தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடல் நலமே உடல் நலம்

6 mins read
70b1730c-2f3f-4f46-964e-50efa2a4af25
-

எலும்பு, நரம்பு, தசை­கள் மூன்­றும் வலு­வாக இருப்­பது நல­மான வாழ்­வுக்கு முக்­கி­யம் என்று அனைத்து வகை­யான மருத்­து­வங்­களும் குறிப்­பிட்­டுள்­ளன. இந்த மூன்­றை­யும் வலுப்­ப­டுத்­தக்­கூ­டி­யவை இயற்கை உண­வு­ வகைகள். உடற்­பயிற்சி செய்­தா­லும் முறை­யான உணவு கட்­டா­ய­மா­கிறது.

அன்­றா­டம் காலை­யில் பப்­பாளி, பேரீச்சை, அத்­திப் பழம் போன்­ற­வற்­று­டன் பால் சாப்­பிட உடல் உறுதிபெறும்.

ஆப்­பிள், முந்­திரி, பால் மூன்­றை­யும் சேர்த்து உண்­டால் சதை, நரம்பு, எலும்பு மூன்­றும் வலுப்­பெறும்.

அதே­போல் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்­தி­ரி­பருப்பு, அக்­ரூப் பருப்பு, சாரப்­பருப்பு, சாலான் மிஸ்­திரி, சபேத் மிஸ்ரி, வெள்­ளரி விதை, பூசணி விதை இவை­ய­னைத்­தை­யும் சம அளவு கலந்து பொடி­யாக வைத்­துக்­கொண்டு அன்றாடம் காலை­யில் பாலில் கலந்து ஒருவேளை உணவாகச் சாப்­பி­டும்­போது நல்ல பலன் கிடைக்­கும்.

முருங்­கைக்­கீரை, நாட்­டுக்­கோழி முட்டை, மிளகுத்தூள் இவற்றைச் சேர்த்து வைத்து தொடர்ந்து விடா­மல் 48 நாட்­கள் சாப்­பிட்­டால் எலும்பு மண்­ட­லம், நரம்பு மண்­ட­லம், தசை மண்­ட­லம் மூன்­றும் பலப்­ப­டும்.

இந்த மூன்று மண்­ட­லங்­களும் ஒழுங்­காக முறை­யாக இருக்­கும்­போது செரி­மான மண்­ட­லம் முறை­யாக வேலை செய்­யும்.

செரி­மான மண்­ட­லத்­தில் உண்­ணும் உணவு, சத்­தாக மாற்­றப்­பட்டு உட­லில் உறிஞ்­சப்­ப­டு­கிறது. எனவே, உணவு உட­லில் சேர முறை­யான செரி­மா­னத்­தன்மை வேண்­டும்.

அதற்கு எலும்பு, நரம்பு, தசை மண்­ட­லங்­கள் ஒழுங்­கா­கச் செயல்­பட வேண்­டும். இவற்றை வலுப்­ப­டுத்­தக்­கூ­டிய இயற்கை உண­வு­ வகைகளைத் தொடர்ந்து உண்ணும்­போது செரி­மான சக்தியும் வலுப்­படும்.

ஒரு­வர் நல­மு­டன் வாழ்­வ­தற்கு நோய் எதிர்ப்புச் சக்தி எவ்­வ­ளவு முக்­கி­யமோ அந்­த­ள­விற்கு குடல் நல­மும் முக்­கி­யத்­தும் வாய்ந்­தது.

எண்­ணெய், நெய் சேர்த்த உணவு, பேக்­கிங் உணவு, துரித உண­வு­ வகைகள் போன்­றவை உட­லில் மாவுச்­சத்தை மிக அதிக­ மாக்­கு­கின்­றன. எந்த அள­வுக்கு மாவுப் பொருளைக் குறைத்து இயற்கை உணவை உண­வில் சேர்க்­கி­றோமோ அந்த அள­விற்கு நல்ல உடல் நலம் பெறும்.

