தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் உலக அழகிப்போட்டி

1 mins read
7bd6bf1b-2b1f-46c5-aa4a-bbd8f4f5ff74
-

இந்­தி­யா­வில் 27 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு 'மிஸ் வேர்ல்ட்' உலக அழ­கிப் போட்டி இந்த ஆண்டு நடை­பெற உள்­ள­தாக அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யாகி உள்ளது. இந்­தியா கடை­சி­யாக 1996ஆம் ஆண்டு அனைத் துலகப் போட்­டியை நடத்­தி­யது.

ஏறக்­கு­றைய மூன்று தசாப்­தங்­க­ளை நெருங்க உள்ள நிலையில், 'மிஸ் வேர்ல்ட் 2023' போட்­டியை இந்­தியா நடத்­த­வுள்­ளது. 71வது உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நவம் ­ப­ரில் நடை­பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், முடிவு தேதி­ இன்­னும் தெரிய­வில்லை.

இதை­யொட்டி, 'மிஸ் வேர்ல்ட்' உலக அழ­கிப்­போட்டி அமைப்­பின் தலை­வ­ரான ஜூலியா மோர்லி டெல்­லி­யில் செய்தி யாளர்களிடம் கூறுகையில், "71வது உலக அழ­கிப்­போட்­டி­யின் இறு­திப்­போட்டி இந்­தி­யா­வில் நடக்க உள்­ளது என்­பதை மிகுந்த மகிழ்ச்­சி­யு­டன் அறி­விக்­கி­றேன். ஒரு மாதம் நடக்­கும் போட்­டி­யில் 130 நாடு­க­ளின் அழ­கி­கள் கலந்துகொள்ள உள்ள னர்," எனத் தெரிவித்துள்ளார்.