'சிங்கப்பூருக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது'

'சிங்கப்பூருக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது'

2 mins read
d4803d88-e606-4703-845f-883a0e62ec2e
இவ்­வாண்­டின் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் சிங்­கப்­பூர் 51 தங்­கப் பதக்­கங்­களை வென்­றது.43 வெள்­ளிப் பதக்­கங்­கள், 64 வெண்­க­லப் பதக்­கங்­கள் ஆகி­ய­வற்­றை­யும் வென்­ற­னர் சிங்­கப்­பூ­ர் வீரர்­கள். படம்: சீன ஊடகக் குழுமம் -

நோம்­பென்: இவ்­வாண்­டின் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் சிங்­கப்­பூர் 51 தங்­கப் பதக்­கங்­களை வென்­றது.

இந்த விளை­யாட்­டு­களில் சிங்­கப்­பூர் தொடர்ந்து மேம்பாடு கண்டு வந்­துள்ளது.

எனி­னும், இத­னு­டன் நின்­று­விடா­மல் இனி ஆசிய, ஒலிம்­பிக் விளை­யாட்­டு­கள் போன்ற பெரிய அள­வி­லான விளை­யாட்­டு­களிலும் சிறந்து விளங்­கு­வது குறித்து சிங்­கப்­பூர் சிந்­திக்­க­வேண்­டும் என்று எஸ்­எஸ்ஐ எனப்­படும் சிங்­கப்­பூர் விளை­யாட்­டுக் கழ­கத்­தின் தலை­வர் சு சுன் வெய் கூறி­யுள்­ளார்.

43 வெள்­ளிப் பதக்­கங்­கள், 64 வெண்­க­லப் பதக்­கங்­கள் ஆகி­ய­வற்­றை­யும் இவ்­வாண்டின் தென்­கிழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் வென்­ற­னர் சிங்­கப்­பூ­ர் வீரர்­கள். பதக்­கப் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூர் ஆறா­வது இடத்­தைப் பிடித்­தது.

மேலும், இதற்கு முன்பு தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் மூன்றே முறை­தான் சிங்­கப்­பூர் 51க்கும் அதி­க­மான தங்­கப் பதக்­கங்­களை வென்­றி­ருக்­கிறது.

சொந்த மண்­ணில் நடை­பெற்ற 2015ஆம் ஆண்டு தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் சிங்­க­ப்­பூர் வர­லாறு காணாத அள­வில் 84 தங்­கப் பதக்­கங்­களைக் குவித்­தது. அதற்கு அடுத்­த­ப­டி­யாக 2017ஆம் ஆண்­டில் 58, 2019ஆம் ஆண்­டில் 53 தங்­கப் பதக்­கங்­களை வென்­றது.

"ஆசிய, உல­க­ள­வில் முத்­திரை பதிப்­ப­தற்­கான ஆற்­றல் நம்­மி­டம் நிச்­ச­ய­மாக உள்­ளது. இன்­னும் சொல்­லப்­போ­னால் சில விளை­யாட்­டு­களில் அவ்வாறு முத்­திரை பதிக்­கத் தொடங்­கி­விட்­டோம். இனி தொடர்ந்து சிறப்­புத் தேர்ச்சி பெறு­வ­தில் கவ­னம் செலுத்­த­வேண்­டும்.

"வாள்வீச்­சு­ விளையாட்டு ஒரு நல்ல எடுத்­துக்­காட்டு. தென்­கிழக்­கா­சி­யா­வில் ஆகச் சிறந்த நாடு­களில் ஒன்­றாக விளங்­க­முடி­யும் என்ற நம்­பிக்கை தற்­போது சிங்­கப்­பூ­ரி­டம் இருக்­கிறது. அடுத்த­ப­டி­யாக ஆசி­யா­வில் சிறந்து விளங்­க­மு­டி­யுமா என்ற கேள்வி இயல்­பா­கவே எழும்," என்று இவ்­வாண்­டின் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­க­ளுக்­குப் பிறகு நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் டாக்­டர் சு குறிப்­பிட்டார்.

22 வய­துக்கு உட்­பட்ட விளை­யாட்­டா­ளர்­க­ளுக்­கான சிங்­கப்­பூர் ஆண்­கள் தேசிய காற்­பந்து அணியின் செயல்பாடு மிகுந்த ஏமாற்­றத்­தைத் தந்­தது. அதைப் பற்றியும் டாக்­டர் சு பேசி­னார்.

இந்த விவ­கா­ரத்­தில் பொறுமை தேவை என்­று அவர் சுட்­டி­னார்.

"சிங்­கப்­பூர்க் காற்­பந்­துச் சங்­கம் இதைக் கருத்­தில்­கொண்­டுள்­ளது. அதன் அதி­கா­ரி­கள் தங்­க­ளுக்­குள் நிலை­மையை ஆராய்­வர். நிலை­மையை ஆராய சங்­கத்­துக்கு நாம் கால அவ­கா­சம் வழங்­க­வேண்­டும். அணி­யின் தற்­போ­தைய நிலை என்­ன­வென்­பது நமக்கு இப்­போது நன்­றா­கவே தெரி­யும். என்ன நட­வ­டிக்­கை­கள் எடுக்­க­வேண்­டும், எத்­த­கைய உறு­தி­யான முடி­வு­களை எடுத்து ஆக்­க­பூர்­வ­மான முயற்சிகளை மேற்­கொள்­ள­வேண்­டும் என்­பதை இனி சிங்­க­ப்பூர்க் காற்­பந்­துச் சங்­கம் தீர்­மா­னிக்­க­வேண்­டும்," என்று டாக்­டர் சு சொன்­னார்.

"அணி­யின் செயல்திறன் மேம்­ப­ட­வேண்­டும். அது உட­ன­டி­யாக நடக்­காது. சங்­கம் நிலை­மையை ஆரா­ய­வும் அணி அதன் தவ­று­களை அடை­யா­ளங்­கண்டு பாடம் கற்­றுக்­கொள்­ள­வும் நேரம் வழங்­கு­மாறு நான் அனை­வ­ரை­யும் கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்றும் அவர் கூறினார்.