புதிதாக செடியில் இருந்து பறிக்கப்பட்ட பீன்ஸ் மற்றும் உறைய வைக்கப்பட்ட பீன்ஸ் குறித்தும் அதிலுள்ள ஊட்டச் சத்து குறித்தும் மருத்துவர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் தெலுங்கானா பஞ்சாரா கில்ஸ் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சுஷ்மா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில், "பீன்ஸ் பறிக்கப்பட்டு சில நாள்களுக்குள் விற்கப்படுகிறது. அப்போது, சேமிப்பு நேரம் மற்றும் வெப்பநிலை போன்ற காரணிகளால் பறிக்கப்பட்ட பீன்ஸின் ஊட்டச்சத்து பாதிக்கப்படும்.
"ஆனால் உறைய வைக்கப்படும் பீன்ஸ்கள் பறித்த உடனேயே உறைய வைக்கப்படுகின்றன. அதனால் அவற்றின் ஊட்டச் சத்துகளைப் பாதுகாக்கவும், கெட்டுப் போவதைத் தடுக்கவும் முடியும்," என்றார்.
அதுமட்டுமன்றி, பல சந்தர்ப்பங்களில், உறைந்த காய்கறிகள் புதியதைவிட ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் மருத்துவர் சுஷ்மா கூறினார்.
பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.
ரத்தம் உறையாமல் பாதுகாக்கும்.
நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும்.
எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

