தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கண் ஆரோக்கியம் குறித்த பொதுவான நம்பிக்கைகள்

2 mins read

இரு­ளில் வாசித்­ததற்­காக நீங்­கள் திட்டு வாங்கியது உண்டா? அப்­ப­டி­யென்­றால், கண் ஆரோக்­கி­யம் குறித்து உங்­க­ளுக்கு சரி­யாக தெரி­யா­மல் இருக்­க­லாம்.

அமெ­ரிக்­கா­வில் பத்­தில் நால்­வ­ருக்கு கண்­பார்­வையை இழக்­கும் அபா­யம் நில­வு­வ­தாக நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையம் கூறு­கிறது.

ஆனால், பல கண் பிரச்­சி­னை­களும் குணப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டி­யவை அல்­லது தவிர்க்­கப்­ப­டக்­கூ­டி­யவை என்று மிச்­சி­கன் பல்­கலைக்­க­ழ­கத்­தின் கண் மருத்­துவத் துறை உத­விப் பேரா­சி­ரி­யர் ஜோஷுவா எர்­லிக் கூறு­கி­றார்.

கண் ஆரோக்­கி­யம் குறித்த பொது­வான நம்­பிக்­கை­கள் பற்­றி­யும் நிபு­ணர்­க­ளின் கருத்­து­கள் பற்­றி­யும் இங்கு பார்க்­க­லாம்.

1. மின்னணுச் சாதனங்களை அல்லது நூலை மிக நெருக்கமாக பார்ப்பது கண்களுக்கு நல்லதல்ல

சரி. நீண்­ட­நே­ர­மாக மிக அரு­கில் பொருள்­க­ளைப் பார்ப்­பது கண்­க­ளுக்கு நல்­ல­தல்ல என்று டாக்­டர் ஸு சியாவ்­யிங் கூறு­கி­றார்.

குறிப்­பாக, சிறு­வர்­கள் அவ்­வாறு செய்­யும்­போது கரு­விழி நீள­ம­டைந்து, காலப்­போக்­கில் கிட்­டப்­பார்வை ஏற்­ப­டக்­கூ­டும்.

கண்­களில் அழுத்­தம் ஏற்­படு­வ­தைக் குறைக்க, 20-20-20 விதி­யைப் பின்­பற்­று­மாறு டாக்­டர் ஸு பரிந்­து­ரைக்­கி­றார். இரு­பது நிமி­டங்­க­ளுக்கு நூல் வாசித்த பின்­னர், குறைந்­தது 20 வினா­டி­க­ளுக்கு குறைந்­தது 20 அடி தூரத்­தில் எதை­யா­வது பார்க்க வேண்­டும்.

2. இருளில் வாசிப்பதால் கண்பார்வை மோசமடையலாம்

தவறு. எனி­னும், போதிய வெளிச்­சம் இல்­லாத கார­ணத்­தால் கண்­க­ளுக்கு அரு­கில் நூலை அல்­லது கைக்­க­ணி­னியை வைத்­தால், மேற்­கூ­றப்­பட்ட அபா­யங்­கள் அதி­க­ரித்து கண்­க­ளுக்கு அழுத்­தம் ஏற்­படக்­கூ­டும்.

இத­னால் தலை­வலி ஏற்­ப­டக்­கூ­டும் என்­ப­து­டன் கவ­னம் செலுத்­து­வ­தற்கு சிர­ம­மா­க­லாம். ஆனாலும், இவை தற்­கா­லி­க­மான அறி­கு­றி­களே என்­கி­றார் டாக்­டர் ஸு.

3. வெளிப்புறத்தில் கூடுதல் நேரம் செலவிடுவதால் கண்பார்வைக்கு நல்லது

சரி. வெளி­ந­ட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தால் கிட்­டப்­பார்வை ஏற்­படும் சாத்­தி­யம் குறைவு என்­பதை சிறார்­களை மைய­மாகக் கொண்டு நடத்­தப்­பட்ட சில ஆய்வு முடி­வு­கள் காட்­டு­வதாக கலி­ஃபோர்­னியா பர்க்லி பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் மாரியா லியு கூறு­கி­றார்.

வெளிச்சமான சூழல், 'டோப்பமின்' எனும் ரசாயனத்தை விழித்திரை உற்பத்தி செய்ய ஏதுவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் கருவிழி நீளமடையும் சாத்தியம் குறைவாக இருக்கும்.