தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக வேலையிடப் பாதுகாப்பு நலன் தினம்

3 mins read
f12059eb-0463-47a1-940e-a4a242e5144a
-

சபிதா ஜெய­கு­மார்

இன்று (ஏப்­ரல் 28) உலக வேலை­யிடப் பாது­காப்பு, ஆரோக்­கிய தினம். உலக அள­வில் வேலை இடங்­களில் ஏற்­படும் விபத்­து­கள், நோய்­கள் ஆகி­ய­வற்­றைத் தடுப்­பதை இது ஊக்­கு­விக்­கிறது. 2003ஆம் ஆண்­டில் அனைத்­துலகத் தொழி­லா­ளர் அமைப்பு இத் தினத்­தைத் தொடங்­கி­யது.

மனி­த­னின் வாழ்­வில் பெரும் பங்கு வகிக்­கிறது வேலை. ஒரு மனி­தன் தன் வாழ்­வில் ஏறத்­தாழ 90,000 மணி நேரத்தை வேலை­யில் செல­வி­டு­வ­துண்டு.

ஆனால், சில­ருக்கு இந்த முழு 90,000 மணி நேரத்தை நிறை­வாக அனு­ப­விக்க முடி­வ­தில்லை. வேலை­யி­டங்­களில் ஏற்­படும் விபத்­து­க­ளால் கண்­மூ­டித்­த­னத்­தால் பலர் காய­முற்­றுள்­ள­னர், வாழ்­வை­யும் இழந்­துள்­ள­னர்.

இறந்த அல்­லது காய­ம­டைந்த தொழி­லா­ளர்­க­ளுக்­கான அனைத்­து­லக நினைவு தின­மும் இன்று அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது.

தின­மும் பாது­காப்­பா­க­வும் ஆரோக்­கி­ய­மா­க­வும் வீட்­டிற்­குத் திரும்­பிச் செல்ல ஒவ்­வோர் ஊழி­ய­ருக்­கும் உரிமை உண்டு. அதே­போல் பாது­காப்­பான பணிச் சூழலை உரு­வாக்கித் தரு­வ­தில் ஒவ்­வொரு முத­லா­ளிக்­கும் பொறுப்பு உள்­ளது.

வேலை இடத்தை பாது­காப்­பா­ன­தா­கப் பார்த்­துக்­கொள்­வ­தில் அனைத்துப் பிரி­வி­ன­ருக்­கும் பங்­குள்­ளது என்­பதை நினை­வூட்டி செயல்­பாட்­டில் இறங்க வலி­யுறுத்து­கிறது இந்த தினம்.

"இன்­றைய உல­கில் புதிய வேலை­களும் தொழில்­களும் அதி­வே­கத்­தில் தோன்­று­கின்­றன. பலதுறை­களில் ஏற்­படும் மாற்­றங்­க­ளால் புதிய வேலை­யிட ஆபத்­து­களும் தோன்­றி­யுள்­ளன," என்று கூறு­கிறது ஐக்­கிய நாட்டு­ அனைத்­து­லகத் தொழி­லா­ளர் அமைப்பு.

"சிங்­கப்­பூ­ரில் 2020ஆம் ஆண்­டிற்­கான பணி­யிடக் காயங்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 18 விழுக்­காடு குறைந்­தது.

"கொவிட்-19 தொற்றுக்காலத்­தின்­போது கிரு­மிப்பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த பல வேலை­யிட நட­வ­டிக்­கை­கள் இடைநிறுத்­தம் செய்­யப்­பட்­டி­ருந்­தன. அச்­ச­ம­யத்­தில் வேலை­யிட விபத்­து­க­ளின் எண்­ணிக்கை குறைந்­தது. அதன் பின்னர், மக்­களும் பணி இடங்­களும் வழக்கநிலைக்குத் திரும்ப வேலை­யிட விபத்­து­க­ளின் எண்­ணிக்­கை­யும் வழக்கநிலைக்குத் திரும்­பி­யது," என்று சிங்­கப்­பூர் வேலை­யி­டப் பாது­காப்பு மன்­றம் 2021ல் குறிப்­பிட்­டது.

இவ்­வாண்டு தொடங்கி நான்கு மாதங்­க­ளி­லேயே ஏழு பேர் வேலை­யிட விபத்து­க­ள் கார­ணமாக உயி­ரி­ழந்­துள்­ள­னர். உயர்ந்து வரும் வேலை­யிட மர­ணங்­க­ளைக் கருத்­தில்கொண்டு மனி­த­வள அமைச்சு உயர்த்­தப்­பட்ட பாது­காப்பு நிலையை மே மாதம் வரை நீட்டித்­துள்­ளது.

