தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலக்கியவனம் நிகழ்ச்சியில் 'பட்டினப்பாலை' விருந்து

1 mins read
9bcc7080-c568-4186-8496-d799c2247bb6
-

தமிழ்­மொழிப் பண்­பாட்­டுக் கழ­கம் ஓராண்­டுக்­கும் மேலாக வெற்­றி­க­ர­மாக இணை­யம் வழி நடத்தி வரும் இலக்­கி­ய­வ­னம் நிகழ்ச்சி, தன் அடுத்­த­கட்ட மைல்­கல்­லாக கடந்த மாதம் 21ஆம் தேதி மாலை 5 மணிக்கு 100 விக்­டோ­ரியா சாலை­யில் அமைந்­துள்ள தேசிய நூல­கத்தில் முதன்­மு­றை­யாக மேடை­யில் அரங்­கேறியது.

'பட்­டி­னப்­பாலை' என்ற தலைப்­பில் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கும் வகை­யில் புதுப்­பொ­லி­வு­டன் இம்­மாத இலக்­கி­ய­வனம் நிகழ்ச்சி நடந்­தே­றி­யது.

இந்­நி­கழ்ச்­சி­யின் சிறப்பு விருந்தி­ன­ராக திரு பொன் சுந்­த­ரராசு பங்­கேற்க, முனை­வர் சரோ­ஜினி செல்­லக்­கிருஷ்­ணன் அவர்­கள் தலை­மை­யேற்று நடத்­தி­னார்.

தமிழ்­மொ­ழிப் பண்­பாட்­டுக் கழ­கத்­தின் தலை­வர் திரு ஹரி­கி­ருஷ்­ணன் முத்­துச்­சாமியும் முனை­வர் ந. செல்­லக்­கி­ருஷ்­ணனும் நிகழ்ச்­சி­யில் கலந்துகொண்டு சிறப்­பித்­த­னர்.

இந்­நி­கழ்ச்­சி­யில் 'பட்­டி­னப்­பாலை' குறித்து தமிழ்­மொழிப் பண்­பாட்­டுக் கழ­கத்­தின்கீழ் இயங்­கும் பேச்­சா­ளர் மன்­றங்­களைச் சேர்ந்த நான்கு பேச்சாளர்­களும் மன்­றத்­தைச் சாராத பொதுப் பேச்­சா­ள­ர் ஒருவரும் உரை­யாற்­றி­னர்.

அத்­தோடு நிகழ்ச்­சி­யின் சிறப்­பம்­ச­மாக பட்­டி­னப்­பாலை சார்ந்த 'என் கேள்­விக்­கென்ன பதில்?' என்ற அங்­கம் பார்­வை­யா­ளர்­களை வெகு­வா­கக் கவர்ந்­தது. கேள்­விக்­குச் சரி­யான விடை­அளித்த பார்­வை­யா­ளர்­களுக்குப் பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன.

மேலும், கடந்த ஓராண்­டாக இணை­யம் வழி­யி­லான தமிழ் இலக்­கி­ய­வ­னம் நிகழ்ச்­சி­யில் கடைச்­சங்­கக் காலத்­தில் இயற்­றப்­பட்ட பதி­னெண்­மேல்­க­ணக்கு நூல்­க­ளான, பத்­துப்­பாட்டு மற்­றும் எட்­டுத்­தொகை உள்­ள­டக்­கிய நூல்­க­ளின் தலைப்­பில் பல நிகழ்ச்­சி­கள் சிறப்­பாக நடை­பெற்று வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.