கதைக்களத்தின் 10வது ஆண்டுக் கொண்டாட்டம்

1 mins read
d2bf278e-3cec-41b0-af52-9223447ec461
-

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் கதைக்­க­ளம் அதன் 10வது ஆண்டு நிறைவை சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை சிங்­கப்­பூர் தேசிய நூல­கத்­தில் கொண்­டாடி­யது. கடந்த 10 ஆண்­டு­களில், 108 கதைக்­கள நிகழ்ச்­சி­களை கழ­கம் நடத்­தி­யுள்­ளது.

கவிச்­சோ­லை­யில் தொடங்கி கதைக்­க­ளம் வரை நீண்ட இலக்­கி­யப் பய­ண­மா­கக் கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­கள் தொடர்ந்து கழ­கம் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கிறது என்று கூறிய கழகத்தின் தலை­வர் திரு நா.ஆண்­டி­யப்­பன், 2013 மே மாதம் முதல் கவிச்­சோலைக்கு விடை தந்து, கதைக்­களம் நிகழ்ச்­சி தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்­தார்.

சிறு­க­தை­கள் எழு­து­வ­தற்கு வள­ரும் எழுத்­தா­ளர்­க­ளுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுப்­ப­தற்­காக நிறு­வப்­பட்ட கதைக்­க­ளம், பல விருது பெற்ற எழுத்­தா­ளர்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கிறது. அவர்­களில் சிலர் நூலும் வெளி­யிட்டு உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

நூல் அறி­மு­க­மும் கலந்­து­ரை­யா­ட­லும் அங்­கத்­தில் எழுத்­தா­ளர் இந்­தி­ர­ஜித்­தின் 'ஞானக் கூத்­தன்' நாவலை வாச­கர்­க­ளுக்கு அறி­மு­கம் செய்­தார் திரு­வாட்டி வானதி பிர­காஷ். தொடர்ந்து வாச­கர் உமா சங்­கர், திரு­வாட்டி பிரேமா ஆகி­யோ­ரும் நாவல் குறித்து பேசி­னர்.

அடுத்த மாதக் கதைக்­க­ளத்­தில் எழுத்­தா­ளர் லதா­வின் 'சீன­லட்­சுமி' சிறு­க­தைத் தொகுப்­பி­லுள்ள கதை­க­ளைப்­பற்­றிய கலந்­து­ரை­யா­டல் இடம்­பெ­றும். மே மாதக் கதைக்­க­ளத்­தில் வெற்­றி­பெற்ற படைப்­பு­கள் நிகழ்ச்­சி­யில் அறி­விக்­கப்­பட்­டன.