சமையலைத் தொடங்குவதற்கு முன்பாகவே காய்கறிகளை வெட்டி, சமைப்பதற்குத் தேவை யான பாத்திரங்கள், பொருள் களைத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத் திரத்தை வைத்துவிட்டு ஒவ்வொரு பொருள்களாகத் தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் சமையல் எரிவாயு அதிகம் செலவாகும்.
சமைக்கும்போது மூடிவைத்து சமைக்கவேண்டும். ஈரமான பாத்திரங்களைத் தவிர்க்கவும்.
சமைப்பதற்கு முன்னதாக அரிசி, பருப்பு, பயறு வகைகளை சற்று நேரம் ஊறவைத்து சமைத் தால் சீக்கிரம் வெந்துவிடும். இதனால் எரிவாயு மிச்சமாகும்.

