குடும்பப் பிணப்புகளால் வலுவாகும் தனிநபர் மனநலம்

1 mins read
394f6019-d36c-47ef-b8f2-9751f6fec75f
-

மன­ந­லப் பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளான தனி­ந­பர்­க­ளுக்­குக் கைகொ­டுத்­து­வரும் இம்­பார்ட் அமைப்பு, இம்­முறை குடும்­பங்­களை ஒன்­றி­ணைக்­கும் நிகழ்ச்சி ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது. சமூக, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் தேசிய குடும்ப வாரத்தை ஒட்­டிய 'குடும்ப, சமூக கொண்­டாட்­டம்' என்ற இரு­நாள் நிகழ்ச்­சியை அமைப்பு நடத்­தி­யது.

இம்­மா­தம் 10, 11ஆம் தேதி­களில் நடந்­தே­றிய இந்­நி­கழ்ச்­சி­யில் 900க்கும் மேற்­பட்ட பங்­கேற்­பா­ளர்­கள் கலந்­து­கொண்­ட­னர். நார்த்­பாயிண்ட் கடைத்­தொ­கு­திக்கு அரு­கி­லுள்ள வெளிப்­புற இடத்­தில் நடைபெற்ற இந்­நி­கழ்ச்சி, "தலை­மு­றை­களை இணைத்­தல், நினை­வு­களை உரு­வாக்­கு­தல்" என்ற கருப்­பொ­ரு­ளைக் கொண்­டி­ருந்­தது.

சூ சீ மனி­த­நேய இளை­யர் நிலை­யத்­தில் ஒன்­பது சமூ­கப் பங்­கா­ளி­கள், பல்­வேறு சாவ­டி­களை அமைத்து நிகழ்ச்­சி­களை நடத்­தின. படைப்­பூக்­கம், சுறு­சு­றுப்பு, பலம் ஆகிய பண்­பு­களை வளர்க்­கும் நட­வ­டிக்­கை­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டன.

சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்­குக் கைகொ­டுக்க அமைப்­பு­களை ஒன்­றி­ணைக்­கும் நோக்­கத்­து­டன் இந்­நிகழ்ச்சி ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­தைச் சுட்­டிய திரு சண்­மு­கம், சமு­தா­யத்தை உயர்த்த முனை­யும் இம்முயற்சி பாராட்­டுக்­கு­ரி­யது என்று கூறி­னார்.

குடும்­ப­மும் நண்­பர்­களும் ஒரு­சேர வள­ரும்­போது சமூ­கங்­கள் வலு­வடை­வ­தாக நி­கழ்ச்­சி­யின் ஏற்­பாட்­டா­ளர் நர­சிம்­மன் திவா­சி­க­மணி சொன்னார்.

கி. ஜனார்த்தனன்