நீரிழிவைக் கட்டுப்படுத்த சூப், பச்சடி

நீரிழிவு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கி, ஒருவரின் ஆயுளை குறைத்து விடக்கூடிய குணப்படுத்த இயலாத ஒரு நோயாகும்.

பரம்பரை, உடலுழைப்பு, வியர்வை வெளிவராத தன்மை, முறையற்ற உணவுப்பழக்கம், மதுப்பழக்கம், புகைப் பழக்கம், போதைப்பழக்கம், உணவில் அதிக காரம், மாவு, கொழுப்பைச் சேர்த்தல் போன்றவை நீரிழிவுக்கான காரணங்களாக உள்ளன. உடலைக் கெடுக்கும் பல்வேறு காரணிகளின் ஒட்டுமொத்த காரணமாக சர்க்கரைநோய் ஏற்படுகிறது என்று கூறலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பல வழிகள் உண்டு. மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.

உணவு, வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்தால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம் என்பதைப் பல்வேறு ஆய்வுகளும் காட்டுகின்றன.

உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் காய்கறி, கீரைகள்

வாழைப்பூ, வாழைப்பிஞ்சு, வாழைத்தண்டு, சாம்பல் பூசணி, முட்டைக்கோஸ், காலிபிளவர், வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய்,கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப்பிஞ்சு ஆகிய காய்கறிகளும் முருங்கைக் கீரை, அகத்தி, பொன்னாங்கண்ணி, சிறுகீரை, அரைக்கீரை,வல்லாரை, தூதுவளை, முசுமுசுக்கை, துத்தி, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, கொத்துமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரை வகைகளும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.

இந்தக் காய்கறிகளையும் கீரைகளையும் உணவில் அன்றாடம் சேர்த்து வருவது உடல்நலம் மேம்பட உதவும்.

அன்றாடம் ஒரு பச்சடி

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள் அனைத்தையும் பச்சடியாகச் செய்து உண்ணலாம்.

உதாரணமாக, புடலங்காய் பச்சடி. முதலில் புடலங்காயை சிறிதாக அரிந்து கொள்ளுங்கள். சாம்பார் வெங்காயம் இரண்டு, பச்சைமிளகாய் இரண்டு, கொத்துமல்லி இலை தேவையான அளவு, இவற்றையும் சிறிதாக அரிந்து புடலங்காயுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஒரு எலுமிச்சம்பழம் முழுவதும் பிழிந்து, தேவையாள அளவு தயிர் சேர்த்து, சிறிது உப்புப் போட்டு நன்றாகப் பிசையுங்கள். பச்சடி தயாராகிவிட்டது.

இதுபோல் பல காய்களையும் பச்சடியாகச் செய்யலாம். பச்சையாக உண்ண முடியாதவர்கள் காயை லேசாக நீராவியில் வேகவைத்து பச்சடி செய்யலாம். எலுமிச்சம் சேர்க்காமலும் தயிர் மட்டும் சேர்த்து உண்ணலாம். காலை உணவில் அன்றாடம் ஒரு பச்சடி சேர்த்துக்கொள்ளுங்கள்.

சூப்

நீரிழிவை கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தையும் சூப் செய்து அருந்தலாம்.

எடுத்துக்காட்டாக, காம்பு நீக்கிய முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, பாத்திரத்தில் இடுங்கள். ஐந்து மிளகு, சிறிது சீரகம் (பொடிக்கவும்) இரண்டு பல் பூண்டு, இரண்டு சாம்பார் வெங்காயம், தேவைப்பட்டால் ஒரு தக்காளி, இவற்றை அரிந்து கீரையுடன் போட்டு, இரண்டு குவளை நீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவைக்கவும், பின் வடிகட்டி ஒரு குவளை அளவு சூப் காலையோ அல்லது மாலையோ சாப்பிடவும்.

இதுபோல் எல்லாக் கீரைகளையும் சூப் செய்து குடிக்கலாம். உணவு வேளைகளுக்கு இடையே சூப் குடிப்பது பசியைத் தூண்டும். மேலும் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க சிறிய அளவு உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதாவது உணவின் அளவைக் குறைத்து மூன்று வேளைக்குப் பதில், ஐந்து வேளையாக உண்ண வேண்டும்.

பாகற்காய் சூப்: சிறிதாக அரிந்த இரண்டு பாகற்காய், சாம்பார் வெங்காயம் இரண்டு, பூண்டு, மிளகு, சீரகம், வெந்தயம் தேவையான அளவு பொடித்துச் சேர்த்து, ஒரு எலுமிச்சைச் சாறு விட்டு, சிறிது மஞ்சளும், உப்பும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். சூப் தயார். வாரம் இரண்டு முறை அவசியம் சாப்பிட வேண்டும்.

சேப்பங்கிழங்கு இலைகளை அரைத்து அதன் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். உணவு செரிமானமும் மேம்படும். இதய நோய்கள் ஏற்படுவதை தடுப்பது முதல் ரத்த அழுத்தம், கண் சார்ந்த நோய்கள் குணமடையும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பழங்கள்

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் பழங்களைத் தவிர்க்கிறார்கள். எனினும், சில பழங்களை அளவோடு உண்பது நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவும்.

விளாம்பழம் - 50 கிராம், அத்திப்பழம், பேரீச்சம் பழம் 3, நெல்லிக்காய், அரைநெல்லிக்காய் - 100 கிராம், நாவல் பழம், மலைவாழை - 30 கிராம், அன்னாசிப்பழம் - 40 கிராம், மாதுளம் பழம் 90-கிராம், எலுமிச்சை - 1, ஆப்பிள் - 75 கிராம், பப்பாளிப்பழம் - 75 கிராம், கொய்யாப் பழம் - 75 கிராம், திராட்சை - 100 கிராம் என்ற அளவில் அன்றாடம் வெவ்வேறு பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சாறு வகைகள்

எலுமிச்சைச் சாறு, இளநீர், வாழைத்தண்டு சாறு,நெல்லிக்காய் சாறு ஆகியவற்றை 200 மில்லி லிட்டர் அருந்தலாம். அருகம்புல் சாறு, கொத்துமல்லி சாறு, கறிவேப்பில்லை சாறு ஆகியவற்றை 100 மில்லி லிட்டர் அருந்தலாம். இதில் ஏதேனும் ஒன்றை மட்டும் அன்றாடம் அருந்தி வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சர்க்கரை, குளுக்கோஸ், சர்க்கரை சார்ந்த இனிப்புப் பலகாரங்கள், வெல்லம், தேன் போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

மாவுச்சத்து நிறைந்த உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றையும் மாம்பழம், இனிப்புச் சுவை அதிகமுள்ள வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா பழம் போன்ற பழங்களையும் தவிர்க்க வேண்டும். கேரட், பீட்ரூட்டை சிறு அளவில் மாதம் இருமுறை சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 20 கிராம் எண்ணெய்க்கு மேல் உணவில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

முறையான உணவோடு. தேவையான அளவு உடற்பயிற்சியும் செய்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நீரிழிவு நோய் மிகாமல், அதன் தாக்கத்தை அதிகப்படுத்தாமல் தடுக்கின்றன.  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!