தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாஞ்சாங்கில் அன்னையர் தினக் கொண்டாட்டம்

1 mins read
dc3a98d2-1fa3-4104-8287-52923fb3f9ce
-

புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்­றத்­தில் இந்தியர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வின் 30ஆம் ஆண்டு நிறைவை முன்­னிட்டு சென்ற சனிக்­கி­ழமை மே 27ஆம் தேதி அன்­னை­யர் தினம் கொண்­டா­டப்­பட்­டது. இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு, சிண்டா, கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்சு, பல இன, சமய நன்­னம்­பிக்கை வட்டம் (ஐஆர்­சிசி) ஆகிய அமைப்பு­களு­டன் இணைந்து ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்­நி­கழ்ச்­சி­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியாங் எங் ஹுவா சிறப்பு விருந்­தி­ன­ராகப் பங்­கேற்­றார்.

நிகழ்ச்­சி­யில் 85 வய­துள்ள மூத்த குடி­மக்­க­ளான இந்­திய, சீன, மலாய் அன்­னை­யர்­கள் கிரீ­டம் சூட்டி சிறப்­பிக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு அன்­ப­ளிப்­பு­களும் வழங்­கப்­பட்­டன. ஆடல், பாடல், விளை­யாட்டு போன்ற அங்­கங்­களும் இடம்­பெற்­றன. அன்­னை­யர் தங்­க­ளின் அன்னை குறித்த நினை­வு­களை­யும் பகிர்ந்­து­கொண்­ட­னர்.