கிருமியுடன் வாழப் பழகிக்கொண்டாலும் விழிப்புணர்வு வேண்டும்

கிருமியுடன் வாழப் பழகிக்கொண்டாலும் விழிப்புணர்வு வேண்டும்

2 mins read
9fd484df-924c-41e7-a4a6-0bc4ba794f56
-

இம்மாதம் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இடம்­பெ­றும் உலக நோய்த்­த­டுப்பு வாரத்தை யொட்டி 'சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மிக்கு அடுத்த நடவடிக்கை என்ன?' என்ற ஆய்­வின் முடி­வு­கள் இம்மாதம் 25ஆம் தேதி சிறப்பு நிபு­ணர் குழு கலந்­து­ரை­யா­ட­லு­டன் வெளி­யி­டப்­பட்­டது.

60 வய­தைத் தாண்­டி­ய­வர்­

க­ளில் நீரி­ழிவு நோயுள்­ளோர், இத­யம் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், நாள்­பட்ட நுரை­யீ­ரல் நோயுள்­ளோரில் 15 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தீவி­ர­மாக நோய்­வாய்ப்­படும் அள­விற்கு கிரு­மி­யின் அச்­சு­றுத்­தல் உள்­ளது என்று கருத்­து­உரைக்கப்பட்டது.

பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­களில் மூன்­றில் ஒரு பங்­கி­னர் எதிர்­

கா­லத்­தில் பூஸ்­டர் தடுப்­பூ­சி

­க­ளைப் போட்டுக்கொள்ள போவது இல்லை எனும் முடிவை எடுத்­தி­ருப்­ப­தாக ஆய்வு கண்­ட­றிந்­தது.

சிறப்பு கலந்­து­ரை­யா­ட­லில் ஆசிய பசி­பிக் நோய்த்­த­டுப்பு கூட்­ட­ணி­யின் துணைத் தலை­வர் முனை­வர் டிக்கி பங்­கெஸ்டு, உட்­சு­ரப்­பி­யல் நிபு­ணர் மருத்­து­வர் பென் இங், சுவாச மருத்­து­வர் ஆங் சுங் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

மொடர்னா பையோ­ன்டெக் சிங்­கப்­பூர் நிறு­வ­ன­மும் ஆசிய பசி­பிக் நோய்த்­த­டுப்பு கூட்­ட­ணி­யும் இணைந்து நடத்­திய யூகோவ் ஆய்வு, சிங்­கப்­பூ­ரில் பெரும்­பா­லா­னோர் கொவிட்-19 இனி ஒரு பெரிய அச்­சு­றுத்­தல் இல்லை என்று எண்­ணு­வ­தாக கண்­ட­றிந்­துள்­ளது. மூன்று நிறுவனங்களின் ஆய்­வின் முடி­வு­களை ஆராய்ந்த பின்பு ஒரு­மித்த அறிக்­கையை நிபுணர்கள் அறிவித்தனர்.

"தொடர்ந்து பொது­மக்­க­ளி­டம் கொவிட்-19 கிரு­மித்­தொற்று பற்­றிய விழிப்­பு­ணர்­வை­யும் உண்­மை­யான தக­வல்­க­ளை­யும் கொண்­டு­ சேர்க்கவேண்­டும். கிரு­மித் தொற்­றின் வீரி­யம் குறைந்து 'என்­ட­மிக்' என்று பெயர் மாற்றம் பெற்றாலும் மருத்­துவ ரீதி­யாக பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­கள் பலர் இச்­ச­மூ­கத்­தில் உள்­ள­னர். சிங்­கப்­பூரர்கள் கவ­ன­மாக இருப்­பது நல்­லது. மக்­கள் தொடர்ந்து பூஸ்­டர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்­கு­விக்க வேண்­டும்," என்று மூவ­ரும் தெரி­வித்­த­னர்.

"நீரி­ழிவு நோயால் சிங்­கப்­

பூ­ரில் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வது இந்­தி­யர்­களே. இத­னால் கொவிட்-19 கிரு­மித்தொற்று ஏற்­பட்ட பின் பிற நோய்­க­ளால் எளி­தில் பாதிப்­ப­டைய வாய்ப்­பு­கள் இருக்­கின்­றன. எனவே இப்­பி­ரி­வி­னர் அலட்­சி­ய­மாக இருக்­கா­மல் தக்க நட­வ­டிக்­கை­களை எடுத்து உடல் நலத்­தைப் பேணு­வது சிறந்­தது," என்று உட்­சு­ரப்­பி­யல் நிபு­ணர் மருத்­து­வர் பென், தமிழ் முர­சு­டன் பகிர்ந்­து­கொண்­டார்.

அனை­வ­ரும் சமூக பொறுப்­பு­உணர்வைக் கடைப்­பி­டித்து ஒவ்வொருவரையும் குறிப்­பாக எளி­தில் பாதிப்­ப­டை­யக் கூடி­ய­வர்­களை இக்­கா­ல­கட்­டத்­தில் காப்­போம் என்று சிறப்பு கலந்­து­ரை­யா­டல் வலி­யு­றுத்­தி­யது.