தமிழ் அமுதம் பருக வாருங்கள்

தமிழ் அமுதம் பருக வாருங்கள்

2 mins read

தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கத்­தின் தலை­வர் ஹரி­கி­ருஷ்­ணன் முத்துச்சாமியின் தமி­ழார்­வத்­தா­லும் சீரிய முயற்­சி­யா­லும் சிங்­கப்­பூ­ரில் 14 தமிழ்ப் பேச்­சா­ளர் மன்­றங்­கள்

வெற்­றி­க­ர­மாக இயங்கி வரு­கின்­றன.

இப்­பேச்­சா­ளர் மன்­றங்­களில் பயிற்சி பெறும் பேச்­சா­ளர்­கள் குறித்த நேரத்­திற்­குள் தாம் சொல்ல வந்த கருத்தை அனை­வ­ருக்கும் எளி­தில் புரி­யும்­ப­டி­யும் மன­தில் பதி­யும் வண்­ண­மும் உரை­யாற்­று­வ­தில் கைதே­ர்ந்­த­வர்­க­ளாக உள்­ள­னர்.

அப்­பேச்­சா­ளர்­க­ளின் திற­மையை மேலும் மெரு­கேற்­றும் வகை­யில் தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கத்­தின் சார்­பில், தமிழ்­மொழி விழா­வின் ஓர் அங்­க­மாக ஆண்­டு­தோ­றும் தயா­ரிக்­கப்­பட்ட மற்­றும் அரங்­கப் பேச்­சுப் போட்­டி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

தயா­ரிக்­கப்­பட்ட உரைக்கு ஐந்­தில் இருந்து ஏழு நிமி­டங்­களும் அரங்­கப் பேச்­சுக்கு ஒன்­றிலிருந்து இரண்டு நிமி­டங்­களும் வழங்­கப்­படும்.

இந்­தப் பேச்­சுப் போட்­டி­கள் மன்ற, வட்­டார, மாவட்ட அள­வில் நடை­பெ­றும். ஒவ்­வொரு மன்­றப் போட்­டி­க­ளின் முடி­வில் இரண்டு பிரி­வு­களில் முதல் இரண்டு வெற்­றி­யா­ளர்­கள் வட்­டார அள­வி­லான போட்­டி­க­ளுக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வர்.

மொத்­தம் நான்கு வட்­டா­ரங்­கள் உள்ள நிலை­யில் ஒவ்­வொரு வட்­டா­ரத்­தில் இருந்­தும் இரண்டு வெற்­றி­யா­ளர்­கள் மாவட்ட அள­வி­லான போட்­டி­க­ளுக்­குத் தகுதி பெறு­வர்.

அந்த வகை­யில் இந்த ஆண்­டிற்­கான மாவட்ட அள­வி­லான போட்­டி­கள், தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கத்­தின் சார்­பில், நாளை காலை 9.00 மணி­ய­ள­வில் விக்­டோ­ரியா ஸ்தி­ரீட்­டில் உள்ள தேசிய நூல­கம், தளம் 5,

பாசி­பி­ளிட்டி அறை­யில் நடை­பெற உள்­ளது. அனு­மதி இல­வ­சம்.

போட்­டி­யில் வெற்றி பெறு­

ப­வர்க­ளுக்கு பரி­சுக் கோப்­பை­யோடு, தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கம்

நடத்­தும் பட்­டி­மன்­றம், கருத்­த­ரங்­கம் மற்­றும் இலக்­கி­ய­வ­னம் போன்ற நிகழ்ச்­சி­களில் பேசு­வ­தற்கு சிறந்த வாய்ப்­ப­ளிக்­கப்­படும்.

இந்­நி­கழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­க­வும், சிறப்­புப் பேச்­சா­ள­ரா­க­வும் பேரா­சி­ரி­யர் அ. வீர­மணி கலந்து கொண்டு சிறந்த பேச்­சா­ள­ராக

ஆவ­தற்கு யுத்­தி­கள் என்ற தலைப்­பில் உரை­யாற்­று­கி­றார்.

தமிழமுதம் பருக அழைக்கிறார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.