கட்­டு­மானப் பணி­களில் ஈடு­படு­ப­வர்­க­ளுக்­கும் கடல்­துறை ஊழி­யர்­க­ளுக்­கும் பாது­காப்பு பயிற்சி வகுப்­பு­கள் நடத்­தி­னார் லைஃப் செண்­டர் சமூக சேவை­நிலை­யத்­தின் தலை­வர் திரு எப்பி பிலிப்.

"பல ஊழி­யர்­க­ளுக்கு வேலை­யி­டப் பாது­காப்பை ஒட்டி திறன் மேம்­பாட்டு வகுப்­பு­கள் தேவைப்­பட்­டன. நிறு­வ­னங்­கள் செயல்­தி­ற­னை­யும் நேரத்­தை­யும் கருத்­தில் கொண்டு பாது­காப்­பான வேலை முறையை அலட்­சி­யப்­ப­டுத்­து­கின்­றன என்று ஊழி­யர்­கள் பலர் பகிர்ந்­து­கொண்­ட­னர். பாது­காப்பை நிலை­நாட்­டு­வ­தில் அனை­வ­ருக்­கும் பங்­குண்டு. ஆபத்­தான பணி­களில் ஈடு­படும் போது கவ­னத்­து­டன் செயல்­பட வேண்­டும்," என்று அவர் கூறி­னார்.

வேலை­யிடப் பாது­காப்பு என்­றால் கட்­டு­மா­னம் போன்ற கன­ரக வேலை­கள் மட்­டும் அல்­லாது அனைத்துத் துறை­க­ளி­லும் பணி­பு­ரி­வோ­ரின் பாது­காப்பையும் உறுதிசெய்­வது முக்­கி­யம்.

முன்­னாள் பாது­கா­வல் அதி­கா­ரி­யா­ன திரு­மதி காமாட்சி கிருஷ்­ண­சாமி, 68, "பாது­கா­வல் அதி­காரி வேலை­யில் பிற­ரைப் பாது­காக்­கும் எங்­க­ளுக்­கும் ஆபத்­து­கள் உள்­ளன. பணி­யின்­போது வன்­மு­றையைக் கையாள்­பவர்­கள் பாது­கா­வல் அதி­கா­ரி­களைக் காயப்­ப­டுத்தி உள்­ள­னர்.

"அண்மையில் இது­போன்ற ஒரு சம்­ப­வம் பொத்­தோங் பாசி­ரில் நிகழ்ந்­தது. பள்­ளி­யில் பணி­பு­ரிந்தபோது கடுமையாக நடந்து­கொண்ட பெற்­றோ­ரைச் சமா­ளிக்கச் சிர­மப்­பட்­டேன்," என்று பகிர்ந்­து­கொண்­டார்.

"பொது­வாக அலு­வ­லக வேலை பார்ப்­ப­வர்­க­ளுக்கு வேலை­யிட ஆபத்­து­கள் குறைவு என்ற பார்வை நீடிக்­கிறது. இருப்­பி­னும் அவர்­களும் வேலை­யிடப் பாது­காப்­பில் கவ­னம் செலுத்­து­வது முக்­கி­யம்.

"கை, விரல், மணிக்­கட்டு, முட்டி மோன்­ற­வற்­றில் ஏற்­படும் காயங்­கள் இவர்­களை அதி­கம் பாதிக்­கிறது. கண் எரிச்­சல், முதுகுவலி போன்­றவை மோச­மடைந்து காலப்போக்கில் பல உடல்­ரீ­தி­யான பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. முக்­கி­ய­மாக மன­த­ள­வில் இவர்­களுக்கு ஏற்­படும் தாக்­கங்­கள் மனத்­தைப் பாதிப்­ப­து­டன் உட­லை­யும் பாதிக்­கிறது. இவை இறு­தி­யில் நிறு­வ­னத்­தையே பாதிக்­கிறது. செயல்­தி­றன் ஊழியர்களி­டம் குறை­யும்போது நிறு­வ­னத்­தின் செயல்­தி­ற­னும் குறை­கிறது," என்று குறிப்­பிட்­டார் ரேவன் ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் உள­வி­ய­லா­ள­ரும் மூத்த ஆலோ­ச­க­ரு­மான முனை­வர் பிர­வீன் நாயர்.