ஜோயாலுக்காஸ் நகைக் கடை அறிவித்துள்ள சலுகை விற்பனை

லிட்டில் இந்தியாவில் உள்ள பிரபல நகை விற்பனைக் கடையான ‘ஜோயாலுக்காஸ்’ கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று, பெரும் நகை விற்பனைச் சலுகையை அறிமுகம் செய்தது.

சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் உள்ளிட்ட பத்து நாடுகளில், பல நேர்த்தியான, குறிப்பிட்ட நகைகளுக்கு, செய்கூலியில் 50 விழுக்காடு வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கநகை மட்டுமின்றி வைரம், போல்கி போன்ற இதர விலையுயர்ந்த நகைகளுக்கும் இச்சலுகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஊடகத் துறையின் பிரபலமும், தொகுப்பாளரும், ‘மஸ்தி மீடியா நெட்வொர்க் நிறுவனருமான ரேணுகா அரோரா பகத், “கண்ணைப் பறிக்கும் அழகிய நகைகள், கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

ஜோயாலுக்காஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் பால் ஆலுக்காஸ், வாடிக்கையாளர்களுக்கு புதிய நவீன வடிவமைப்புகளையும், இணையற்ற சேவையையும் வழங்க அந்நிறுவனம் தொடர்ந்து உறுதி செய்யும் என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!