உலகக் கவிதை நாள்: “கற்றனைத் தூறும்” சிறப்பு நிகழ்ச்சி

சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்வலர்கள் ஆகியோருடன் கவிமாலை அமைப்பு ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று மாதாந்திரச் சந்திப்பை நடத்திவருகிறது.  

கவிமாலையின் 286ஆவது சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 23ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தேசிய நூலக வாரியத்தின் 16ஆம் தளத்தில் உள்ள ‘தி பாட்’ அறையில் நடைபெறவிருக்கிறது.   

உலகக் கவிதை நாளை முன்னிட்டு, ‘கற்றனைத் தூறும்’ எனும் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

கவிஞர்கள் ஏதேனும் ஒரு கவிதை நூலிலிருந்து கவிதையை வாசிப்பதுடன் அக்கவிதை பற்றிய தங்கள் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வார்கள். இதில் கலந்துகொள்பவர்கள் அக்கவிதை நூலைக் கொண்டு வரவேண்டும். கவிஞர்கள் கொண்டுவரும் நூலை வாசிக்க விரும்புபவர்களுடன் அந்நூலைப் பரிமாற்றிக் கொள்ளலாம்.

கவிதை வாசிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

செவியின்ப சங்கீதா நிகழ்ச்சியின் நெறியாளராக இருப்பார். 

“விரல் தொடாத மழை” எனும் தலைப்பில் இம்மாதப் போட்டியில் கவிதை வாசித்தல், கவிதை விமர்சனம், பரிசளிப்பு ஆகியவை இடம்பெறவிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!