ரத்த தான முன்மாதிரி சகோதரிகள்

3 mins read
bc818bfe-fa28-4f41-8fd3-988dfbb370f9
-

இன்று உலக ரத்த தான தினம். ஆண்­டு­தோ­றும் ஜூன் மாதம் 14ஆம் தேதி உலக ரத்த தான தின­மாக அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது. ரத்த தானம் செய்­யு­மாறு கூடு­த­லா­னோரை ஊக்­கு­விக்க 2004ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதற்­குப் பங்­காற்­றும் சில­ரி­டம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பேசி­யது. அவர்­களில் சகோதரிகளான நித்யா ரவீந்­தி­ரன், 18, நிலா ரவீந்­தி­ரன், 21, நித்திலா ரவீந்­தி­ரன், 19, ஆகி­யோர்.

இவர்­கள், 2020ஆம் ஆண்­டி­லி­ருந்து ரத்த தான ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லால் அந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரில் ரத்­தத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டது.

நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க நித்யா, தனது சகோ­த­ரி­க­ளு­டன் சேர்ந்து @preciouz_drops எனும் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தைத் தொடங்­கி­னார். ஆண்­டுக்கு இரு­முறை ரத்த தான நிகழ்ச்­சி­களுக்கு ஏற்­பாடு செய்ய இவர்கள் இம்­மு­யற்­சியை மேற்­கொண்­டனர்.

2020ஆம் ஆண்­டி­லி­ருந்து இவர்­கள் ஐந்து ரத்த தான நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­துள்ளனர். பிலட்­பேங்க்@ஹெச்­எஸ்ஏ, பிலட்­பேங்க்@டோபி­காட் ஆகி­ய­வற்­றில் அவை நடந்­தன.

ரத்த தானம் செய்­வோ­ரின் உடல் எடை குறைந்­தது 45 கிலோ­கி­ரா­மாக இருக்­க­வேண்­டும். நித்யாவின் உடல் எடை அதைவிடக் குறைவு.

"எனது இரண்டு மூத்த சகோ­த­ரி­க­ளும் மற்ற உற­வி­னர்­களும் ரத்த தானம் செய்­வது என்­னை­யும் பங்­காற்ற ஊக்­கு­வித்­தது. என்­னால் ரத்த தானம் செய்ய முடி­யா­விட்­டா­லும் சிறிய அள­வில் பங்­காற்­றி­யி­ருக்­கி­றேன். ரத்த தான நிகழ்ச்­சிக்­கான தள­வாடங்­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­வது, அவற்­றுக்கு ஆத­ர­வா­ளர்­களைத் திரட்­டு­வது போன்ற வழி­களில் நான் பங்­காற்­றி­யி­ருக்­கி­றேன்," என்­றார் ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாண­வி­யான நித்யா.

ரத்த தானம் செய்­வோ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யம் அதி­க­மாக இருக்­கும் என்பது போன்ற அச்­சங்­கள் சில­ரி­டையே இருந்­தன; அவை உண்­மை­யல்ல என்­ப­தைப் புரி­ய­வைத்த பிறகு சம்­பந்­தப்­பட்­டோ­ரி­டையே அச்­சம் வில­கி­ய­தா­கக் குறிப்­பிட்­டார் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் சமூக அறி­வியல் கல்­வி­யைத் தொடங்­க­வுள்ள நித்திலா.

முயற்­சிக்கு ஆத­ர­வ­ளிக்க வார­யி­றுதி நாள்­க­ளி­லும் மக்­கள் சிறிது நேரம் ஒதுக்­கு­வது மன­நிறை­வ­ளிப்­ப­தா­கக் கூறி­னார் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் யோங் லூ லின் மருத்­து­வப் பள்ளி­யில் பயி­லும் நிலா.

சிங்­கப்­பூர்வாசி­களில் 1.8 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே ரத்த தானம் செய்­ப­வர்­கள் என்று சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் ரத்த தானத் திட்­டத்­துக்­கான குழுத் தலை­வர் திரு பிர­காஷ் மேனன் கூறி­யுள்­ளார்.

ரத்த தானம் தொடர்­பான சில ஐயங்களைப் பற்­றி­யும் அவர் விவ­ரித்­தார்.

 ரத்த தானம் செய்­யும்­போது அதிக வலி இருக்­குமா? நிபு­ணர் ஒருவர் ஊசி குத்­தப்­படும் இடம் மரத்­துப்­போக மருந்து செலுத்­து­வார்.

 ரத்த தானம் செய்­தால் உட­லில் போது­மான ரத்­தம் இருக்­குமா? உட­லின் எட்­டி­லி­ருந்து 12 விழுக்­காட்டு ரத்­தம்­தான் எடுத்­துக்­கொள்­ளப்­படும்.

போது­மான நீர் அருந்­தி­னால் மூன்று நாள்­களில் உடலின் ரத்த அளவு பழைய நிலைக்குத் திரும்பலாம்.

 பச்­சைக் குத்­திக்­கொண்­டாலோ உட­லில் துளை­யிட்­டி­ருந்­தாலோ ரத்த தானம் செய்யலாமா?

சுத்­தம் செய்­யப்­பட்ட அல்­லது ஒரு­முறை மட்­டும் பயன்­ப­டுத்­தப்­படும் ஊசி­யைக் கொண்டு அவை செய்­யப்­பட்­டி­ருந்­தால் ரத்த தானம் செய்­ய­லாம். உங்களுக்குக் கவ­லை­யாக இருந்­தால் அவ்­வாறு செய்து மூன்று மாதங்­கள் கழித்து ரத்த தானம் செய்­ய­லாம்.

 அதிக ரத்தத்தை வழங்கினால் மயக்கம் வருமா? பொதுவாக ரத்த தானம் செய்வோருக்கு அதிக பாதிப்பு இருக்காது. சிலரின் உடல் சற்றே பலவீனமாக இருக்கலாம்.

இதைத் தவிர்க்க ஒருவர் ரத்த தானம் செய்வதற்கு முன்பு நன்கு ஓய்வெடுப்பதோடு போதுமான நீர் அருந்தலாம்.