தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெப்ப காலத்தில் சூடான பானமும் காரமும்

3 mins read
0f2547e7-8488-42e6-b2cc-95ddf730652a
-
multi-img1 of 2

வெப்பமான காலத்தில் சில வகை உணவுகளையும் பானங்களையும் எடுத்துக்கொள்வது உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது. எனினும் கோடையில் உடலைக் குளிர்ச்சியாக்கும் உணவு, பானங்கள் பற்றிய சில கட்டுக்கதைகளும் உண்டு.

குளிர்ந்த பானங்­கள்: பழச்­சாறு, குளிர்ந்த தேநீர், பால், காபி போன்றவை நாவுக்­கும் உட­லுக்­கும் இத­மாக இருப்­ப­து­போல இருக்­கும். ஆனால், உண்­மை­யில் இவை உட­லின் உள் வெப்­ப­நி­லையை பாதிக்­காது. எனி­னும் புழுக்­க­மான பரு­வ­நி­லை­யில், வியர்வை அள­வைக் குறைப்­ப­தன் மூலம் வெப்­பத்தை குறைக்க உத­வு­கின்­றன. உட­லின் நீர்ச்­சத்தை அதி­க­ரிக்­க­வும் இந்த பானங்­கள் அவ­சி­யம்.

சூடான பானங்­கள்: சூடான பானங்­கள் உடல் வெப்­பத்­தைக் குறைக்கும் என்­ப­தில்லை. அவை சூடாக உண­ர­வைக்­கும். வியர்க்­கும் விகி­தத்தை அதி­க­ரிக்­கும்.

பழங்­கள்: பழங்­கள் உட­லின் நீர்ச்சத்தின் அளவை கணி­ச­மாக அதி­க­ரிப்­ப­தோடு வெப்ப பாதிப்­பி­லி­ருந்து உட­லைப் பாது­காக்க உத­வு­கின்­றன. மாம்­ப­ழம், வாழைப்­ப­ழம், தர்­பூ­சணி, ஆரஞ்சு, திராட்சை, ஆப்­பிள், ஸ்ட்­ரா­பெர்ரி போன்ற பழங்­கள் வெப்­ப­மான காலத்­தில் உண்­ணக்­கூ­டி­யவை.

காய்­க­றி­கள்: நீர்­சத்து உள்ள காய்­க­றி­கள் உட­லில் நீர்ச்சத்தை அதி­க­ரிக்க உத­வு­கின்­றன. கீரை, வெங்­கா­யம், குடை மிள­காய், வெள்­ளரி, தக்­காளி, காளான், செலரி, முட்­டைக்­கோஸ் போன்­ற­வற்றை உட­லுக்­குத் தேவை­யான அத்­தி­யா­வ­சிய உயிர்ச்­சத்­து­கள், தாதுப்­பொ­ருள்­க­ளைக் கொண்­டுள்­ளன. எனி­னும், காய்­க­றி­கள் உட­லின் வெப்­ப­நி­லை­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் என்­பதை நிரூ­பிக்க ஆய்­வு­கள் எது­வும் இல்லை.

கார­மான உண­வு­கள்: கார­மான உண­வு­கள் உட­லின் வெப்­ப­நி­லையை சீராக்க முடி­யும் என்­பது கட்­டுக்­கதை. கார­மான உண­வைக் குறைத்து, ஆரோக்­கி­ய­மான உண­வு­களை உண்­பதே சிறந்­தது.

இள­நீர்: அத்­தி­யா­வ­சிய அமினோ அமி­லங்­கள், ஊட்­டச்­சத்­துக்­களை கொண்­டுள்ள இள­நீர் வெப்ப காலத்­தில் குடிப்­ப­தற்கு ஏற்ற சிறந்த பான­மாக இருக்­கிறது. எந்­த­வித ரசா­ய­ன­மும் இல்­லாத இயற்கை பானம். உயிர்ச்­சத்­து­கள், தாதுப்­பொ­ருள்­கள் உள்­ள­தால் வெயில் தாக்­கத்­தி­லி­ருந்து இழந்த சக்­தியை மீண்­டும் பெற முடி­யும்.

நுங்கு: வெயில் காலத்­தில் ஏற்­படும் வியர்க்­கு­ருவை வரா­மல் தடுக்­கும். சரு­மப் பிரச்­சி­னை­கள் அனைத்­துக்­கும் பனைநுங்கு நல்ல தீர்வு தரும். அம்­மை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் நுங்­குவை சாப்­பிட்­டால் உடல் குண­மா­கும்.

நீரா­கா­ரம்: பழக்­கஞ்சி, நீரா­கா­ரம் என்­பார்­கள். உட­லுக்­குப் புத்­து­ணர்ச்­சி­யும் குளிர்ச்­சி­யை­யும் கொடுக்­கும். ஆயுள் அதி­கம் உள்­ள­வர்­க­ளின் உண­வாக, நீரா­கா­ரம் சொல்­லப்­ப­டு­கிறது. வாத நோய்­கள், செரி­மா­னக் கோளாறை நீக்க உத­வு­கி­ற­து. தேநீ­ருக்கு பதி­லாக நீரா­கா­ரம் குடித்தால் உடல் அமி­லத்­தன்மை அடை­வ­தி­லி­ருந்து பாதுகாக்கப்படும்.

கூழ்: கம்­பங்­கூழ், கேப்­பக்­கூழ் போன்­றவை உட­லைக் குளிர்ச்­சி­யாக்­கும். உட­லில் தேங்­கி­யுள்ள அமி­லத்தை நீக்­கும். ஒரு­நா­ளைக்­குத் தேவை­யான புத்­து­ணர்ச்­சி­யைக் கொடுக்­கும். வெயில் கால நோய்­களில் இருந்து தப்­பிக்­க­லாம்.

துளசி விதை: ஊற­வைத்து உண்ணக்கூடிய துளசி விதை­களை, பழச்­சாறு, சர்­பத், இள­நீர் போன்ற இனிப்புச் சுவை தரும் பானங்­களில் சேர்த்­துச் சாப்­பி­ட­லாம். ஆயுர்­வே­தம், சீன மருத்­து­வத்­தில்கூட இது மருந்­தா­கிறது. உடல் எடையை குறைக்க, உடல் குளிர்ச்­சி­யாக, மலச்­சிக்­கல் தீர, நெஞ்­செ­ரிச்­சல் போன்­ற­வற்­றுக்கு இது சிறந்த தீர்வு.

பாதாம் பிசின்: பாதாம் பிசின் உட­லைக் குளிர்ச்சியாக்குகிறது.அல்­சர், அசி­டிட்டி, வயிற்று எரிச்­சல், மலச்­சிக்­கல், மூலம் போன்­ற­வற்­றின் தாக்­கத்­தைக் குறைத்து குண­மாக்க வழி­வ­குக்­கு­கிறது.

புதினா அல்­லது மஞ்­சள் போன்ற சில மூலி­கை­கள் கலந்த மோரைக் குடிப்­பது வெப்­பத்தை சமா­ளிக்க ஒரு நல்ல தேர்வு.