தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்து நாளை கலந்துரையாடல்

2 mins read

சிங்­கப்­பூர்த் தமி­ழ­றி­ஞர் திரு சுப. திண்­ணப்­ப­னார் துணைத் தலை வராக அங்­கம் வகித்த மலே­சி­யப் பேரா­சி­ரி­யர் டான்­ஸ்ரீ டி.மாரிமுத்து தலை­மை­யி­லான பன்னாட்டு உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட மாநாட்­டுக்­குழு 11வது உல­கத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை இந்த ஆண்டு ஜூலைத் திங்­கள் 21, 22, 23 ஆகிய மூன்று நாள்­களில் மலே­சி­யா­வின் தலை­நகரம்

கோலா­லம்­பூ­ரில், யுனி­வர்­சிட்டி மலா­யா­வு­டன் இணைந்து நடத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

சார்ஜா லிங்­கன் தொழில் மேலாண்­மைப் பல்­க­லைக்­க­ழ­கம், தஞ்­சைத் தமிழ்ப் பல்­க­லைக்கழ­கம், அண்­ணா­மலை, மதுரை காம­ரா­சர், மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார், காரைக்­குடி அழ­கப்பா போன்ற 15 பல்­க­லைக் கழ­கங்­க­ளின் ஆத­ர­வு­டன் இந்த மாநாடு பெரிய அள­வில் நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

மாநாட்டை மலே­சி­யா­வின் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் தொடங்­கி­வைக்­க­லாம் என்­றும் தமி­ழக அர­சின் ஆத­ரவு கிடைக்கும் என்­றும் நம்­பப்­ப­டு­கிறது.

மாநாட்­டில் கலந்துகொள்­வ­தா­கத் தமி­ழ­கம் உள்­பட அனைத்து நாடு­களின் முக்­கியமான அர­சி­யல் தலை­வர்­கள், தமி­ழ­றி­ஞர்­கள், ஆர்­வ­லர்­கள், பல்­வேறு அமைப்­பி­ன­ரும் உறுதி யளித்து வரு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து சிலர் மாநாட்­டில் கலந்­து­கொண்டு ஆய்­வுக் கட்­டு­ரை­கள் படைத்­து சிங்­கைக்­குப் பெருமை சேர்க்க உள்­ள­னர்.

இது தொடர்­பாக ஏற்­கெ­னவே சிங்­கை­யில் பெரும்­பான்­மை­யான தமிழ் அமைப்­பு­கள் 28.3.2023ல் ஒன்று­கூடி முடி­வெ­டுத்­த­படி திரு மு. அரி­கி­ருஷ்­ணன், திரு மா. அன்­ப­ழ­கன் ஆகிய இரு­வ­ரின் கூட்டு முயற்­சி­யால் இதற்­கான ஆயத்­தப் பணி­கள் மேற்கொள்­ளப்­பட்­டன.

தமி­ழ­கத்­தி­லி­ருந்து, மாநாடு தொடர்­பாக மலே­சி­யா­விற்­குச் சென்று ஆய்வு செய்­து­விட்­டு சிங்­கப்­பூ­ருக்கு வருகை தரவிருக்­கும் மாநாட்­டின் பொதுச்செய­லா­ளர் திரு நந்­தன் மாசிலாமணி­யு­டன் நாளை 11ஆம் தேதி ஞாயி­றன்று காலை 10 மணிக்கு கலந்­து­ரை­யா­டல் நடை­பெற உள்­ளது.

எண் 1, பீட்டி சாலை­யில் அமைந்­துள்ள சிண்­டா­வின் மூன்­றாம் தளத்­தில் திரு ஆர். தின­க­ர­னின் வழி­காட்­டு­த­லு­டன் நடை­பெ­ற­வி­ருக்­கும் அந்­நி­கழ்வுக்கு வர விரும்­பு­வோர் நேரடியாக வர­லாம்.

மாநாட்­டிற்கு ஜூலை 20ஆம் தேதி மதி­யம் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து கோலா­லம்­பூ­ருக்கு தரை­வ­ழி­யா­கப் போய்ச் சேரு­வ­தா­க­வும் மாநாடு முடிந்­த­வு­டன் அதே­போல் திரும்­ப­வும் பய­ணத்­திற்­கான இல­வச ஏற்­பா­டு­களை மாநாட்டு ஏற்­பாட்­டா­ளர்­களே செய்து தரு­வ­தா­க­வும் தற்­போது அறி­வித்­துள்­ள­னர்.

அது­த­விர மாநாட்­டில் பங்­கேற்­போ­ருக்கு நான்கு நாள் தங்­கும் விடுதி, உணவு, போக்­கு­வ­ரத்து உள்ளிட்ட வச­தி­க­ளைச் செய்­து­தர ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வருகின்­றன. இதற்­காக மாநாட்­டுப் பதி­வுக் கட்­ட­ண­மான யுஎஸ் $80 உள்­ளிட்ட மொத்­தம் 330 வெள்ளி செல­வா­கும் எனக் கணக்­கி­டப்­பட்­டி­ருக்­கிறது. மாநாட்­டில் பங்­கேற்க விரும்­பு­வோர் முன்­கூட்­டியே பதி­வு­செய்து கொள்­ள­வும்.

முன்­தொ­கை­யாக ஜூன் 30க்குள் S$100யை அன்­ப­ழ­க­னின் கைப்பேசி எண்­ணுக்கு 90053043 'பேநவ்' மூலம் அனுப்பிவிட்டு வாட்ஸ்அப்­பில் தக­வல் தெரி­விக்­க­வும்.