தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உழைப்பு மனிதனை ஏமாற்றுவது இல்லை

3 mins read
60dae64b-2fc3-4b2d-ae80-bbbcec5cc492
-
multi-img1 of 3

இன்று உழைக்கும் கரங்களைப் போற்றும் தினம். வானுயர கட்டடங்கள், வழவழப்பான சாலைகளைப் பார்க்கும்போது நாடு விட்டு நாடு வந்து இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டு இருப்பவர்களின் உழைப்பு தெரிகிறது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்கும் சிங்கப்பூர் நாட்டிற்கும் தங்களை நம்பி காத்திருக்கும் தங்களின் குடும்பத்திற்காகவும் உண்மையாக உழைக்கிறார்கள். அவர்களுள் கடினமாக உழைத்து உச்சத்தை எட்டியவரையும் தன்னைப் போன்ற ஊழியர்களுக்கு அன்னமிட்டு வாழும் ஒரு தாயுள்ளத்தையும் அறிந்து வந்தது தமிழ் முரசு.

மூன்று சகோ­த­ரி­க­ளுக்கு அண்­ண­னான சின்­னத்­தம்பி ராஜேஷ் ஆத­ர­வற்ற குடும்ப சூழல் கார­ண­மாக பிழைப்­புத் தேடி 1996ல் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார்.

மின்­ன­ணு­வி­ய­லில் பட்­டயக் கல்வி படித்­தி­ருக்­கும் ராஜேஷ் அதி­க­ள­வில் பணம் செலவழித்து சிங்­கப்­பூ­ருக்கு வர வேண்­டி­யி­ருந்­தது. இருப்­பி­னும் ஈராண்­டு­களில் அவ­ரு­டைய வேலை கைந­ழு­விப்­போ­னது.

அத­னால் இந்­தியா சென்ற அவர் ஒரு நாளைக்கு 18 வெள்ளி மட்டுமே சம்­ப­ளம் என்­றா­லும் அது அவ­ரு­டைய குடும்ப சூழ்­நி­லைக்கு வேண்டி இருந்­த­தால் மீண்­டும் சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யத் தொடங்­கி­னார்.

வேலை கிடைத்­து­விட்­டது என்று நிம்­மதிப் பெரு­மூச்சு விடு­வ­தற்­குள் வேலை­யிட விபத்து கார­ண­மாக அவ­ரு­டைய முழங்­கா­லில் முறிவு ஏற்­பட்­டது.

ஓராண்டு மருத்­துவ விடுப்­பில் இருந்­த­தால் மற்­ற­வர்­க­ளி­டம் கடன் வாங்கி வழக்­கம்­போல வீட்­டிற்கு அனுப்பி வந்­தார். மருத்­துவ விடுப்பு முடி­யும் நேரத்­தில் வேறு ஒரு நிறு­வ­னத்­தில் வேலைக்­குச் சேர்ந்­தார் ராஜேஷ்.

சொந்­தத் தொழில் செய்­ய­வேண்­டும் என்­பது அவ­ரு­டைய குறிக்­கோ­ளாக இருந்­தது. வெறும் 500 வெள்ளி செலுத்தி ஏக உரி­மை­யா­ள­ராக 2008ல் மின்­சாரப் பணி­களும் குளி­ரூட்டி குத்­த­கை­யா­ள­ரா­க­வும் 'எஃபிஷென்ட் எலக்ட்­ரி­கல் அண்ட் ஏர்­கோன் காண்ட்­ராக்­டர்' எனும் நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­னார்.

இரண்டு ஊழி­யர்­க­ளு­டன் தொடங்­கிய அவ­ரு­டைய தொழில் தற்­பொ­ழுது 22 ஊழி­யர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரு­கிறது. தன்­னு­டைய நிறு­வ­னத்தை தனி­யார் நிறு­வ­ன­மாக்கி 'எஃபிஷென்ட் எலக்ட்­ரி­கல் பிரை­வெட் லிமிடட்' என்று மாற்­றி­னார்.

இதற்­கி­டை­யில் அவர் தன்­னு­டைய மூன்று தங்­கை­க­ளுக்கு, தமிழகத்தில் தான் இல்லாத குறை தெரியாமல் திரு­ம­ணத்தை நடத்தி வைத்­தார்.

வேலை­யி­டத்­தில் ஏற்­பட்ட விபத்தை மன­தில்­கொண்டு தன்­னு­டைய ஊழி­யர்­க­ளுக்கு பதி­னைந்து நாள்­க­ளுக்கு ஒரு­முறை பாது­காப்பு பற்­றிய அமர்­வு­

க­ளுக்கு ஏற்­பாடு செய்து வேலை செய்­ப­வர்­க­ளின் பாது­காப்­புக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­தார்.

