ஆஸ்திரேலியாவில் கால்பதித்த முதல் இந்திய நகைக்கடை

சிட்னி: புகழ்பெற்ற இந்திய நகைக்கடையான மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கால் பதித்துள்ளது.

அங்குள்ள லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அமைந்துள்ள ஹாரிஸ் பார்க் எனுமிடத்தில் அது தன் கிளையைத் திறந்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற விளையாட்டாளர் பிரெட் லீ, சிட்னி கிளையைத் திறந்துவைத்தார்.

இந்தக் கடை சிட்னி நகரில் செயல்படும் ஆகப் பெரிய நகைக்கடை எனக் கூறப்படுகிறது.

இதில் 18K, 22K தங்க, வைர நகைகளுடன் இதர அரியவகை ரத்தினக் கற்களையும் வாங்கலாம்.

வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப நகைகளை வடிவமைத்துத் தருகிறது இக்கடை.

உலகெங்கும் 340 கடைகளை நடத்தி வருகிறது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்.

ஆஸ்திரேலியாவையும் சேர்த்து உலகின் 13 நாடுகளில் கிளை பரப்பியுள்ளது இந்நிறுவனம்.

இந்தியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கத்தார், குவைத், ஓமான், சவூதி அரேபியா, பஹ்ரேன், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் ஏற்கெனவே அதன் கிளைகள் செயல்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!