பிள்ளைகள் தாய்மொழியைக் கற்க ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு அவசியம்

2 mins read
e9944081-6b78-449c-bd0d-45c63f6cfa5c
-

ஆண்­டு­தோ­றும் தமிழ்­மொழி கற்றல் வளர்ச்­சிக்­குழு, பாலர் பள்ளித் தமி­ழா­சி­ரி­யர்­க­ளுக்­கா­கப் பயி­ல­ரங்­கு­க­ளை­யும் கருத்­த­ரங்கு களை­யும் ஏற்­பாடு செய்து வரு­கிறது.

இவ்­வாண்டு 'தமிழ்­மொழி வகுப்­பறை­களில் விழு­மி­யங்­கள், சமூக மன­வு­ணர்வு சார்ந்த கற்­றல், கற்­றல் இயல்­பு­கள் ஆகி­ய­வற்றை வெளிப்­ப­டை­யா­கக் கற்­பித்­தல்' என்ற தலைப்பை ஒட்டி, உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் இம்­மா­தம் 26ஆம் தேதி காலை 8.30 முதல் மதி­யம் 1 மணி­ வ­ரை பயி­ல­ரங்கு ஒன்றுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அதில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட பாலர் பள்­ளித் தமி­ழா­சி­ரி­யர்­களும் ­கல்­வி­யா­ளர்­களும் இளம்­ப­ருவ வளர்ச்­சிக்­கான தேசி­யக் கல்­விக் கழக மாண­வர்­களும் க­லந்து கொண்­ட­னர்.

இப்­ப­யி­ல­ரங்­கில் முனை­வர் எஸ்.பி.ஜெய­ரா­ஜ­தாஸ் பாண்­டி­யன் முதன்மையுரை­யாற்­றி­னார். இவர் கல்வி அமைச்­சின் முன்­னாள் தமிழ்­மொழி முதன்மை ஆசி­ரி­ய­ரா­வார்.

இணைப்­ப­கிர்வு அங்­கங்­களை மக்­கள் செயல் கட்சி (மசெக) சமூக அற­நி­று­வ­னத்­தின் ஸ்பார்­கல்­டாட்ஸ் (செங்­காங் ஈஸ்ட்) பாலர் பள்­ளி­யைச் சேர்ந்த தமிழ்­ஆசி­ரி­யர் திரு­வாட்டி நஸ்­ரின் பானு சுராலி ஹபீப் முஹம்­மத், மசெக சமூக அற­நி­று­வ­னத்­தின் ஸ்பார்­கல்­டாட்ஸ் (காக்கி புக்­கிட்) பாலர் பள்­ளி­யைச் சேர்ந்த தமிழ்­ஆசி­ரி­யர் திரு­வாட்டி கேச­வன் பிந்து, கல்வி அமைச்­சின் பாலர் பள்ளி, எங்­கர் கிரீ­னில் பணி­யாற்­றும் ஆசி­ரி­யர் திரு­வாட்டி ஷப்­ரின் பேகம் ஷேக் லியா­கத் அலி ஆகி­யோர் படைத்­த­னர்.

"நம் பிள்­ளை­கள் பல்­லின, பன்­மொ­ழிச் சூழ­லில் வளர்­கி­றார்­கள். இத்­த­கைய சூழ­லில் வள­ரும் நம் பிள்­ளை­கள் நமது தாய்­மொ­ழியை ஆர்­வத்­து­டன் கற்க வேண்­டு­மெ­னில் அவர்­க­ளது வளர்ச்­சி­யில் ஆசி­ரி­யர்­கள் அர்ப் பணிப்புடன் முக்­கி­யப் ­பங்­காற்­ற­வேண்­டும்.

"குடும்­பம், பள்ளி, சமூ­கம் ஆகிய முத்­த­ரப்­பி­ன­ரும் இணைந்து­ செ­ய­லாற்­று­வ­து மிக அவ­சி­ய­ம். ஆகை­யால், தமி­ழா­சி­ரி­யர்­க­ளுக்கு ஆத­ரவு நல்­கவே தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக்­குழு பல்­வேறு ஆக்­க­பூர்­வ­மான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது," எனக் கூறி­னார் இப்­பயி­ல­ரங்­கிற்கு ஏற்­பாடு செய்­திருந்த தமிழ்­மொழி கற்­றல்­வளர்ச்­சிச் செயற்­குழு உறுப்­பி­னர் திரு­வாட்டி கௌரி சத்­தி­ய­மூர்த்தி.

முதன்­மை­ உரை­யி­லி­ருந்­தும் பகிர்­வு­க­ளில் இருந்­தும் பல முக்­கி­ய­மான உத்­தி­க­ளைக் கற்­றுக்­கொண்­ட­தா­கக் கல்வி அமைச்­சின் ஃபர்ஸ்ட் தோ பாயோ பாலர் பள்­ளித் தமிழா­சி­ரி­யர் திரு­மதி ஆனந்­த­வள்ளி குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இளம்­ப­ருவ வளர்ச்­சிக்­கான தேசி­யக் கல்­விக் கழ­கத்­தில் பயி­லும் மூன்­றாம் ஆண்டு மாண­வர் திரு ஜெராட் அல்­வின்­, ப­யி­ல­ரங்­கின்­ வ­ழியே கற்­றுக்­கொண்ட உத்­தி­களும் அறிந்துகொண்ட தக­வல்­களும் அவர் செப்­டம்­பர் மாதத்­தில் பாலர் பள்ளி ஆசி­ரி­ய­ரா­கப் பொறுப்­பேற்­ப­தற்கு அவ­ரை­ ஆ­யத்­தப்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறி­னார்.

ஜூன் மாதம் 22, 23ஆம் தேதி­களில் பாலர் பள்­ளித் தமி­ழா­சி­ரி­யர்­க­ளுக்­காக உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­ய­மும் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் ­கு­ழு­வும் 'கதை மற்­றும் பாவை­வழி மொழி­யும் பண்­பா­டும்' என்ற பயி­ல­ரங்கை நடைத்­த­வி­ருப்­ப­தாகச் செயற்­கு­ழுத் தலை­வர் திரு­வாட்டி மலர்­விழி அஞ்­சப்­பன் தெரி­வித்­தார்.