எழுத்தாளர் கழகம் வழங்கும் பட்டிமன்றம்

எழுத்தாளர் கழகம் வழங்கும் பட்டிமன்றம்

1 mins read

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம், 'இறை­வ­னைச் சென்­ற­டை­யச் சிறந்த வழி பக்தி செலுத்­து­வதா? தொண்டு செய்­வதா?' எனும் தலைப்­பில் அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லில் சிறப்­புப் பட்­டி­மன்­றம் நடத்­த­வுள்­ளது. இன்று மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடை­பெ­ற­வுள்­ள பட்­டி­மன்­றத்­திற்கு அனு­மதி இல­வ­சம்.

'பக்தி செலுத்­து­வதே' எனும் அணியில் முனை­வர் மன்னை க. இரா­ஜ­கோ­பா­லன், திரு­வாட்டி கலைச்­செல்வி வைத்­தி­ய­நா­தன், திரு. இராம்­கு­மார் சந்­தா­னம் ஆகி­யோர் பேசு­வர். 'தொண்டு செய்­வதே' எனும் அணியில் முனை­வர் ராஜி சீனி­வா­சன், திரு­வாட்டி கிருத்­திகா, திரு. எம். சேவ­கன் ஆகி­யோர் பேசுவர்.

நடு­வ­ரா­க எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் திரு. நா. ஆண்­டி­யப்­பன் பணி­யாற்­று­வார்.