வயது ஒரு தடையல்ல; பந்தய நடையே உயிர்

வயது ஒரு தடையல்ல; பந்தய நடையே உயிர்

3 mins read
d7c3de72-2e1c-41d5-be90-2892e6194fc3
-

அனுஷா செல்­வ­மணி

எதேச்­சை­யாக விளை­யாட்­டுத் திற­னா­ள­ரா­கிய கோமதி ராம­லிங்­கம் ஜெய­ரா­மன், புது­மை­யா­னப் பாணி­யில் முட்­டியை மடக்­கா­மல், ஒரு கால் எப்­பொ­ழு­தும் தரை­யில் இருந்­த­வாறே, பந்­தய நடை­யில் கடந்த 20 ஆண்­டு­க­ளாக ஈடு­பட்டு வரு­கி­றார். வேக நடை பற்­றி­தான் நம்­மில் பலர் கேள்­விப்­பட்­டி­ருப்­போம். ஆனால் கோமதி ஈடு­படும் பந்­தய நடை அதி­கப் போட்­டித்­தன்­மை­மிக்­க­தா­கும்.

சிறு வய­தி­லி­ருந்தே விளை­யாட்­டு­களில் அதிக ஈடு­பாடு காட்டி வரும் கோமதி, பள்­ளிப் பரு­வத்­தில் ஹாக்கி விளை­யா­டு­வ­தில் தொடங்கி, தற்­போது உடற்­ப­யிற்­சிக்கு அதி­க­ள­வில் முக்­கி­யத்­து­வம் தந்து வரு­கி­றார்.

இவருக்கு 61 வய­தா­கி­விட்­ட­போ­தி­லும் உடற்­ப­யிற்­சிக் கூடங்­களுக்­குச் செல்ல தயங்­கா­மல், உடல் ஆரோக்­கி­யத்­திற்கு அன்­றா­டம் நேரத்தை ஒதுக்­கு­கி­றார்.

40 வய­தாக இருந்தபோது விளை­யாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்கினார். 'நியூ பேப்­பர் பிக் வாக்' எனும் நடைப்போட்­டி­யில் பங்­கெடுத்தார். அதில் பத்து கிலோ­மீட்­டர் நடைப் போட்­டி­யில் பங்கெடுத்த கோமதி, எதிர்­பாரா வித­மாக சிறப்­பாக செய்­தார்.

கோம­தி­யின் ஆற்­ற­லைக் கண்ட சிங்­கப்­பூர் மாஸ்­டர் திடல்தடப் போட்டியைச் சேர்ந்த ஒரு­வர், பந்தய நடையில் அவருக்குப் பயிற்சி அளிக்க முன்வந்தார். பல மாதங்­கள் பயிற்சி மேற்­கொண்ட பிறகு, பந்தய நடையை தன் வசப்­படுத்தி, கோமதி உள்­ளூ­ரி­லும் வெளி­நாடுகளிலும் பல போட்­டி­களில் களமிறங்கத் தொடங்­கி­னார்.

24 மணி நேரத்­தில் 100 கிலோ­மீட்­டர் நடை, 12 மணி நேரத்­தில் 79 கிலோ­மீட்­டர் நடை போன்­றவை, இவர் பங்கெடுத்த குறிப்­பி­டத்­தக்­கப் போட்­டி­களில் சில. குறிப்­பிட்ட வய­துக்­குப் பின் விளை­யாட்­டு­களில் ஈடு­பட தொடங்­கிய கோமதி, வயது ஒரு தடை­யல்ல என்­கி­றார்.

ஆசி­ரி­ய­ராகப் பணிபுரியும் இவர், வேலைக்­குப் போக தொடங்­கி­ய­தும் பர­ப­ரப்­பாக மாறிய வாழ்க்­கைச் சூழ­லி­லும் மெது­வோட்­டம், நடைப்­ப­யிற்சி போன்­ற­வற்றை செய்து வந்­தார்.

இரு­ப­து­க­ளி­லும் முப்­ப­து­க­ளி­லும் இருக்­கும் தமது மூன்று மகன்­களும் உடல் நலத்­தில் அதீத கவ­னம் செலுத்­து­ப­வர்­கள் என்று பகிர்ந்த கோமதி, பந்­தய நடை­யின் மீதான நாட்­டம் தமது மகன்­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்­ட­தாகக் கூறினார்.

பள்ளி விளை­யாட்­டுப் போட்டி­களில் மகன்­கள் பங்­கெ­டுத்­த­தைக் கவ­னித்து வந்த கோமதி, தானும் அவர்­க­ளைப் போல போட்­டி­களில் கள­மி­றங்க வேண்டு­மென்று விரும்­பி­னார்.

மகன்­க­ளின் செயல்­பா­டு­கள் கோம­திக்கு ஊக்­கு­விப்­பாக அமைந்­தன. அவை அவ­ருக்கு உத்­வே­கத்தை ஏற்­ப­டுத்­தி­ன.

