு­வ­தற்­குச் சிர­மப்­ப­டு­வது, இர­வில் பல­முறை உறக்­கத்­தி­லி­ருந்து எழுந்­தி­ருப்­பது, குறட்டை விடு­வது, தூக்­கத்­தில் சாதா­ர­ண­மாக மூச்­சு­விட சிர­மப்­படு­வது போன்­றவை நல்ல தூக்­கத்­திற்கு இடை­யூ­றாக விளங்­க­லாம்," என்று டாக்­டர் விஜய் குமார் குறிப்­பிட்­டார்.

குறித்த நேரத்­தில் தூங்கி எழுந்­தி­ருப்­பது, தூங்­கு­வ­தற்கு உகந்த சூழலை அமைத்­துக்­கொள்­வது, யோகா போன்ற தியான உத்­தி­களைச் செயல்­ப­டுத்­து­வது, படுக்­கைக்­குச் செல்­வ­தற்கு முன் கைப்­பே­சி­யிலோ தொலைக்­காட்­சி­யிலோ செல­வி­டும் நேரத்­தைக் குறைத்­துக்­கொள்­வது, பகல் நேரத்­தில் உறக்­கத்­தைத் தவிர்த்­துக்­கொள்­வது போன்ற நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றி­னால் கூடு­மா­ன­வரை இர­வில் நல்ல தூக்­கம் கிடைத்து காலை­யில் புத்­து­ணர்­வு­டன் எழுந்­தி­ருக்­க­லாம் என்­கி­றார் குரு­கி­ரா­மில் உள்ள நாரா­யணா சூப்­பர் ஸ்பெஷே­லிட்டி மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த மன­நல மருத்­து­வர் டாக்­டர் ராகுல் ராய் கக்­கார்.