தமிழின் அழகைத் தாங்கும் சிற்றிலக்கியங்கள்

தமிழின் அழகைத் தாங்கும் சிற்றிலக்கியங்கள்

2 mins read
308faadf-b3e2-4338-bb11-23f275ae7ba6
-

சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைக் கழ­கம் தமிழ்மொழி மாதத்தையொட்டி தமிழ் இலக்­கி­யத்­தில் இடம்­பெ­றும் சிற்­றி­லக்­கி­யங்­களை இம்மாதம் 26ஆம் தேதி நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் ஆராய்ந்­தது.

ஆண்­டு­தோ­றும் சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைக் கழ­கம் ஏற்­பாடு செய்­யும் கலைத் திரு­வி­ழா­வின் ஓர் அங்­க­மாக இந்­தச் சிற்­றி­லக்­கி­யங்­கள் சார்ந்த நடன படைப்பு அமைந்­தி­ருந்­தது.

நடன நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ராக சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்திரன் கலந்துகொண்டார்.

"தமி­ழில் சிற்­றி­லக்­கி­யம் தோன்றி வளர்ந்த வர­லாற்­றினை முனை­வர் ந.வீ.ஜெய­ரா­மன் முன் வைத்த வரை­ய­றையை மைய­மா­கக் கொண்டு நடனப் படைப்­பில் இடம்­பெ­றும் பாடல்­களை நான் தேர்ந்­தெ­டுத்­தேன்," என்று பகிர்ந்­து­கொண்­டார் 'சிற்­றி­லக்­கி­யங்­க­ளின் அழகு' நட­னப்­

ப­டைப்பை ஏற்­பாடு செய்த ஆ.மீன­லோ­சனி. இவர் சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைக் கழக பகுதி நேர பர­த­நாட்­டிய பயிற்­று­விப்­பா­ளர்.

"சிற்­றி­லக்­கி­யங்­கள் மூலம் தமிழ்ப் பண்­பாட்­டையும் தமி­ழக வர­லாற்­றையும் தெரிந்­து­கொள்­ள­லாம். அக்­கால மக்­க­ளின் சமூக வாழ்

­வி­யலை அறி­வ­தோடு சிற்­றி­லக்­கி­யங்­கள் அழ­கி­யல் தன்­மை­யோடு காணப்­ப­டு­வதை அறிய முடி­கிறது.

"நிகழ்ச்­சி­யில் என்­னு­டன் ஆடிய கழக மாண­வர்­களும் கலந்­து­கொண்ட பார்­வை­யா­ளர்­களும் நமது வர­லாறு, புரா­ணக் கதை­கள், மக்­க­ளின் வழி­பாட்டு முறை­கள் ஆகி­ய­வற்றை அறிந்­து­கொள்ள இது சிறந்த வாய்ப்­ப­ளித்­தி­ருக்­கும் என்று நம்­பு­

கி­றேன்," என்று பகிர்ந்­து­கொண்­டார்.

"ஐம்­பெ­ரும் காப்­பி­யங்­களை என் தமிழ் வகுப்­பு­கள் மூலம் முன்பே அறிந்திருந்தேன். ஆனால் சிற்­றி­லக்­கி­யங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது இந்­தப் படைப்பு. நட­னத்­தைப் பயிற்சி செய்­கை­யில் சிற்­றி­லக்­கி­யங்­கள் பற்றி பல்­வேறு தக­வல்­க­ளை­யும் அவற்­றில் மறைந்­துள்ள அழ­கை­யும் தெரிந்­து­கொண்­டேன்," என்று கூறி­னார் நட­ன­மணி கோபிகா, 21.

நான்­ம­ணி­மாலை, கலம்­ப­கம், குற­வஞ்சி, உலா, அந்­தாதி, மீனாட்சி பிள்ளை தமிழ், காவடிச் சிந்து ஆகிய பாடல்­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைக் கழக நட­ன­ம­ணி­கள் நட­ன­மா­டி­னர்.