நோய்­க­ளுக்கு மூல­மாக செரி­மான மண்­ட­லம் இருக்­கிறது. செரி­மா­ன­மண்­ட­லக் கோளாறு இல்­லா­மல் இருக்க வரகு, தினை, குதிரை வாலி, சாமை, கம்பு, சோளம், ராகி போன்ற சிறு­தா­னி­யங்­கள் சார்ந்த உணவை அதிகம் சாப்­பிட வேண்டும்.

காலை உணவை பழ, கீரை உண­வா­க­வும் மதிய உணவை சிறு­தா­னி­யங்­கள் சேர்த்த உணவாகச் சாப்­பிட்டு வரும்­பொழுது செரி­மா­னக்­கோ­ளாறு இல்­லாத தன்மை இருக்­கும்.

செரி­மா­னக்­கோ­ளாறு உள்­ள­வர்­கள் நார்ச்­சத்து உள்ள உணவையும் கால்­சி­யம் சத்­துள்ள உண­வை­யும் தொடர்ந்து சாப்பிட வேண்­டும்.

மதிய உண­வில் மாவுச்­சத்தை எந்த அள­விற்கு குறைக்­கி­றோமோ அது நரம்­பு­க­ளுக்கு நல்­லது.

குடல் பெரி­தா­கத் தொடங்­கி னால் கண்­டிப்­பாக உடல் பெரிதாகிவி­டும். உடல் உப்ப ஆரம்பித்து­வி­டும். குடல் பலமே உடல்­பலம் என்று சொல்­வார்­கள்.

குடல் நல்ல பல­மாக இருப்­ப­வ­ரி­டம் நம்­பிக்­கை­யை­யும் சுறு­சு­றுப்­பை­யும் செயல்­பாட்­டை­யும் பார்க்­க­லாம். குடல் பல­கீ­ன­மாக இருந்தால் உணவு சரி­யில்லை எனக்கொள்ள­லாம்.

குடல் என்­பது செரி­மான மண்­ட­லத்­தின் முக்­கிய அம்­சம். செரி­மா­ன­மண்­ட­லம் ஒழுங்­காக, முறை­யா­கச் செயல்­பட மாவுச்­சத்தைக் குறைத்து சமச்­சீர் உணவை உட்­கொள்ள வேண்­டும். புர­தம், இரும்பு, கால்­சி­யம், நார்ச்­சத்து ஆகிய நான்­கும் முறை­யா­கக் கிடைக்­கும் உணவை உண்­ண­லாம்.

உணவுக்குப் பின் செய்யக்கூடாதவை

 உணவு உண்ட பின்னர் தூங்குவது, தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வது, குளிப்பது ஆகியவை கட்டாயம் செய்யக்கூடாதவை என்று ஆயுர்வேதம் சொல்கிறது. பாரம்பரிய மருத்துவமுறைப்படி இச்செயல்கள் செரிமான மண்டலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

 உண்ணும் உணவைப் பொறுத்து அது உடலில் சேர்ந்து செரிமானம் அடைய சில மணி நேரங்கள் வரை ஆகலாம். அதனால் சாப்பிட்ட உடன் பசிப்பது போலிருக்கும். ஆனால் சாப்பிட்டதும் நொறுக்குத் தீனி சாப்பிடக் கூடாது.

 சாப்பிட்டதுமே பழங்கள் சாப்பிடுவதும் தண்ணீர் அருந்துவதும் செரிமானத்துக்கு பங்கம் விளைவிக்கின்றன. உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது பின்னர் பழம் சாப்பிடலாம். சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீர் குடிக்கலாம்.

 மதி­யம் சாப்­பிட்ட உடனே தூக்­கம் வரக்­கூ­டாது. மதிய உணவு அன்­றைய வேலை­களை, குறிப்­பாக மூளை சார்ந்த வேலை­க­ளைத் தொடர்ந்து செய்ய ஊட்­டம் தரு­வ­தாக இருக்கவேண்டும்.

