தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனித முத்தத்தின் முதல் பதிவு 4,500 ஆண்டுக்கு முந்ைதயது

1 mins read
7bda4f99-c9a7-4c00-9d95-85653a720952
-

பாலி­யல், சிற்­றின்­பம், வாழ்க்­கை­யில் உணர்­வு­பூர்­வ­மான நிறைவு குறித்து பண்­டைய சமஸ்­கி­ருத உரை­யான காம­சூத்­ராவை இந்­தியா உல­கிற்கு வழங்­கி­யி­ருக் கலாம். எனி­னும், உல­கின் முதல் உதட்­டோடு உதடு பொருத்­திக் கொடுக்­கும் முத்­தம் இந்­தி­யா­வில்­தான் தோன்­றி­யது என்ற இது­நாள் வரை­யி­லான கருத்தை மாற்­றும் ஆய்வு முடி­வு­கள் வெளி­வந்­துள்­ளன.

உதட்­டோடு உதடு சேர்த்து முத்­த­மி­டு­வது பண்­டைய மெச­பத்­தோ­மி­யா­வில் கிட்­டத்­தட்ட கி.மு. 2,500 ஆண்­டு­களுக்கு முன்­னர், அதா­வது 4,500 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் பதி­வாகி இருப்­ப­தாக அக்­கட்­டுரை கூறி­யது.

முத்­தம் வாய்­வழி பர­வும் நோய்­க­ளைப் பரப்­பு­வ­தற்கு உதவி­யி­ருக்­க­லாம் என்று கூறு­வ­தற்கு ஆதா­ரங்­கள் உள்­ள­தாக 'ஜர்­னல் சயன்ஸ்' எனும் இத­ழில் அறி­வியலாளர்கள் தெரி­வித்­துள்­ள­னர்.

முந்­தைய ஆய்­வு­க­ளின்படி, உதட்டு முத்­தம் இந்­தி­யா­வி­ல் இ­ருந்து கிட்­டத்­தட்ட 3,500 ஆண்டு­க­ளுக்கு முன்­னர் தோன்­றி­யது எனக் கரு­தப்­பட்­டது.

அன்­பு­டன் பெற்­றோர் முத்­த­மிடு­வது பொது­வா­ன­தா­கத் தோன்­று­கிறது. எனி­னும், காமம் நிறைந்த உதட்­டோடு உதடு பொருத்­தும் காதல் முத்­தம் கலா­சார ரீதி­யாக உல­க­ளா­வி­ய­தாக காணப்­ப­ட­வில்லை. இது பெரும்­பா­லான பண்­டைய கலா­சா­ரங்­களில் அறி­யப்­பட்­டி­ருக்­க­வேண்­டும் என்று ஆராய்ச்­சி­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

மெச­பத்­தோ­மி­யா­வின் ஆரம்­ப­கால நூல்­களில் முத்­தம் சிற்­றின்­பச் செயல்­கள் தொடர்­பாக விவ­ரிக்­கப்­பட்­டது. காத­லிக்க பல வழி­கள் இருந்­தா­லும் காதலை வெளிப்­ப­டுத்த காத­லர்­கள் அடிக்­கடி பயன்­ப­டுத்­தும் உத்தி முத்­தம். இது நமது அப­ரி­மி­த­மான அன்­பின் வெளிப்­பா­டா­க­வும் இருக்­கிறது. இதன்­மூ­லம் உறவு பலப்­படு­வ­தாக நம்­பப்­ப­டு­கிறது. ஆனால், இதற்கு மற்­றொரு பக்­க­மும் உள்­ளது. முத்­த­மி­டு­வ­தன் மூலம் பலவகை­யான நோய்­களும் வர­லாம் என்­ப­தும் ஒரு மறுக்­க­முடி­யாத உண்மை.