கதைக்களத்தில் சீனலட்சுமி (உரையாடல்)

2 mins read

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் கதைக்­க­ளம் நிகழ்ச்சி நாளை மாலை 4.00 மணிக்கு, சிங்­கப்­பூர்த் தேசிய நூல­கத்­தின் ஐந்­தா­வது தளத்­தில் 'இமே­ஜி­னே­ஷன்' அறை­யில் நடை­பெ­ற­

இருக்­கிறது.

சிங்­கப்­பூர் போன்ற நக­ரத்­தில் பெண்­க­ளின் உள­வி­ய­லின் போக்­கைப் பல்­வேறு கதைச் சூழல்­

க­ளா­லும் கதை மாந்­தர்­க­ளி­னா­லும் கட்­ட­விழ்க்­கும் லதா­வின் 'சீன­லட்­சுமி' நூலை அறி­மு­கம் செய்­கி­றார் தமிழ் இலக்­கிய

ஆர்­வ­லர் திரு­வாட்டி அனு­ராதா வெங்­க­டேஸ்­வ­ரன். அத­னைத் தொடர்ந்து நூலா­சி­ரி­ய­ரு­டன் கலந்­து­ரை­யா­ட­லும் இடம்­பெ­றும்.

கதைக்­க­ளத்­திற்கு வந்­தி­ருக்­கும் போட்­டிப் படைப்­பு­க­ளைப் பற்­றிய கலந்­து­ரை­யா­ட­லும் வெற்­றி­யா­ளர்­க­ளுக்­குப் பரி­சு­களும் வழங்­கப்­படும். இளை­யர்

பிரக்­தீஷ் பங்­கேற்று, நெறிப்­ப­டுத்­தும் இந்­நி­கழ்ச்­சிக்கு உங்­கள் அனை­வ­ரை­யும் அன்­பு­டன் அழைக்­கி­றோம்.

ஜூலை மாதக் கதைக்­க­ளத்­தில் பல்­வேறு விரு­து­களை வென்ற எழுத்­தா­ளர் ஷாந­வா­ஸின் 'மூன்­றா­வது கை' சிறு­க­தைத் தொகுப்­பின் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெ­றும். ஆகவே அந்த நூலை வாசித்து உங்­கள் கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள வாருங்­கள்.

அடுத்த மாத நூல் அறி­மு­கப் போட்­டிக்கு, சிங்­கப்­பூர்த் தேசிய நூல­கத்­தி­லுள்ள நூல் ஒன்­றுக்கு 140 சொற்­க­ளுக்­குள் நயம்­பட நூல­றி­மு­கத்தை எழுதி அனுப்ப வேண்­டும். சிறந்த 4 நூல் அறி­மு­கங்­க­ளுக்கு ரொக்­கப் பரி­சு­களும் காத்­தி­ருக்­கின்­றன.

மூன்று பிரி­வு­க­ளாக நடை­

பெ­றும் ஜூலை மாத சிறு­கதை எழு­தும் போட்­டிக்­குக் கதை

எழு­து­வ­தற்­கான தொடக்க

வரி­கள்:

உயர்­நி­லைப் பள்ளி மாண­வர் பிரிவு: 200 முதல் 300 வார்த்­தை­க­ளுக்­குள் எழுத வேண்­டும்.

"எல்­லாம் தெரி­யும் என்ற தலைக்­க­னம்­தான் எல்­லாத்­துக்­கும் கார­ணம் என்­பதை இப்­போ­தா­வது உணர்ந்­தாயா?" என்று கேட்­டார் அப்பா.

இளை­யர் பிரிவு: 300 முதல் 400 வார்த்­தை­க­ளுக்­குள் சிறு­

க­தையை எழுத வேண்­டும்.

'முதன் முத­லாக வேலைக்­குச் சென்ற நாளை, இப்­போது நினைத்­தா­லும் சிரிப்­பு­தான் வரு­கிறது.'

பொதுப்­பி­ரிவு: 400 முதல் 500 வார்த்­தை­க­ளுக்­குள் சிறு­க­தையை எழுத வேண்­டும்.

கைகளில் சுமந்­தி­ருந்த நான்­கைந்து பைக­ளை­விட மனத்­தின் பாரம் தாங்க முடி­யா­த­தாக இருந்­தது.

மேற்­கண்ட படைப்­பு­க­ளைக் கணி­னி­யில் அச்­சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்­னி­யல் படி­வத்­தின் வழி­யாக 23/06/2023 வெள்­ளிக்­கி­ழ­மைக்­குள் அனுப்பி வைக்­க­வும். வெற்­றி­பெ­றும் படைப்­பு­க­ளுக்கு ரொக்­கப் பரி­சு­கள் காத்­தி­ருக்­கின்­றன!

மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு:

http://singaporetamilwriters.com/kathaikalam/ திரு­வாட்டி கிருத்­திகா, செய­லா­ளர் kiruthikavirku@gmail.com திரு­வாட்டி பிரேமா மகா­லிங்­கம் 91696996 என்ற எண்களில் தொடர்புகொள்ளவும்.