மத்திய கலை நூலகம் திறக்கப்படுவதற்கு முன்னரே எஸ்பிளனேட் நூலகத்தின் புத்தகங்கள், கலை படைப்புகள் போன்றவற்றை இணையம் வழி பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதுபோக திரைப்படங்களை திரையிடுவது, இசை நிகழ்ச்சி நடத்துவது ஆகிய நடவடிக்கைகளை தேசிய நூலகத்திற்குச் சொந்தமான அந்த கட்டடத்தில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய மத்திய கலை நூலகம் 100 விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகக் கட்டடத்திலேயே உள்ளது.
அது 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய கலை நூலகம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டது.
புதிய மத்திய கலை நூலகத்தில் பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் கூடுதல் வசதிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய நூலக வாரியத்தின் திட்டங்களில் ஒன்றான ‘தி பிக் பிக்சர்’ திட்டமும் நூலகக் கட்டடத்திலேயே நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
‘தி பிக் பிக்சர்’ திட்டம் என்பது நூலகத்தில் உள்ள திரைப்படங்களை மாதம் மாதம் பொதுமக்களுக்கு திரையிடும் நடவடிக்கையாகும்.
எஸ்பிளனேட் நூலகத்தில் உள்ள திரைப்பட ‘டிவிடி’க்களை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மக்கள் இரவல் பெறலாம்.
டிஸ்னியின் ‘தி ரோடு டு எல் டோராடோ’ திரைப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு, 5ஆம் தளத்தில் உள்ள இமேஜினேசன் அறையில் திரையிடப்படுகிறது.
முதல் தளத்தில் சில இசை நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கிறது.
புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க இம்மாதிரியான முயற்சிகளில் நூலக வாரியம் ஈடுபடுகிறது.
1951ஆம் ஆண்டின் சாப்பல் கிராண்ட் பியானோ கருவியும் தேசிய நூலகக் கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ளது.
பியானோ தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் வாசித்தும் பார்க்கலாம்.