தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருக்குறளைப் போற்ற ஒரு வாய்ப்பு

2 mins read
ea4c080a-bb8a-49b7-b385-046f8ebcc5a0
-

மோன­லிசா

திருக்­கு­ற­ளின் ஆழ்ந்த வாழ்­வி­யல் கருத்­து­களை வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் எடுத்­துச்­செல்­லும் நோக்­கில் அண்­மை­யில் திருக்­கு­றள் எழு­தும் நிகழ்ச்சி ஒன்று தமி­ழ­கத்­தைச் சார்ந்த வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்­காக நடத்­தப்­பட்­டது.

'லிஷா' எனப்­படும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கத்­தின் ஏற்­பாட்­டில் இந்­திய கலா­சார திரு­விழா­வை­யொட்டி நடை­பெற்ற இந்­நி­கழ்­வில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் நிலை­யத்­தைச் சேர்ந்த 50க்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பங்­கேற்­ற­னர்.

கடந்த 23ஆம் தேதி காலை 11 மணி­மு­தல் மதி­யம் 1 மணி­வரை பெர்ச் சாலை­யின் திறந்­த­வெ­ளி­யில் நடை­பெற்ற இந்­நி­கழ்­வின் முதற்­கட்­ட­மாக 'ஆத்­தி­சூடி' செய்­யு­ளி­லி­ருந்து ஏதே­னும் மூன்று மேற்­கோள்­களை எழு­து­மாறு ஊழி­யர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

இவற்­றைச் சரி­யாக எழு­திய 20 ஊழி­யர்­கள் நடு­வர்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு திருக்­கு­ற­ளின் வெவ்­வேறு அதி­கா­ரங்­க­ளி­லி­ருந்து தலா ஐந்து குறள்­கள் எழு­தி­னர். குறட்­பாக்­களை எழு­திய ஊழி­யர்­களைப் பாராட்­டும் வித­மாக என்­டியுசி பேரங்­கா­டிப் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­பட்­டன.

நிகழ்­வின் கடைசி அங்­க­மா­கத் தமக்­குப் பிடித்த திருக்­கு­ற­ளை­யும் அந்த குறள் தன்­னு­டைய வாழ்­வில் ஏற்­ப­டுத்­திய தாக்­கத்­தை­யும் ஊழி­யர்­கள் மேடை­யே­றிப் பகிர்ந்­து­கொண்­ட­னர். நிகழ்­வில் கலந்­து­கொண்ட அனை­வ­ருக்­கும் திருக்­கு­றள் புத்­த­க­மும் மதிய உண­வும் வழங்­கப்­பட்­டன.

இந்­நி­கழ்­வில் கலந்­து­கொண்­ட­வர்­களில் ஒரு­வ­ரான மூத்த ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் முர­ளி­த­ரன் லெட்சு­ம­ணன், 48, "நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து திருக்­கு­றள் எழு­தி­ய­தும் அதைப் பற்றி பகிர்ந்­து­கொண்­ட­தும் சொந்த ஊரில் இருப்­ப­தைப் போன்ற உணர்­வை­யும் அதிக உற்­சா­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யது," என்று கூறி­னார்.

கட்­டு­மா­னத்­து­றை­யில் பணி­பு­ரி­யும் ஜான் டெண்­டுல்­கர், 31, "குறட்­பாக்­களை எழு­தி­ய­போது பள்­ளிக் காலம் நினை­வுக்கு வந்­தது. இந்­தப் புத்­த­கத்தை இனி தினந்­தோ­றும் படிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளேன்," என்று கூறி­னார்.