செரிமானத்தை மேம்படுத்தும் உணவு

காய்­கறி, கீரை, பயறு வகை­கள்

அதிக நார்ச்­சத்­து­மிக்க காய்­க­றி­கள் செரி­மா­னத்தை எளி­தாக்­கு­வ­தோடு ரத்­தத்­தின் சர்க்­கரை அள­வை­யும் கட்­டுக்­குள் வைக்­கும்.

கடு­குக் கீரை, வெந்­த­யக் கீரை, பச­லைக்­கீரை போன்ற கீரை­களில் நார்ச்­சத்து அதி­கம் இருக்­கிறது. இது செரி­மான சக்­தியை அதி­கரிக்­கும்.

முந்­திரி, பிஸ்தா, பேரீச்சை, பாதாம், வால்­நட் போன்ற உலர் பழங்­களும் உட­லுக்கு சக்­தி­யைக் கொடுக்­கும்.

மூலி­கை, மசா­லாப் பொருள்­கள்

ஏலக்­காய், ஜாதிக்­காய், மஞ்சள், இஞ்சி, மிள­காய், பட்டை மற்­றும் கிராம்பு போன்ற அனைத்­துமே செரி­மான சக்­தியைத் தூண்­டக்­கூடி­ய­வை­. இவை நோயெதிர்ப்புச் சக்­தி­யை­யும் அதி­க­ரிக்­கும்.

இஞ்சி- செரி­மா­னத்­துக்கு முக்­கி­ய­மான திர­வங்­க­ளை இஞ்சி ஊக்­கு­விக்­கும். இதில் உள்ள ஜிஞ்­ச­ரால் எனும் எண்­ணெய் வயிற்­றில் செரி­மான அமி­லம் உண­வைக் கரைக்­கும்­போது வெளிப்­படும் வாயுவை வயிறு, குடல், உண­வுக்­கு­ழா­யில் தேங்­க­வி­டா­மல் வெளி­யேற்­று­கிறது.

உண­வுக்­குப் பின்­னர் ஒரு மணி நேரம் கழித்துப் பால் சேர்க்­காத இஞ்சி டீ குடிக்­க­லாம்.

புதினா- வாயு­ப்பி­டிப்பு, வலி, எரிச்­சல், புளிப்பு ஏப்­பம் உள்­ளிட்ட சிர­மங்­கள் இல்­லா­மல் உணவு எளி­தில் செரி­மா­ன­மாக உதவும்.​​​​​​​

லவங்­கம்- இதில் உள்ள ஆன்­டி­ஆக்­ஸி­டன்­டு­கள் செரி­மா­னத்­துக்கு உத­வு­கின்­றன. செரி­மான அமி­லத்­தால் வெளி­யா­கும் வாயு­வின் அள­வைக் கட்­டுப்­ப­டுத்து கிறது. இத­னால் வாயுப்­பி­டிப்பு, வயிற்று உப்­பு­சம், குமட்­டல் உணர்வு நீங்­கும். செரி­மான நொதி­ கள் தயா­ரிப்பை ஊக்­கு­விக்­கும்.

ஓமம் - ஓமத்­தில் உள்ள தைமோல் பீனால், செரி­மான நொதி­கள் தயா­ரிப்பை ஊக்­கு­விக்­கிறது. அரை தேக்­க­ரண்டி ஓமத்தை, ஒரு குவளை தண்­ணீ­ர்விட்டு அரைக் குவ­ளை­யாகும்வரை கொதிக்க வைத்து, தின­மும் காலை, மாலை பருக வயிற்று மந்­தம் குண­மா­கும்.

