தென்கிழக்காசியாவின் தொடக்கம்: முப்பரிமாணக் கலைப் படைப்பு

1 mins read
e1b483c1-278d-4e28-881c-0d296972c2e5
-

கரு­ணா­நிதி துர்கா

இந்­தோ­னீசியா, மலே­சியா, பிலிப்­பீன்ஸ், சிங்­கப்­பூர், தாய்­லாந்து ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த பத்துக் கலை­ஞர்­க­ளின் படைப்பு­கள் மீள்­ப­டைப்­புச் செய்­யப்­பட்டு சிங்­கப்­பூர் தேசிய கலைக்­கூ­டத்­தில் காட்சிப்படுத்தப்­பட்­டுள்­ளன.

1980 முதல் 1990 வரை­யி­லான கால­கட்­டத்­தில் காணொளி வடி­வம் தோன்­றி­ய­தன் முக்­கி­ய­மான தரு­ணங்­க­ளைச் சித்­தி­ரிக்­கிறது 'சீ மி, சீ யு' (See Me, See You) என்று அழைக்­கப்­படும் இந்த கண்­காட்சி.

ஓவி­யங்­கள், சிற்­பங்­கள் போன்ற வழக்­க­மான கலை வடி­வங்­க­ளி­லி­ருந்து வேறு­பட்டு, புது­மை­யாக பார்­வை­யா­ளர்­களின் ஈடு­பாட்டை அதி­க­ரிக்­கும் நோக்­கில் காணொளிப் படைப்பு­களை அந்தக் கால கட்டத்தில் உரு­வாக்­கி­னர் அந்தக் ­க­லை­ஞர்­கள். மக்கள் தங்களை சுற்றியுள்ள நகரும் பிம்பங்களைப் பதிவு செய்வதன் மூலம் தங்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்த முடிகிறது.

வீடியோ கேம­ராக்­கள், காணொளி வடி­வத்­தின் கலாசார முக்­கி­யத்­து­வத்­தை­யும் காலப்­போக்­கில் அவற்­றின் அதி­வேக வளர்ச்­சி­யை­யும் இந்தக் கண்­காட்சி வெளிப்­ப­டுத்­து­கிறது.

கண்காட்சியில் ஒரு சுவா­ர­சி­ய­மான அம்­ச­மாக உயி­ருள்ள கோழி­கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும், தொழில்­நுட்­பம் சார்ந்த கலைப் படைப்­பு­களைப் பாது­காப்­ப­தில் உள்ள புதிய சவால்­களை இக்­கண்­காட்சி எடுத்­துக்­காட்­டு­கிறது.

இரு அங்­கங்­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்ள இக்­கண்­காட்­சியை பொது மக்­கள் இல­வ­ச­மாக கண்டுகளிக்­க­லாம்.

முதல் அங்­கம் மே 5ஆம் தேதி முதல் செப்­டெம்­பர் 17ஆம் தேதி வரை­யும்; இரண்­டாம் அங்கம் இவ்­வாண்டு அக்­டோ­பர் 13ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்­ர­வரி 4ஆம் தேதி வரை­யும் நடைபெறுகிறது.

dhurga@sph.com.sg