வளர்தமிழ் இயக்கமும் கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்யும் தமிழ்மொழி விழா 2024ன் ஒரு பகுதியாக, தமிழ்ச் செய்தியாளர் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தகவல் தொழில்நுட்பச் சமுதாயம், சிங்கப்பூர் அமைப்பு இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பாலர் பள்ளி மாணவர்கள், தொடக்கப் பள்ளி மாணவர்கள், உயர்நிலைப் பள்ளி-தொடக்கக் கல்லூரி- தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள், பலதுறைத் தொழிற்கல்லூரி-பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்-தொழிலாளர்கள் என ஐந்து பிரிவுகளாக நடத்தப்படும் இந்தப் போட்டியில், ஆர்வமுள்ளவர்கள் குழுவாகப் பங்குபெறலாம்.
‘ஆற்றல்’ என்ற கருப்பொருளிலான இப்போட்டியில், சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரைச் சார்ந்திருப்பவர்கள் ஆகியோர் பங்கேற்கலாம்.
ஒரு குழுவில் அதே பிரிவைச் சார்ந்த குறைந்தது மூவர் இடம்பெற வேண்டும். குழுத்தலைவர் கேள்விகளைக் கேட்கும் நிருபராகப் பங்காற்ற வேண்டும். தமிழர்கள் அல்லாதோரைச் சேர்த்துக் கொள்ளும் குழுக்களுக்குக் கூடுதல் புள்ளிகள் வழங்கப்படலாம்.
போட்டிக்கு, https://forms.gle/FDbHU1R9uM55qc7k8 மூலமாகப் பதிவு செய்ய இறுதி நாள் மார்ச் 15ஆம் தேதி.
போட்டியில் எத்தகையை கேள்விகளைக் கேட்கலாம் என்பது குறித்த விவரங்களுக்கு www.TamilsITSociety.sg/tjc2014 எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.
போட்டியின் இறுதிச்சுற்று ஏப்ரல் 28ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை உட்லண்ட்ஸ் நூலகத்தில் நடைபெறும்.
வெற்றியாளர்களுக்கு விருதுகள், பற்றுச்சீட்டுகள், சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படும். ஆகச் சிறந்தக் குழுவிற்கு ஆனந்தக்கண்ணன் வெற்றிக்கேடயம் அளிக்கப்படும்.
மேல் விவரங்களுக்கு ஏற்பாட்டுக்குழுத் தலைவர் முனைவர் மா.கோவை 89495929 என்ற தொடர்பு எண்ணில் அழைக்கலாம்.