வருங்­கா­லத்­தில் நிறு­வ­னத்­தைப் பெரிய அள­விற்கு கொண்டுபோக வேண்­டும் என்ற இலக்கை வைத்­தி­ருக்­கும் ராஜேஷ், "நாம் வாழ்க்­கை­யில் வைத்­துள்ள குறிக்­கோளை நோக்கி பய­ணித்­தால்­தான் நம்­மால் முன்­னேற முடி­யும். குறிக்­கோள் வைத்­துக்­கொண்டு அதற்கு எந்த முயற்­சி­யும் செய்­யா­மல் இருந்­தால் எந்­தப் பய­னும் கிடைக்­காது. முயற்சி செய்­யா­மல் இருந்­தால் நான் என்றோ ஒரு மூலை­யில் முடங்­கி­யி­ருப்பேன்," என்று தன்­னு­டைய குறிக்­கோ­ளை­யும் தன் விடா­மு­யற்­சி­யை­யும் தமிழ் முரசிடம் பகிர்ந்­து­கொண்­டார் தற்­பொ­ழுது 45 வய­தா­கும் திரு சின்­னத்­தம்பி ராஜேஷ்.

தாயுள்­ளம் நிறைந்த கமலா

இல்­லப் பணிப்­பெண்­ணாக வேலை செய்து வரு­கி­றார் கமலா ராஜேந்­தி­ரன், 45. இவர் கடந்த பத்து மாதங்­க­ளாக மாதத்­திற்கு ஒரு முறை தன் கையால் சமைத்த உண­வினை கஃப் சாலை­யில் காத்­தி­ருக்­கும் ஊழி­யர்

களுக்கு வழங்கி வரு­கி­றார். சிறு­வ­ய­தில் தந்­தையை இழந்து வறு­மை­யில் வாடிய கம­லா­விற்கு 18 வய­தில் திரு­ம­ண­மாகி, மூன்று பிள்­ளை­க­ளுக்கு தாயா­னார்.

துபாய் சென்ற இவ­ரின் கண­வர் உயிரை மாய்த்­துக்­கொண்­டார் என்ற செய்­தி­யைக் கேட்டு கலங்­கிப்­போ­னார்.

இனி பிள்­ளை­க­ளுக்கு தான்­தான் வழி­காட்­ட­வேண்­டும் என்ற முடி­வு­டன் சிங்­கப்­பூ­ருக்கு பணிப்­பெண்­ணாக தன்­னு­டைய பய­ணத்­தைத் தொடர்ந்­தார்.

11 ஆண்­டு­கள் பணிப்­பெண்­ணாக வேலை செய்து மாதம் 550 வெள்ளி சம்­ப­ளத்தை தனக்­கென ஒதுக்­கிக்­கொள்­ளா­மல் பிள்­ளை­க­ளுக்கு முழு­மை­யாக அனுப்­பத் தொடங்­கி­னார்.

தமி­ழ­கத்­திலிருந்து வந்து

இங்கு கட்­டட வேலை செய்­யும் பலர் வீட்­டில் சமைக்­கும் உண­வுக்கு ஏங்­கு­வதை அறிந்­தார்.

கடந்த பத்து மாதங்­க­ளாக வீட்டு உரி­மை­யா­ள­ரின் அனு­ம­தி­யோடு தனது விடு­முறை நாளில் உணவு சமைத்து, அதைப் பொட்­ட­லம் போட்டு, பீச் ரோடில் இருந்து லிட்­டில் இந்­தியா வரை அந்த உண­வுப் பொட்­ட­லங்­களை தள்­ளு­வண்­டி­யில் வைத்து நடந்தே தள்­ளிக்­கொண்டு செல்­கி­றார். காலை தொடங்கி மாலை வரை வழி­யில் தென்­படும் ஊழி­யர்­க­ளுக்கு கொடுத்து வரு­கி­றார்.

அவர் எப்­போ­தும் வெள்ளை உடை­யு­டன் இருப்­ப­தால் பலர் அவ­ரைச் சந்­தே­கத்­து­டன் பார்த்­த­தா­க­வும் பகிர்ந்­து­கொண்­டார். யார் என்ன நினைத்­தா­லும் தன்­னு­டைய இந்­தச் சேவையை தொடர உறுதி பூண்­டி­ருக்­கி­றார் கமலா ராஜேந்­தி­ரன்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தங்குவிடுதி ஊழியர்களின் தற்போதைய வாழ்க்கைமுறையை சித்திரிக்கும் சிறப்புக் காணொளியைப் பார்க்க 'கியூஆர்' குறியீட்டை வருடவும்.