சீர­கம்- இரும்பு, கால்­சி­யம், பி காம்ப்­ளெக்ஸ் வைட்­ட­மின்­கள், ஆன்­டி­ஆக்­ஸி­டன்­டு­கள் உள்ள மூலி­கைச் செடி சீர­கம். இரைப்பை ஒவ்­வா­மை­யைக் குண­மாக்­கு­கிறது. நுண்­தொற்­றுக்­க­ளி­டம் இருந்து இரைப்­பை­யின் உட்­ப­கு­தி­யைப் பாது­காக்­கிறது. நாள்­பட்ட செரி­மா­னக் கோளா­றால், மலக்­கு­ட­லில் ஏற்­படும் ரத்­தக்­குழாய் வீக்­கத்­தைத் தடுக்க உதவு­கிறது.

வெந்­த­யம்- வைட்­ட­மின்­கள் ஏ, சி, கே, கால்­சி­யம், இரும்­புச்­சத்து, பொட்­டா­சி­யம், ஃபோலிக் அமி­லம் உள்­ளது. கெட்ட கொழுப்பைக் குறைக்­கும். வெந்­தை­யத்தை இரவு தண்­ணீ­ரில் ஊற­வைத்து, அதி­கா­லை­யில் வெறும் வயிற்­றில் சாப்­பி­டு­வது சிறந்­தது.

நல்ல கொழுப்பு

செரி­மா­னம் சீராக நடைபெற தேவை­யான நல்ல கொழுப்பு உட­லில் சேர்வது அவ­சி­யம். இந்த உண­வு­கள் சாப்பிட்ட நிறைவைக் கொடுப்­ப­தோடு, ஊட்­டச்­சத்­தை­யும் உட­லுக்கு வழங்­கு­கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமி­லங்­கள் நிறைந்த உண­வு குடல்­வீக்க நோய்­க­ளைத் தடுக்­கும்.

பானங்­கள்

காபி, டீ, சாக்­லெட் போன்ற பானங்­க­ளைக் குடிக்­கும் முன் அவற்­றில் செறிந்­தி­ருக்­கும் கேல­ரி­யை கவ­னத்­தில் கொள்ளவேண் டும். மேலும் இது செரி­மான பிரச்­சி­னைக்­கும் வழி­வ­குக்­கும்.

பச்­சைத் தேநீர்- இதில் உள்ள பாலி­பீ­னால் என்­னும் ஆன்­டி­ஆக்­ஸி­டன்ட் கொழுப்பை ஆக்­ஸி­டைஸ் செய்­கிறது. மேலும், இன்­சு­லின் சுரப்பை அதி­க­ரித்து, சர்க்­கரை அள­வைக் கட்­டுக்­குள் வைத்­ தி­ருக்க உத­வு­கிறது. சாப்­பிட்ட ஒரு மணி நேரத்­துக்­குப் பிறகு 50 மி.லி பச்­சைத் தேநீர் (கிரீன் டீ) அருந்­து­வ­தால் செரி­மா­னம் எளி­தா­கும். ஒரு நாளில் 100 மில்லி மட்­டும் அருந்­து­வது நல்­லது.

வெந்­நீர்- சாப்­பிட்­ட­வு­டன் குளிர்ந்த நீர் பரு­கு­வ­தால், உண­வில் கலந்­துள்ள எண்­ணெய் இறு­கு­கிறது. இத­னால் செரி­மா­னம் தாம­தப்­ப­டு­கிறது. மித­மான சூடுள்ள நீர் பருகி­ னால் உண­வுப் பொருள் எளி­தில் உடை­யும். கடி­ன­மான உண­வு­களில் உள்ள நச்­சுத்­தன்மையை நீக்க வெந்­நீர் உத­வு­கிறது. இரவு உண­வுக்­குப் பின்­னர், வெந்­நீர் பரு­கு­வ­தால் சிறு, பெருங்­கு­டல் செயல்­பாடு தூண்­டப்­ப­டு­கிறது. அத­னால், மலம் இளகி, மலச்­சிக்­கல் நீங்­கும். வயிற்று வலி, உப்­பு­சத்­தைத் தடுக்­கும்.