சாலையைக் கடக்கும்போது கைப்பேசியில் கவனம் கூடாது

சாலையைக் கடக்கும்போது கைப்பேசியில் கவனம் கூடாது

2 mins read
0f40e501-d4c0-49e2-b9b7-37e3fd33f9aa
-

சென்ற மாதம் சாலை­யைக் கடக்­கும்­போது கைப்­பே­சி­யைப் பயன்­ப­டுத்­தி­ய­வாறு நடந்து சென்ற ஆட­வர் ஒரு­வர் வாக­னம் மோதி அந்த இடத்­தி­லேயே மாண்­டு­விட்ட செய்தி நம் அனை­வ­ரை­யும் உலுக்­கி­யி­ருக்­கும். பாத­சா­ரி­கள் சாலை­யைக் கடக்­கும்­போது அவர்­க­ளுக்கு ஏற்­படும் இந்த அலட்­சி­யப் போக்­கிற்­கான கார­ணம் எத­னால் நில­வு­கிறது என்­பதை தமிழ் முரசு லிட்­டில் இந்­தி­யா­வில் சில பொது­மக்­க­ளி­டம் அண்­மை­யில் கருத்து கேட்டு அறிந்து வந்­தது.

சுய தொழில் செய்­யும் 59 வயது நகு­லன் ராம­சாமி, "சாலை­யைக் கடக்­கும்­போது கைப்­பே­சி­யில் பேசிக்­கொண்டு நடப்­பது மிக­வும் தவறு. சாலை­யைக் கடக்­கும் அந்த 30 விநா­டி­க­ளி­லும்­கூட ஒரு­வ­ரால் கைப்­பேசியைப் பயன்­ப­டுத்­தா­மல் இருக்க முடி­யாதா," என்று வின­வி­ய­தோடு எவ்­வ­ளவு அவ­ச­ர­மாக இருந்­தா­லும் பொறு­மை­யாக இருந்­தால் நம் உயி­ருக்கு ஆபத்து இல்லை என்று வலி­யு­றுத்­தி­னார்.

கப்­பல் கட்­டு­மா­னத் துறையில் பணி­பு­ரி­யும் 28 வயது சாமி­நா­தன் சர­வ­ணன், லிட்­டில் இந்­தி­யா­வின் கேம்­பல் சாலை­யைக் கடக்­கும் நேரத்­தில் கைப்­பே­சி­யைப் பயன்­ப­டுத்­தி­ய­வாறே நடந்து வந்­தார். சிறிது நேரம் சாலை­யைக் கடப்­ப­தற்­குள் கைப்­பே­சி­யைப் பயன்­படுத்த வேண்­டிய காரணத்தை அவ­ரி­டம் கேட்­ட­போது, "இன்று எனக்கு பிறந்­த­நாள், அத­னால் எனக்கு பலர் வாழ்த்­து­கள் அனுப்­பிக்­கொண்டே இருந்­தார்­கள். சாலை­யைக் கடக்­கும்­போது கைப்­பே­சி­யைப் பயன்­படுத்­து­வது தவறு தான். ஆனால் சில நேரங்­களில் அந்த அவ­ச­ரம் என் கண்ணை மறைத்து விடு­கிறது," என்று வருந்­தி­னார்.

இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூரில் வேலை பார்க்கும் வெளி­நாட்டு ஊழி­ய­ரான ராம்­கு­மார் மதி­ய­ழ­கன், 27, "நான் இங்கு நல­மாக இருந்­தால்தான் என்னை நம்பி வாழும் குடும்­பத்­தி­னர் இந்­தி­யா­வில் நிம்­ம­தி­யாக இருக்கமுடி­யும். சிங்­கப்­பூ­ரில் என்­னைப் பாது­காத்­துக்கொள்ள நான் மேற்­கொள்ளவேண்­டிய பல முயற்­சி­களில் சாலை­யைக் கடக்­கும்போது கைப்­பே­சி­யைப் பயன்­படுத்­தா­மல் இருப்­ப­தும் ஒன்று." என்­றார்.

"கைப்­பே­சி­யில் மூழ்கி விட்­டால் நம்மை சுற்றி என்ன நடக்­கிறது, நமக்கு எதி­ரில் எந்த வாக­னம் செல்­கிறது போன்­ற­வற்றை நாம் பார்ப்­பதே இல்லை. இத­னால் ஆபத்து நில­வி­னால் அது நாமே நமக்குத் தேடிக்கொள்­வது போல், அர­சாங்­கம் இதற்கு ஏதா­வது சட்­டத்தை அமல்படுத்­தி­னால்தான் மக்­கள் விழிப்­பு­டன் செயல்­ப­டு­வார்­கள்." என்று கரு­தி­னார் சுகா­தார உத­வி­யா­ளர் நடேஷ் பிரியா, 40.

வேலைப்­ப­ளு­வி­னால் சில வேளைகளில் தவிர்க்கமுடி­யாத சூழ்­நி­லை­களில் கைப்­பே­சி­யைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு சாலை­யைக் கடக்கவேண்­டிய சூழல் அமைந்து விடு­வ­தாக பொறி­யா­ள­ராக இருக்­கும் 40 வயது செந்­தில்­கு­மார் ஷண்­மு­கம் பகிர்ந்­து­கொண்­டார்.

தக­வல் தொழில்­நுட்ப திட்ட நிர்­வா­கி­யாக இருக்­கும் 42 வயது காஞ்­சனா சதிஷ், "அர­சாங்­கம் இது குறித்து சட்­டங்­களை அமல்­ப­டுத்தவேண்­டும், அல்­லது சாலை சந்­திப்­பு­களில் கைப்­பே­சி­யைப் பயன்­ப­டுத்­தி­ய­வாறே சாலை­யைக் கடக்கக்கூடாது எனும் எச்­ச­ரிக்­கைக் குறிப்­பு­க­ளை­யும் நிலைப்­ப­டுத்­த­லாம்." என்று பரிந்­து­ரைத்­தார்.

சாலை­யைக் கடக்­கும் நேரத்­தில் கைப்­பே­சி­யைப் பயன்­படுத்­து­வது தவறு என்ற விழிப்­பு­ணர்வு பொது­மக்­க­ளி­டம் இருந்­தா­லும் அது சில நேரங்­களில் அவ­ச­ரத்­தா­லும் வேலை கார­ணத்­தா­லும் பாத­சா­ரி­களின் கண்­க­ளைக் கட்டி விடு­கிறது.

அர­சாங்­கம் சட்­டங்­களை அமல்­ப­டுத்­தி­னா­லும் அவற்றைப் பாத­சா­ரி­கள் கவ­ன­மாக பின்­பற்­று­வது சாத்­தி­யமா என்­பது கேள்­விக்­கு­றி­­தான். ஒரு­வர் தனது குடும்ப உறுப்­பி­னர்­கள்மீதும் தன்மீதும் அக்­க­றைகொண்டு உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கும் வகை­யில் நடந்துகொள்­ளா­மல் பொறுப்பாக இருப்­பது சிறந்­தது.

அனுஷா செல்வமணி