புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 'பிளே ஆஃப்' சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது.
பூவா தலையாவில் வென்ற சென்னை முதலில் பந்தடித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சிவம் துபே, கான்வே ஜோடி அதிரடியாக ஆடியது. இருவரும் அரை சதம் அடித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 141 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், ருதுராஜ் 79 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கான்வே 87 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதையடுத்து, 224 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
சென்னை அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் டெல்லி அணி திண்டாடியது. 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அணித் தலைவர் டேவிட் வார்னர் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடினார்.
வார்னர் 87 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், டெல்லி அணி 146 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 'பிளே ஆப்' சுற்றையும் உறுதி செய்தது.
சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், பதீரனா, தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
மற்றோர் ஆட்டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை லக்னோ அணி தோற்கடித்தது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஓர் ஓட்டம் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

