கேன்பரா சமூக மன்றத்தில் சித்திரைத் திருவிழா

கேன்பரா சமூக மன்றத்தில் சித்திரைத் திருவிழா

2 mins read
17ce8f98-0a2b-4972-baef-cc9735de2119
-

தமிழ்ச் சமூ­கத்­தின் பாரம்­ப­ரிய விழா­வாக சித்­தி­ரைத் திரு­விழா கொண்­டா­டப்­ப­டு­கிறது. இதை முன்னிட்டு கேன்­பரா சமூக மன்­றத்­தின் இந்­திய நற்­ப­ணிச் செயற்­குழு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. கடந்த 23ஆம் தேதி­யன்று காலை 10 மணி முதல் மதி­யம் 1.30 மணி வரை நிகழ்ச்சி நடை­பெற்­றது.

விழா­வில் கேன்­பரா சமூக மன்ற அடித்­தள ஆலோ­ச­க­ரான டாக்­டர் லிம் வீ கியக் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

பாலர் பள்ளி மற்­றும் தொடக்­க­நிலை மாண­வர்­களை உள்­ள­டக்கி இரண்டு பிரி­வு­க­ளாக மாறு­வேடப்­போட்டி மற்­றும் வண்­ணம் தீட்­டும் போட்­டி­கள் நடத்­தப்­பட்­டன. ஐந்து வெள்ளி நுழை­வுச்­சீட்­டு­டன் கூடிய இந்த நிகழ்ச்­சி­யில் எல்லா நுழை­வுச்­சீட்­டு­களும் விற்­றுத் தீர்ந்­தன.

தமிழ்க் குடும்­பங்­க­ளோடு மற்ற இனத்­த­வ­ரும் மிகுந்த ஆர்­வத்­து­டன் இந்த நிகழ்ச்­சிக்கு ஆத­ரவை வழங்­கி­னார்­கள். அத்­து­டன் கேன்­பரா சமூக மன்ற இந்­திய நற்­ப­ணிச்­செ­யற்­கு­ழு­வின் பெண்­கள் குழு, முதி­யோர் குழு மற்­றும் விளை­யாட்­டுக் குழு­வி­னர் இந்த நிகழ்ச்­சியை வெற்­றி­க­ர­மாக நடத்த முழு ஒத்­து­ழைப்­பை­யும் வழங்­கி­னார்­கள்.

மாறு­வே­டப்­போட்­டி­யில் கண்­ணகி, பார­தி­யார், வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மன், வேலு­நாச்­சி­யார், ஔவை­யார் ஆகிய பாத்­தி­ரங்­களாக வேட­மிட்டு தொடக்­க­நிலை மாண­வர்­களும் பாலர் பள்ளி மாண­வர்­களும் தங்­க­ளின் திற­மை­க­ளைக் காட்­டி­னர்.

இந்த நிகழ்ச்­சி­யில் சிறப்பு அங்­க­மாக பட்­டி­மன்­றம் ஒன்­றும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழ­கத்­தின் நிறு­வ­னர் திரு யூசுப் ராவுத்­தர் ரஜித் தலை­மை­யில் இந்­தப் பட்­டி­மன்­றம் நடை­பெற்­றது. மரி­யாதை என்­பது இன்று வய­துக்கா? திற­மைக்கா? என்று கேள்வி எழுப்­பிய இந்­தப் பட்­டி­மன்­றத்­தில் 'வய­துக்கே' என்ற அணி­யில் முனை­வர் ராஜி ஸ்ரீநிவா­சன், திரு இரா­மன் குருந்­த­லிங்­கம் நிர்­மல், செல்­வன் சுந்­த­ர­வ­டி­வேலு ப்ர­பவ் ஆகி­யோரும் 'திற­மைக்கே' என்ற அணி­யில் திரு­மதி இசக்­கி­செல்வி, திரு­மதி நபி­லா­நஸ்­ரின் செல்­வன் ரோகித்­கு­மார் சொக்­க­லிங்­கம் ஆகி­யோ­ரும் பேசி­னர்.

சிறப்பு விருந்­தி­னர் டாக்­டர் லிம் நிகழ்ச்சி அங்­கங்­க­ளைப் பாராட்­டி­ப் பேசியதை அடுத்து போட்­டி­யா­ளர்­க­ளுக்­குச் சான்­றிதழ்­க­ளை­யும் பரி­சு­க­ளை­யும் வழங்­கி­னார்.