விசாக தினம் உலகம் முழுவதும் இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்றது, வீடுபேறு அடைந்தது ஆகியவற்றை இந்நாள் குறிக்கிறது. பௌத்தர்கள் பௌத்த ஆலயங்களில் சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நாளில் செய்யப்படும் நற்செயல்கள் பன்மடங்காக பல்கிப் பெருகும் என்பது பௌத்த சமயத்தவரின் நம்பிக்கையாக உள்ளது. ஆகவே, இந்நன்னாளில் நாம் மற்றவர்களுக்கும் நமக்கும் நன்மை அளிக்கக்கூடிய நற்செயல்களில் நம்மை அர்ப்பணித்துக்கொள்ளுதல் அவசியம்.
புத்தர் சிலையின் மேல் நீர் ஊற்றி தங்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்வழிப்படுத்தும்படி புத்த மகானிடம் பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.
விசாக தினத்தன்று கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள், விலங்குகளை விடுவிப்பதும் வழக்கம். சிலர் ஆமைகளை நீரில் மிதக்க விடுவர். தாமரைப் பூக்களைக் கொண்டுசென்றும் வழிபாடு நடத்துவர்.

