கவிமாலை சந்திப்பு

கவிமாலை சந்திப்பு

2 mins read
114defa6-e060-4d22-a38e-c57422b66dd3
-

தொண்­டூ­ழி­யர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் வகை­யில் இம்­மா­தம் 27ஆம் தேதி தேசிய நூலக வாரி­யக் கட்­ட­டத்­தில் 'கவி­மாலை கூடல் 276' எனும் மாதாந்­திர நிகழ்வு நடை­பெற்­றது.

'சங்­கத்­தில் பாடாத கவிதை' எனும் தலைப்­பில் முனை­வர் மன்னை க.இரா­ஜ­கோ­பா­லன் சிறப்­பு­ரை­யாற்­றி­னார். கவி­ய­ரசு கண்­ண­தா­சன், கவி­ஞர் வாலி மற்­றும் பல பாட­லா­சி­ரி­யர்­கள், கவி­ஞர்­க­ளின் திரைப்­படப் பாடல்­களை அழ­காக பாடி­யும் அதனை விளக்­கி­யும் அவர் பேசி­னார்.

'படித்­த­தில் பிடித்­தது' அங்­கத்­தில் கவி­ஞர்­களும் பார்­வை­யா­ளர்­களும் தங்­க­ளுக்­குப் பிடித்த கவி­தை­களை நிகழ்­வில் பகிர்ந்­த­னர். பின்­னர், கார்ப்­ப­ரே­ஷன் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­கள் இளை­யர் முர­சில் வெளி­வந்த கவி­தை­களை வாசித்­த­னர்.

அத­னைத் தொடர்ந்து மே மாதக் கவி­தைப் போட்­டி­யின் தலைப்பு 'இர­யில் பய­ணங்­கள்' போட்­டிக் கதை­க­ளைத் தேர்­வு­செய்து அதன் கருத்­து­ரையை வழங்­கி­னார் திரு A.T. பிள்ளை. பின்பு போட்­டிக் கவி­தை­களை கவி­ஞர்­கள் வாசித்­தும் அத­னை­யொட்டி சிறு கலந்­து­ரை­யா­ட­லும் நடை­பெற்­றது.

ஏப்­ர­லில் நடந்­தே­றிய தமிழ்­மொழி விழா நிகழ்­வில் 'அழகு' என்ற கருப்­பொ­ரு­ளில் பொதுப் பிரி­வுக்­கான கவி­தைப் போட்­டியை கவி­மாலை நடத்­தி­யது. அதில் வெற்­றி­பெற்ற முதல் மூன்று கவி­தை­களின் கருத்­துரையை திரு மாரி­முத்து வழங்­கி­னார்.

மே மாத கவி­தைப் போட்­டி­யின் வெற்­றி­யா­ளர்­க­ளுக்­குப் பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன. முதல் பரி­சான 50 வெள்­ளியை திரு ம.சர­வண குமாரும் இரண்­டாம் பரி­சான 30 வெள்­ளியை திரு தின­க­ர­பாண்­டி­யன், திரு மு.செ.பிர­காஷ், திரு இராம நாச்­சி­யப்­பன் ஆகி­யோ­ரும் மூன்­றாம் பரி­சான 20 வெள்­ளியை திரு­மதி தேன்­மொழி, திரு ரெங்­க­நா­தன் ஷ்யாம்­கு­மார், திரு­மதி சங்­கீதா ஆகி­யோரும் பெற்­றுக்­கொண்­ட­னர். மர­புக் கவி­தைக்­கான முதல் பரி­சான 50 வெள்­ளியை திரு வெற்­றிச்­செல்­வன் பெற்­றார்.

கவி­மா­லை­யின் முக­நூல் படக்­கவிதைப் போட்­டிக்­கான புத்­த­கப் பரிசை திரு­மதி தேன்­மொழி, திரு­மதி வெண்­ணிலா, திரு ம.சர­வண குமார், திரு­மதி ரத்­தி­னாம்­பிகை ஆகி­யோர் பெற்­ற­னர்.

திரு ம.சர­வண குமார் நிகழ்ச்­சியை நெறி­யா­ளுகை செய்­தார்.

அடுத்த ஜூன் மாத கவி­மா­லை­யின் போட்­டிக் கவி­தைக்­கான தலைப்பு 'வெயி­லோடு உற­வாடி'. போட்­டிக் கவி­தை­களை அனுப்ப வேண்­டிய இறுதி நாள் ஜூன் 18ஆம் தேதி. அடுத்த கவி­மாலை நிகழ்வு ஜூன் 24ஆம் தேதி சனிக்­கி­ழமை நடை­பெ­றும்.