பல்லுயிர் பன்முகத்தன்மையை போற்றும் விழா

பல்லுயிர் பன்முகத்தன்மையை போற்றும் விழா

2 mins read
3b635be2-c721-4c16-a40c-72c78e10db81
-

சபிதா ஜெய­கு­மார்

பல்­வேறு வகை­யான விலங்­கு­களும் தாவர இனங்­களும் வாழும் இயற்கை சூழந்த நக­ரம் சிங்­கப்­பூர். இந்­தக் கட்­டட நக­ரத்­தில் தாவ­ரங்­களும் விலங்­கு­களும் அவற்­றின் இயற்­கை­யான வாழ்­விடங்­களில் வாழ்­வது சிறப்பு.

தொழில்­துறை, அறி­வி­யல் புரட்­சி­கள் கடந்த ஆண்­டு­களில் இயற்­கை­யின் அழி­வுக்கு வழி­வகுத்­தன. அழிவை நிறுத்­த­வும் பல்­லு­யிர்­ பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை அதி­க­ரிக்­க­வும் அனைத்­து­லக பல்­லு­யிர் நாள் மே, 22ஆம் தேதி அன்று கொண்­டா­டப்­ப­டு­கிறது.

வெப்­ப­மண்­டல மழைக்­கா­டு­கள், சதுப்பு நிலங்­கள், பவ­ளப் பாறை­கள் சூழ்ந்த கடல்­ப­கு­தி­கள் என சிங்­கப்­பூ­ரில் செழிப்­பான பல்­லு­யிர் சூழல்­கள் உள்­ளன.

"390க்கும் அதி­க­மான பறவை வகை­கள், 2,000க்கும் அதி­க­மான இந்த நிலத்­துக்கே உரிய உயி­ர­னங்­கள் ஆகி­ய­வற்றைப் பதிவு செய்­துள்­ளோம்," என்று தேசிய பூங்கா வாரி­யம் கூறியது.

உல­கில் அதிக மக்­கள் தொகை நெருக்­கம் கொண்ட நாடு­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று. இருப்­பி­னும், இந்நாட்டுக்கே உரிய நில, நீர் வாழ் உயி­ரி­னங்­களை அதி­கம் கொண்­டுள்­ளது.

நான்கு இயற்­கைப் பாது­காப்பு வனப்­ப­கு­தி­கள், 18 இயற்கை பகுதி­கள் என்று சிங்­கப்­பூ­ரில் 22 இயற்கை தளங்­கள் உள்­ளன. நகரச் சூழலில் இத்தனை உயிர் இனங்­கள் வாழ்வது அரிது.

தேசிய பூங்கா வாரி­யம் இந்­நாளை முன்­னிட்டு பல்­லு­யிர் விழா­விற்கு ஏற்­பாடு செய்­துள்­ளது. வரும் சனி, ஞாயிறு இரு­நாட்­களும் ஹார்ட்­பீட்@பிடோக்­கில் நடைபெறும் இவ்விழாவில் பல நிகழ்ச்­சி­களுக்கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

"சிங்­கப்­பூ­ரின் இயற்கை அம்சங்­களைப் பாது­காக்க சமூ­கத்­தின் முயற்­சி­க­ளைக் கொண்­டாடு­கிறது ஆண்­டு­தோ­றும் இடம்­பெறும் இந்த விழா. நாட்­டின் தனித்­தன்மை வாய்ந்த பல்­லு­யிர் பன்­மு­கத்­தன்மை குறித்த சிங்­கப்­பூ­ரர்­க­ளின் புரிதலை யும் பங்களிப்பையும் அதி­க­ரிப்­ப­தும் நோக்­கம். விழாவை ஒட்டி இடம்­பெ­றும் பல்­வேறு நட­வ­டிக்­கைகளில் மக்­கள் கலந்­து­கொண்டு நாட்­டின் பல்­லு­யிர்கள் பற்றி புதிய தக­வல்­களைத் தெரிந்­து­கொள்­ள­லாம்," என்றார் தேசிய பூங்கா வாரி­யத்­தின் பல்­லு­யிர் நிலை­யத்­தின் குழும இயக்­கு­நர் ரையன் லீ.

sabitha@sph.com.sg