உங்கள் கைப்பேசி பற்றிய கசப்பான உண்மை

உங்கள் கைப்பேசி பற்றிய கசப்பான உண்மை

2 mins read

படுக்கை அறை, கழி­வறை என பல இடங்­க­ளுக்­கும் நமது கைப்­பே­சியை எடுத்­துச் செல்கிறோம். உல­கில் உள்­ள­வர்­களில் 90 விழுக்­காட்­டுக்­கும் மேலானோரி­டம் கைப்­பேசி பயன்­பாடு உள்­ளது. பல­ருக்கு அது இல்­லா­மல் காலம் தள்­ளு­வது முடி­யாத ஒன்று.

ஆனால், கைப்­பேசி பற்­றிப் பேசும் பல­ரும் கார் ஓட்­டும்­போது அது எவ்­வாறு நமது கவ­னத்தை திசை திருப்­பு­கிறது என்­றும் அதி­லி­ருந்து வெளி­வ­ரும் கதி­ர­லை­கள் நம்­மீது ஏற்­ப­டுத்­தும் தாக்­கம் பற்­றி­யும் இல்­லை­யேல் கைப்­பேசி பழக்­கம் நம்மை எந்த அள­வுக்கு தொற்­றிக்கொள்­கிறது என்­பது பற்­றி­யுமே பேசு­கின்­ற­னர். கைப்­பே­சி­யி­னால் ஏற்­ப­டக்­கூ­டிய நுண்­ணு­யிர் கிரு­மித்­தொற்று குறித்து பல­ருக்­குத் தெரிவதில்லை. ஆனால், நுண்­ணு­யிர் கிரு­மித்­தொற்று அபா­யம் உண்­மை­யான ஒன்று.

கடந்த 2019ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட ஓர் ஆய்­வில் பிரிட்­ட­னில் பெரும்­பா­லோர் தங்கள் கைப்­பே­சியைக் கழி­வறைக்­குள் எடுத்­துச்­செல்­வது தெரியவந்­துள்­ளது.

எனவே கழி­வறை இருக் கையை­விட கைப்­பே­சி­கள் சுத்­த­மின்றிக் காணப்­ப­டு­கிறது என்ற கண்­டு­பி­டிப்­பில் ஆச்­ச­ரி­யம் ஒன்று­மில்லை.

நமது கைப்­பே­சி­களை நம் பிள்­ளை­க­ளி­டம் கொடுக்­கி­றோம். அவர்­களில் பல­ருக்­குச் சுத்­தம் என்­றால் என்­ன­வென்று தெரி­யா­மல் போக­லாம். அத்­து­டன் கைப்­பே­சி­யைப் பயன்­ப­டுத்­திக் கொண்டே நம்­மில் பலர் சாப்­பிடு வதும் உண்டு. அப்­பொ­ழுது அதை அழுக்­குப் படிந்த பல இடங்­களில் வைப்­ப­தும் உண்டு. இவை எல்­லாம் உங்­கள் கைப் பேசி­யில் கிரு­மி­கள் தொற்­றிக் கொள்ள இடம்கொடுக்­கிறது. அத்­து­டன் நாம் உண்­ணும் உண­வின் சிறு சிறு பகு­தி­களும் அத்­து­டன் ஒட்­டிக்­கொண்டு கைப்­பேசி­களில் இருக்­கும் நுண்­ணு­யிர் கிரு­மி­க­ளுக்குத் தீனி­யாக விளங்­கு­கிறது.

உல­கில் பலர் தங்­கள் கைப்­பே­சி­களை நாள் ஒன்­றுக்கு பல நூறு முறை தொடு­கி­றோம் என்று கணிக்­கப்­ப­டு­கிறது. ஆனா­லும், நம்­மில் பலர் சமை­ய­லுக்­குப் பின், வீட்டைச் சுத்­தம் செய்த பின், தோட்ட வேலை செய்த பின் கை கழுவுகிறோமே தவிர கைப்­பேசியைத் தொட்­ட­பின் நம் கைகளைக் கழு­வு­வ­தில்லை.

நமது கைகளில் அடிக்­கடி கிரு­மி­கள் வந்து சேர்­கின்­றன. அதுவே நமக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட வழி­வ­குக்­கிறது. அது போலவே நமது கைப்­பே­சி­களும் கிரு­மித்­தொற்று ஏற்­பட வழி வகுக்­கிறது.

நமது கைப்­பே­சி­களில் பல வகை­யான நோய்­களை ஏற்படுத்­தும் கிரு­மி­கள் குடி­கொண்டிருக்­கும் வாய்ப்பு உள்­ளது என பல ஆய்­வு­கள் காட்­டு­கின்­றன. அவற்­றில் வயிற்­றுப்போக்கு, காச­நோய், மூளைக் காய்ச்­சல் போன்ற மனி­தர்­க­ளுக்கு கடும் விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய நோய்­களும் அடங்­கும்.

அத்­து­டன், இந்­தக் கிரு­மி­கள் வழக்­க­மான பல நோய் எதிர்ப்பு மருந்­து­க­ளுக்கு அடங்கா என்­றும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இது மிக­வும் கவலை அளிக்­கும் ஒரு நிலை.