ரூ.5 லட்சம் பரிசை வென்றது ராமாயணக் காட்சிகளுடன் நெய்த கைத்தறி நூல் சேலை

2 mins read
e68f63bb-87d6-4222-88de-daa0a4825869
-
multi-img1 of 2

தமிழ் நாட்­டின் ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், பர­மக்­கு­டி­யைச் சேர்ந்­த­வர் எம்.கே.சர­வ­ணன். நெச­வா­ள­ரான இவர், கைத்­தறி நூல் சேலை­யில் ராமா­யணப் போர்க்­களக் காட்­சியை தத்­ரூ­ப­மாக வடி­வ­மைத்து ரூ.5 லட்­சம் காசோ­லையை முதல் பரி­சாக வென்­றுள்­ளார்.

பர­மக்­குடி, எம­னேஸ்­வ­ரம் பகு­தி­களில் 5,000க்கும் மேற்­பட்ட நெச­வா­ளர்­கள் தங்­க­ளது வீடு­களில் தறி மேடை அமைத்து நெசவுத் தொழில் செய்து வரு­கின்­ற­னர்.

இங்கு நெய்­யப்­படும் கைத்­தறி நூல் சேலை­கள், பம்­பர் சேலைகள், பட்­டுச் சேலை­கள் போன்றவை வெளிமாநி­லங்­களுக்­கும் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.

அவ்­வாறு நெய்­யப்­படும் சேலை­களில் ஒவ்­வோர் ஆண்­டும் புதுப்­புது வடி­வ­மைப்­பு­களைப் புகுத்தி பர­மக்­குடி கைத்­தறி நெச வாளர்­கள் அசத்தி வரு­கின்­ற­னர்.

இவர்­களில் சர­வ­ணன் என்ற நெச­வா­ளர், கைத்­தறி நூல் சேலை­யில் ராமா­ய­ணக் காவி­யத்­தில் இடம்­பெ­றும் கதை மாந்­தர்­களை தத்­ரூ­ப­மாக வடி­வ­மைத்­துள்­ளார்.

பத்து தலைகளு­ட­னான ராவ­ணனை ராமன் வதம் செய்­யும் காட்சி, போர்க்­க­ளக் காட்­சி­களை ஒன்­பது வண்­ணங்­களில் அவர் காட்­சிப்­ப­டுத்தி உள்­ளார்.

சேலை­யின் பின்­ன­ணி­யில் 3 'டி' வடி­வ­மாக லட்­சு­ம­ணன், அனு­மன், சுக்­ரீ­வன் மற்­றும் அரக்­கர்­கள் போர் செய்­யும் காட்­சி­யும் இடம்­பெற்­றுள்­ளது. அத்­து­டன், ஆங்­காங்கே கொய்த உடல் உறுப்­பு­கள் வீழ்ந்து கிடக்­கும் காட்­சி­களும் இடம்­பெற்­றுள்­ளன.

இந்­தச் சேலை தமி­ழகத்தில் நடந்த சிறந்த நெசவாளர்­க­ளுக்­கான போட்­டிக்கு அனுப்­பப்­பட்டு, சர­வணனுக்கு முதல் பரிசு கிடைத்­தது. ரூ.5 லட்­சத்­திற்­கான காசோ­லையை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வழங்­கி­னார்.

"இச்­சே­லையை 45 நாள்­களாக வடி­வ­மைத்து, 9 நாள்­களில் நெய்து முடித்­தேன். ராம­னின் அமை­தி­யும் ராவ­ண­னின் பத்து முகங்­க­ளி­ல் வெளிப்­படும் மூர்க்­கத்­த­ன­மும் தெளி­வாக ஓவி­யங்­களில் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில், ராமன் ராவ­ணனை வதம் செய்­யும் காட்­சியை தத்­ரூ­ப­மாக வடி­வ­மைத்­துள்­ளேன்.

"உண்­மை­யில், ராமா­ய­ணத்­தின் முழுப் போர்க் காட்­சி­யும் சேலையில் இடம்­பெற்­றி­ருக்­கும். ராவணனின் கொல்­லப்­பட்ட படை வீரர்­க­ளின் முகத்­தில் உள்ள வெளிப்­பா­டு­களைக்­கூட ெதள்ளத் தெளிவாக நெய்துள்ளேன்.

"எங்­கள் ஊரான ராம­நா­த­புரத்­து­டன் நெருங்­கிய தொடர்­பு­டைய ராமா­ய­ணத்­தில் இருந்து இறு­திப் போர்க் காட்­சி­யைத் தேர்ந்­தெ­டுத்­தோம். புட­வை­யின் 'பார்டர்' பகுதி மானையும் அசோக வனத்­தில் சீதை­ அமர்ந்­தி­ருக்­கும் காட்சியையும் கொண்டி ருக்கும். இந்­தப் பருத்திப் புட­வை­யின் விலை ரூ.70,000," என்­கி­றார் சர­வ­ணன்.