நகைச்சுவை பேச்சால் தந்தையரை மகிழ்வித்த பிரவீண் குமார்

நகைச்சுவை பேச்சால் தந்தையரை மகிழ்வித்த பிரவீண் குமார்

2 mins read
8878192b-17de-443a-a5e4-2f27f6071d28
-

வீட்­டின் குடும்பத் தலை­வ­னுக்கு இருக்­கும் சிக்­கல்­கள், பொறுப்­பு­கள் ஆகி­ய­வற்றை நகைச்­சு­வை­யாக மக்­க­ளுக்கு எடுத்­துச் சொல்லும் 'ஃபேமிலி மேன் ரிட்­டர்ன்ஸ்' என்ற நிகழ்ச்­சியை இம்மாதம் 22ஆம் தேதி மேடை­யேற்­றி­னார் பிர­பல நகைச்­சுவை கலை­ஞர் பிர­வீண் குமார்.

குடும்­பப் பொறுப்­பு­களை ஏற்­ற­தோடு திரு­மண வாழ்க்­கை­, பிள்­ளை­க­ள், இவர் குடும்­பத்­திற்­காக செய்த தியா­கங்­கள் பற்றி நகைச்சுவையாகப் பேசி­னார்

பிர­வீண்.

பாய­லே­பாரில் உள்ள 'தி சிங்­போஸ்ட்' அரங்­கத்­தில் நடந்த இந்­நி­கழ்ச்­சி­யைக் காண நூற்­றுக்கு மேற்­பட்­டோர் திரண்டு வந்­தி­ருந்­த­னர். இதில் பல தந்­தை­யர்­ தங்­க­ளின் குடும்­பத்­தோடு இந்­நி­கழ்ச்­சி­யைக் கண்டு ரசித்­த­னர்.

"சாதா­ரண குடும்­பத் தலை­வ­னின் பிரச்சினைகள், பொறுப்­பு­களை நான் என் நிகழ்ச்­சி­யின் முதல் பாகத்­தில் குறிப்­பிட்­டேன்.

"எல்லா பொறுப்­பு­க­ளை­யும் வேடிக்­கை­யான சம்­ப­வங்­க­ளை­யும் ஒரே நிகழ்ச்­சி­யில் திணிக்க முடி­யா­த­தால் 'ஃபேமிலி மேன் ரிட்­டன்ஸ்' என்ற இந்நிகழ்ச்சி

உரு­வா­னது.

"ஃபேமிலி மேன் என்­ப­வன் ஒரு சூப்­பர் ஹீரோ கதா­பாத்­தி­ரத்­திற்­குச் சம­மா­ன­வன். 'ஸ்பை­டர் மேன்', 'சூப்­பர் மேன்' போல இந்த குடும்­பத் தலை­வ­னுக்­கும் சிர­மங்­கள், பொறுப்­பு­கள், உணர்­வு­கள் இருக்­கின்­றன," என்­றார் அவர்.

குறிப்­பாக கொவிட்-19 நோய்ப் பர­வல் காலத்­தில் பெங்­க­ளூ­ரில் இருந்து சென்­னைக்கு இடம் மாறிய நகைச்­சு­வை­யான அனு­ப­வங்­க­ளை­யும் இந்­நி­கழ்ச்­சியை எழுத அவர் கடந்து வந்த சவால்­க­ளை­யும் பகிர்ந்துகொண்­டார்.

இரண்டு மணி நேரம் போனதே தெரி­யா­மல் வயிறு குலுங்க தான் சிரித்ததை பகிர்ந்­து­கொண்­டார் நிகழ்ச்­சிக்கு வந்த 25 வயது ம.மைதிலி.

"தந்­தை­யர்­படும் பிரச்­சி­னை­களை வேடிக்­கை­யாகக் கூறி­ய­தோடு தான் வளர்ந்து வரும் கால­கட்­டத்­து­டன் ஒப்­பிட்டு இக்­கா­லத்­தின் குழந்­தை­க­ளின் வினோ­த­மான நடத்­தை­க­ளை­யும் சுட்­டிக்­காட்டி எங்களை பிரவீண் சிரிக்க வைத்­தார்," என்­றார் மைதிலி.

மனைவி, இரு குழந்­தை­க­ளு­டன் வந்த திரு விக்­ரம், நிகழ்ச்­சி­யில் பகி­ரப்­பட்ட அனு­ப­வங்­கள் தன் வாழ்க்­கை­யி­லும் நடந்­த­தா­கக் கூறி­னார்.

"தலை­மு­றை­க­ளுக்கு இடை­யி­லான வேறு­பா­டு­களை ஒரு தந்­தை­யாக என்­னால் புரிந்­து­கொள்ள முடி­யாத சிர­மத்தை பற்றி அவர் எளி­மை­யா­க­வும் நகைச்­சு­வை­யா­க­வும் கூறி­ய­தில் எனக்கு மிக­வும் மகிழ்ச்­சி­யாக இருந்­தது.

"திரு­ம­ணம் ஆகா­த­வர்­கள் மனைவி, குழந்­தை­கள் இந்­நி­கழ்ச்­சிக்கு வந்தபின் கண்­டிப்­பாக எங்­க­ளின் சிர­மத்­தில் பாதி­யை­யா­வது புரிந்து கொள்­வார்­கள்," என்று சிரித்துக்கொண்டே கூறி­னார்

திரு விக்­ரம்.

கடந்த பத்து ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா, துபாய், பஹ்ரேன் போன்ற பல நாடு­களில் 1,500 நகைச்­சுவை நிகழ்ச்­சி­களை பிர­வீண் குமார் மேடை ஏற்­றி­யுள்­ளார்.

'மாஸ்க் ஸ்டு­டி­யோஸ்', 'சீதா மீடியா, ஸ்கை ஹை மீடி­யா­வொர்க்ஸ்' ஆகிய

நிறு­வ­னங்­கள்

இந்­நி­கழ்ச்­சியை சிங்­கப்­பூ­ரில்

தயா­ரித்­துள்­ளன.