தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் அன்னையர் திலகம் விருது

1 mins read

தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழ­கத்­தின் அன்­னை­யர் நாள் நிகழ்ச்சி இன்று ஞாயிற்­றுக்­கிழமை மாலை 5 மணி­ய­ள­வில் உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலைய அரங்­கில் நடை­பெறுகிறது.

நிகழ்ச்சியில் 'இக்­கா­லச் சூழ­லில் பிள்­ளை­க­ளுக்­கும் அம்­மாக்­க­ளுக்­கு­மான உறவு நலிந்­துள்­ளது' என்ற தலைப்­பில் மாண­வர் பட்­டி­மன்­ற­மும் இடம்பெறும்.

நலிந்­துள்­ளது என்ற அணி­யில் செல்வன் சஞ்­ஜெய் ராஜ­கோ­பா­லன், செல்வன் கவின் சசி­கு­மார், செல்வி லக்­ஷனா பால­கங்­கா­தர தில­கர் ஆகி­யோ­ரும் நலி­ய­வில்லை என்ற அணி­யில் செல்வன் ராகுல் சங்­கர், செல்வன் முகம்­மது அர்­ஷாத், கிறிஸ்­ட­பெல் கிரேஸ் ஆகி­யோ­ரும் வாதி­டு­வார்­கள். நடு­வ­ராக திரு யூசுப் ராவுத்­தர் ரஜித் பங்­கேற்­கி­றார்.

தொடர்ந்து அன்­னை­யர் தில­கம் விருது வழங்கப்­படும். நிகழ்ச்­சிக்கு அனு­மதி இல­வ­சம். மாலை 4 மணிக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.