உடற்­ப­யிற்­சி­யில் அதிக நாட்­டம் கொண்­­டுள்ள குடும்­பத்­தி­லிருந்து வரு­வது தமக்கு மகிழ்ச்­சி­யைத் தரு­வ­தாக கோமதி பெரு­மி­தத்­து­டன் கூறி­னார்.

பந்­தய நடை மூலம் பல

நட்­பு­ற­வு­களை வளர்த்­துக்­கொண்­ட­தோடு, இவ­ரைப் போன்ற பிற பந்­தய நடை வீரர்­க­ளு­டன் ஒவ்­வொரு வார­மும் சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் பல இடங்­களில் அதி­கா­லை­யி­லேயே நடக்கச் சென்­றும் விடு­கி­றார்.

பந்தய நடை நட்­பு­ற­வு­களை வளர்த்­துக்­கொண்­ட­து­டன் தமது உட­லையும் மனதையும் சீராக வைத்திருக்க உதவுவதாக கோமதி கூறு­கி­றார். 60 வய­துக்கு மேலா­கி­யும் நோயின்றி ஆரோக்­கி­ய­மாக வாழ்­வதை அவர் சுட்­டி­னார். வாரத்­திற்கு நான்­கி­லி­ருந்து, ஐந்து முறை பந்­தய நடைப் பயிற்சி­களை மேற்­கொள்­ளும் கோமதி, இதைத் தவிர்த்து யோகா­ச­னம் செய்­வ­தி­லும் தசை­களை வலுப்­படுத்­து­வ­தற்­காக குறைந்­த­பட்­சம் ஒரு மணி நேர­மா­வது உடற்­பயிற்சிக்கூடத்­தி­லும் நேரத்­தைச் செல­வி­டு­கி­றார்.

1960களி­லும் 1980களி­லும் சிங்­கப்­பூ­ரில் பந்­தய நடை மிகப் பிர­ப­ல­மாக இருந்­தது என்ற கோமதி, நாள்போக்­கில் மெது­வோட்­டம் இளை­யர்­கள் மத்­தி­யில் பிர­ப­ல­மா­கி­யது எனக் கூறி­னார்.

பந்­தய நடை­யின்­போது ஒரு­வர் இடுப்பை ஆட்டிக்கொண்டு நடப்­ப­தால், சில சம­யங்­களில் பார்ப்­ப­தற்­குக் வேடிக்கையாக இருக்­கும் என்­றா­லும், இதைத் தவிர்த்து வேறு எந்த விளை­யாட்­டி­லும் தனக்கு ஆர்­வ­மில்லை என்று கோமதி தெரி­வித்­தார்.

பந்­தய நடை­யில் ஈடு­ப­டு­வதைத் தொடங்­கி­யப்­போது இருந்த சகிப்­புத்­தன்மை இப்­போது குறைந்­தி­ருந்­தா­லும் அதை ஒரு முட்­டுக்­கட்­டை­யாக எடுத்­துக்­கொள்­ளா­மல், தன்­னால் முடிந்த வரை வாழ்க்கை முழு­வ­தும் அதில் தொடர்ந்து ஈடு­ப­டத் திட்­ட­மிட்­டுள்­ளார் கோமதி.

தன்­னு­டைய 80 வயது தாயா­ரும் நேரம் கிடைக்­கும் போதெல்­லாம் நடைப் பயிற்­சி­யில் ஈடு­படு­வ­தாக கோமதி கூறி­னார்.

உடற்­ப­யிற்­சிக்­குப் பிறகு உட­லில் வலி ஏற்­பட்­டால், சோர்ந்­து­வி­டா­மல், நன்கு ஓய்வு எடுத்த பிறகு மீண்­டும் அதில் ஈடு­பட வேண்­டும் என்­றார் கோமதி.

பந்­தய நடை­யி­னால் தமக்­குப் பல காயங்­கள் ஏற்­பட்­டி­ருந்­தா­லும் துவண்­டு­போ­கா­மல், தக்க மருத்­துவ உத­வியை நாடி மீண்­டும் அதில் தொடர்ந்து ஈடு­ப­டு­கி­றார்.

டெங்கி காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­போ­தும் நடைப்­பயிற்சி­யில் ஈடு­பட்ட அனு­ப­வத்­தைப் தமிழ் முர­சி­டம் பகிர்ந்­து­கொண்ட கோமதி, உடற்­ப­யிற்சி செய்­வது தன் ரத்­தத்­தில் ஊறிவிட்­ட­தா­கக் கூறி­னார்.

"என்­னு­டைய உடற்­ப­யிற்­சிப் பய­ணம் எனக்­குப் பல பலன்­களை அளித்­துள்­ளது. வய­தா­னா­லும் முடங்கிவிடா­மல், நம்­மால் முடி­யும் என்ற நம்­பிக்­கை­யுடன் கட்­டா­யம் உடற்­ப­யிற்சி மேற்­கொள்ள வேண்­டும்." என்று கோமதி முனைப்புடன் கூறினார்.